என் மலர்
நாமக்கல்
- ஆரோக்கிய வாழ்வுக்காக அவர்களுக்கு உடற்பயிற்சி, தியானம், காயகல்பம் மற்றும் அகத்தாய்வு பயிற்சிகள் தொடர்ந்து 5 மாதங்கள இலவசமாக கற்று கொடுக்கப்பட்டது.
- இதன் நிறைவு விழா தனியார் மண்டபத்தில் நடந்தது. விழாவில், கிராம சேவை திட்டத்தின் இயக்குனர் முருகானந்தம் கலந்துகொண்டு பேசினார்.
பள்ளிபாளையம்:
உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவைக் திட்டத்தில், பள்ளிபாளையம் அருகே விளாங்காட்டூர் கிராமத்தை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து,
அங்குள்ள பொதுமக்களின் நோயற்ற, ஆரோக்கிய வாழ்வுக்காக அவர்களுக்கு உடற்பயிற்சி, தியானம், காயகல்பம் மற்றும் அகத்தாய்வு பயிற்சிகள் தொடர்ந்து 5 மாதங்கள இலவசமாக கற்று கொடுக்கப்பட்டது.
இதன் நிறைவு விழா தனியார் மண்டபத்தில் நடந்தது. விழாவில், கிராம சேவை திட்டத்தின் இயக்குனர் முருகானந்தம் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், மற்றவர்களுக்கு துன்பம் கொடுக்காமல் வாழ வேண்டும். ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி, புரிந்து கொண்டு, விட்டு கொடுத்து வாழ வேண்டும்.
இன்றைக்கு இருக்கின்ற மாதிரி நாளை இருக்காது, சூழ்நிலைகள் மாறி விடும். ஆனால் நாம் ஒரே மனநிலையில் வாழ வேண்டும்.
உடல் உறுப்புகள் சரியாக செயல்பட வேண்டும். மனதில் கவலை இல்லாமல் வாழ வேண்டும். மனம் அமைதியாக இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
இவையெல்லாம் பெற உடற்பயிற்சி, தவம் செய்ய வேண்டும். இதை தினமும் செய்தால், ஆரோக்கியம் நிலைத்திருக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மனவளக்கலையின் ஈரோடு மண்டல தலைவர் வெங்கடாசலம், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளிபாளையம் அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.
- குமாரபாளையம் பேருந்து நிலையம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
- குமாரபாளையம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்தார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பேருந்து நிலையம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தின் மேற்கூரை மற்றும் பேருந்து நிலைய கடைகள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதை அடுத்து குமாரபாளையத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் ஆலோசனையின் பேரில், நகர மன்ற தலைவர் விஜய்கண்ணன், தமிழக அரசுக்கு நகராட்சி சார்பில் விரிவான திட்ட அறிக்கை மற்றும் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்தின் மாதிரி வரைபடத்தையும் தயார் செய்து அனுப்பி வைத்தார்.
புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசிடம் நகர் மன்ற தலைவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையில் குமாரபாளையம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்தார்.
குமாரபாளையத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
- இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த ஊராட்சி தலைவர்களுக்கான விருதுகளை வழங்கினார்கள்.
பரமத்தி வேலூர்:
தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த ஊராட்சி தலைவர்களுக்கான விருதுகளை வழங்கினார்கள்.
இதில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கபிலக்குறிச்சி ஊராட்சி தலைவர் வடிவேல், பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மாணிக்கநத்தம் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி, கூடச்சேரி ஊராட்சி தலைவர் சுப்பிரமணி, மேல்சாத்தம்பூர் ஊராட்சி தலைவர் யோகாம்பிகா ஆகியோருக்கும் தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக விருதுகள் வழங்கப்பட்டன.
- கோடையில் கோழிகள் அதிக அளவில் தீவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உற்பத்தி 15 சதவீதம் சரிந்துள்ளது.
- கடந்த மார்ச் 1-ந்தேதி 440 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து, 16-ந் தேதி 460 காசுகள் ஆனது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் 8 கோடி கோழிகள் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டலம் நிர்ணயம் செய்கிறது. இந்த விலை நிர்ணயம் வாரத்திற்கு 3 நாட்கள் செய்யப்படுகிறது.
