search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் நாளை கொடியேற்றம்
    X

    ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் நாளை கொடியேற்றம்

    • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் நாளை கொடியேற்றம் நடக்கிறது.
    • வருகிற 12-ந்தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்ற னர். இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்கியது.

    உலமாக்கள், தர்கா ஹக்தார்கள் இணைந்து தர்கா மண்டபத்தில் ஓதுகிறார்கள். மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் ஆலிம் உலக மக்களின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு பிராத்தனை நடத்துகிறார். இன்று (30-ந்தேதி) மாலையில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்படுகிறது.

    நாளை (31-ந்தேதி) ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 3.30 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்படுகிறது. முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்து மாலை 6 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்படுகிறது.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூன் 12-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா தொடங்குகிறது. 13-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந்தேதி கொடி இறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் எஸ்.முகம்மது பாக்கிர் சுல்தான் தலைமையில் செயலாளர் எஸ். செய்யது சிராஜ்தீன், துணைத்தலைவர் ஜெ.சாதிக்பாட்சா மற்றும் ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×