கடந்த மார்ச் 1-ந்தேதி 440 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து, 16-ந் தேதி 460 காசுகள் ஆனது. தொடர்ந்து 25-ந் தேதி 10 காசு குறைந்து 450 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. 2 வாரத்துக்கு பின் நேற்று 30 காசு குறைந்தது. இதனால் முட்டை விலை 420 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணை தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-
கோடையில் கோழிகள் அதிக அளவில் தீவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உற்பத்தி 15 சதவீதம் சரிந்துள்ளது. மேலும் ஹைதராபாத் மண்டலத்தில் கொள்முதல் விலை சரிந்துள்ளது. பெங்களூர், சென்னை பகுதிகளுக்கு ஹைதராபாத் முட்டைகள் வரத்து உள்ளன.
நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலையை குறைக்காவிட்டால் விற்பனையின்றி முட்டைகள் பண்ணையிலேயே தேக்கமடைந்து விடும். அதனால் நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலை 30 காசு குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மோகனூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு மொபட்டில் சென்றார். அவருடன் உறவினர்கள் ஆகியோரும் சென்றனர்.
- சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் சரவணன் சென்ற மொபட் மீது மோதியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). இவர் சிமெண்ட் தொட்டி, சிமெண்ட் குழாய், சிமெண்ட் தூண்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்று வந்தார்.
குலதெய்வம் கோவில்
இன்று காலையில், சரவணன் மோகனூரில் உள்ள குலதெய்வம் கோவி லுக்கு மொபட்டில் சென்றார். அவருடன் உறவி னரான முத்து (39), இவரது மகன் சாய்பாலமித்திரன் (4) ஆகியோரும் சென்றனர்.
சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் சரவணன் சென்ற மொபட் மீது மோதியது.
2 பேர் பலி
இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் பலத்த காயம் அடைந்த முத்து மற்றும் அவரது குழந்தை இருவரும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், சாய்பால மித்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணை
உயிரிழந்த சரவணனின் உடல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும், சாய் பாலமித்திரனின் உடல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குலதெய்வம் கோவிலுக்கு சென்றபோது, விபத்துக்குள்ளாகி குழந்தை உள்பட 2 பேர் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குமாரபாளையம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முதலியார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). விசைத்தறி உரிமையாளர். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களுடைய மகள் சிவ நந்தினி (17), மகன் அனிருத் (15). இதில் சிவ நந்தினி குமாரபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது தான் பொதுத்தேர்வு எழுதி முடித்து உள்ளார். அனிருத் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஈரோடு மாவட்டம் அந்தி யூரில் உள்ள குலதெய்வ கோவிலான பத்ரகாளி யம்மன் கோவிலுக்கு கந்தசாமி, நிர்மலா, சிவ நந்தினி ஆகியோர் மோட்டார்சைக்கிளில் நேற்று சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் மோட்டார்சைக்கி ளில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பவானியை அடுத்த காடையாம்பட்டி அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
தந்தை- மகள் சாவு
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கந்தசாமி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். நிர்மலா, சிவ நந்தினி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நிர்மலாவும், சிவ நந்தினியும் கொண்டு செல்லப்பட்டனர். இதில் செல்லும் வழியிலேயே சிவ நந்தினி பரிதாபமாக இறந்தார்.
நிர்மலா ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இறந்த கந்தசாமி, சிவ நந்தினி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுஉள்ளன. கோவிலில் காவடி ஊர்வலத்தில் பங்கேற்றதால் கந்தசாமி களைப்புடன் காணப்பட்டதாக தெரிகிறது. அந்தியூரில் இருந்து திரும்பும் போது தனக்கு தூக்கம் வருவதாக மனைவியிடம் தெரி வித்துள்ளார். இதனால் வழி யில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி 3 பேரும் டீ குடித்துவிட்டு பின்னர் மீண்டும் புறப்பட்டனர்.
எனினும் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் கந்தசாமி இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே தூங்கியதால் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி உயிரிழந்தது விசா ரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
- உரம்பூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.
- அப்போது நிலை தடுமாறி பாலத்திற்கு கீழ் இருந்த தண்ணீரில் விழுந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 43), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இவர் கபிலர்மலையில் இருந்து உரம்பூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலத்தில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி பாலத்திற்கு கீழ் இருந்த தண்ணீரில் விழுந்தார்.
இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
- வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.97லட்சத்து 2 ஆயிரத்து 764-க்கு ஏலம் போனது.
பரமத்திவேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 66.43 1/2 குவிண்டால் எடை கொண்ட 19,749 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.16-க்கும், சராசரி விலையாக ரூ.24.89-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 202-க்கு தேங்காய் விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 253.74 குவிண்டால் எடை கொண்ட 509 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.76.60-க்கும், சராசரி விலையாக ரூ.83.19-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.06-க்கும், சராசரி விலையாக ரூ.74.35-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 31ஆயிரத்து 579-க்கு விற்பனையானது.
எள்
அதேபோல் 364.77 குவிண்டால் எடை கொண்ட 487 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.165.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.145.99-க்கும், சராசரி விலையாக ரூ.160.99-க்கும், வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.167.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.156.99-க்கும், சராசரி விலையாக ரூ.157.99-க்கும் என மொத்தம் ரூ.55 லட்சத்து 91 ஆயிரத்து 959-க்கு விற்பனையானது.
நிலக்கடலை காய்
அதேபோல் 263.17 குவிண்டால் எடை கொண்ட 780 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.16-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.67.29-க்கும், சராசரி விலையாக ரூ.80.39-க்கும் என மொத்தம் ரூ.20 லட்சத்து 29 ஆயிரத்து 24-க்கு நிலக்கடலை காய் விற்பனையானது.
இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.97லட்சத்து 2 ஆயிரத்து 764-க்கு ஏலம் போனது.
- தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.
- இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழைய பாளையத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர்.
இக்கோவிலை புதுப்பித்து, திருப்பணிகள் செய்து, ராஜகோபுரம் அமைத்து கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதை ஏற்று, தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின், திருப்பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர், கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
- குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, தங்களது அமைப்பின் நிதியுதவி மூலம் இலவசமாக வழங்கினர்.
- மாணவர்களும், ஆசிரியர்களும் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.3,05,998 மதிப்புள்ள கணினிகள், புரொஜெக்டர், புரொஜெக்டர் திரை, மோடம் மற்றும் பிரிண்டர் ஆகியவற்றை, கோவை, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, தங்களது அமைப்பின் நிதியுதவி மூலம் இலவசமாக வழங்கினர்.
இந்த தொழில்நுட்ப சாதனங்களை பள்ளியின் தலைமை ஆசிரியை லட்சுமி, முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர் தளபதி சுப்பிரமணியன், குப்பிரிக்கா பாளையம் ஊராட்சி தலைவர் அரசு என்கிற பழனிசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மேலும் பள்ளி மாணவர்கள் கணினியின் அடிப்படைகளை எளிதில் கற்றுக்கொள்வதற்காக கற்போம் கணினி என்ற புத்தகத்தையும் தமிழில் தொகுத்து வழங்கியுள்ளனர்.
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் இந்த முயற்சியை, அப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.
- நிலுவை யில் உள்ள மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல்:
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், நிலுவை யில் உள்ள மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் துறையின் கீழ் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் கிராமம் தோறும் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில், வருவாய் கிராமத்திற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் குழு முகா மிட்டு, மனுக்கள் மீது தீர்வு காண திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த வகையில், நாமக்கல் வட்டம் புதுச்சத்தி ரம் ஊராட்சி ஒன்றியம், மின்னாம்பள்ளி ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் தலை மையில் மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ரேசன் கார்டு சம்மந்தமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.
- சமூக இடைவெளியை கடைபி டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் கார்டுதாரர்க ளுக்கான குறைதீர் கூட்டம் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்ப கல் 1 மணி வரை, நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்த மங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபா ளையம் தாலுகா வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப் பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த குறைதீர் முகாமில் கலந்து கொண்டு, ரேசன் கார்டு சம்மந்தமான கோரிக்கை களுக்கு தீர்வு காணலாம். மேலும், பொது விநியோ கத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளும், பொது மக்கள் அனைவரும், கொரோனா முன்னெச்ச ரிக்கை அறிவு ரைகளை தவறாமல் கடை பிடித்து, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபி டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
- ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் குமாரை கைது செய்தனர்.
- நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு மேற்கு தெருவை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மகன் முருகேசன் (வயது 60). அதே பகுதியைச் சேர்ந்த இவரது தம்பி பாதர்.
முருகேசன் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். முருகேசனுக்கும் அவரது தம்பி பாதருக்கும் இடையே கடந்த 5 ஆண்டாக நிலம் பிரிப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை விவசாயி பாதரின் வீட்டின் அருகே முருகேசன் நின்று கொண்டிருந்தார். அப்போது பாதரின் மகன் தினேஷ் குமார் (31), பெரியப்பா முருகேசனிடம், நிலத்தை எப்போது பிரித்துக் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், அங்கிருந்த கட்டையால் முருகேசனை பயங்கரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த முருகேசன் சரிந்து விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1 மணி அளவில் முருகேசன் இறந்தார்.
இதுபற்றி ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் குமாரை கைது செய்தனர்.
நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






