என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடியை சேர்ந்தவர் மாமணி (வயது 45). இவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
மாமணிக்கும், வளர்மதி என்ற பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அவர்களுக்கு மதுமதி (12) என்ற மகளும், கலைமணி (9) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் தேத்தாக்குடியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
மாமணி விடுமுறை கிடைக்கும் போது தேத்தாக்குடி சென்று அங்கு வசிக்கும் தனது பெற்றோருக்கு உதவிகள் செய்வது வழக்கம். கடந்த வாரம் மாமணியின் தாயின் உடல் நிலை மோசமடைந்தது. அவரை கவனித்து வந்த மாமணி திடீரென விஷம் குடித்து விட்டார். அவரை உறவினர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமணி தற்கொலைக்கு அவர் தாயை கவனிக்க உயர் அதிகாரிகள் விடுமுறை அளிக்காத மன உளைச்சல் காரணமா? என்று விசரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்பிடி கருவிகளை அபகரித்து செல்வது, சிறைபிடித்து சென்று சிறையில் அடைப்பது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நாகை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை அக்கரைப்பேட்டை டாட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 42). மீனவர்.
இவருக்கு சொந்தமான பைபர் படகில் சீனிவாசன் மற்றும் அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி(25), கோபாலகிருஷ்ணன்(25), ஆனந்தபாபு(23), நிலவரசன் (21), வீரசெல்வன்(30), பிருதிவிராஜன்(20) ஆகிய 7 பேரும் கடந்த 7-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டை கடுவையாற்றங்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நேற்று மாலை வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20 நாட்டிங்கல் கடல் மைல் தொலைவில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய ரக கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் நாகை மீனவர்களின் படகில் ஏறி எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி சீனிவாசன், கந்தசாமி, கோபாலகிருஷ்ணன், ஆனந்தபாபு, நிலவரசன், வீரசெல்வன், பிருதிவிராஜன் ஆகிய 7 பேரையும் சிறைபிடித்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் திரிகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Fishermen
குத்தாலம் அருகே திருவாவடுதுறை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் மகன் சரவணன் (வயது 29). சரக்கு ஆட்டோ டிரைவர். கடந்த 3 மாதங்களாக சரவணன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமாகவே சரவணன், பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சரவணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை அருகே பாப்பாக்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் முன்னிலை வகித்தார். ஊர்வக்காவல்படை மண்டல தளபதி ஆனந்த் வரவேற்றார். விழிப்புணர்வு ஊர்வலத்தை தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்தப்படி போலீசார் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலம் முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது. இதை தொடர்ந்து கல்லூரியில் நடைபெற்ற சாலை விழிப்புணர்வு முகாமில் டி.ஐ.ஜி. லோகநாதன் பேசியதாவது:-
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தான் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. இயற்கை பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விட சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம். அவ்வாறு ஏற்படும் உயிரிழப்புகளில் 40 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இறக்கின்றனர். அதில் பெரும்பாலும் தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சீட் பெல்ட் அணிந்து 4 சக்கர வாகனங்களை ஓட்டவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே செங்குழி கீழதெருவை சேர்ந்த கண்ணயைன் என்பவர் மகள் வசந்தி (வயது 32) இவரும், அதே பகுதியை சேர்ந்த வீரமணி மகள் ஐஸ்வர்யா என்பவரும் அத்திகாடு என்ற இடத்தில் செயல்படும் ஒரு கடையில் டைலராக வேலைபார்த்து வந்தனர்.
இந்த நிலையில் வசந்தியையும், ஐஸ்வர்யாவையும திடீரென நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அதே கடைக்கு ஐஸ்வர்யா மட்டும் மீண்டும் வேலைக்கு செல்வது வசந்திக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் ஐஸ்வர்யாவிடம் கேட்ட போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி ஐஸ்வர்யா தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி, அவரது மனைவி தவமணி மகன் சுரேந்தர் ஆகியோர் வசந் வீட்டுக்கு சென்று தகராறு செய்து அவரை கட்டையால் அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வசந்தி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றிய புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து வீரமணி, சுரேந்தர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். #tamilnews
பின்பு வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்திலும் நீராடி சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். ரிஷப வாகனத்தில் சந்திசேகர சுவாமி அலங்கரிக்கப்பட்டு மேல் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அருள்பாலித்தார். பின்பு திரிபங்கி வடிவிலான துர்க்கை அம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் மற்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.ஸ்ரீகாந்த் தலைமையில் 500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தினர்.
அதேபோல் பூம்புகார் கடலிலும், காவிரி கடலில் கலக்கும் சங்கம துறையிலும் நீராடி கடற்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர் ரெத்தினபூரணேஸ்வரர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதேபோல் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி உத்திர பாத தரிசனம் செய்தனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறில் காசிக்கு வீசம் கூட என்ற பெயர் பெற்ற காவிரி புஷ்ய மண்டப படித்துறையிலும் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அங்கு வழியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் காய்கறிகள், பழங்கள் வாங்கி சென்று காவிரியில் நீராடி புஷ்ய மண்டபத்தில் உள்ள புரோகிதர்களிடம் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
பின்னர் பிண்டத்தை காவிரியில் விட்டு வணங்கி அங்கிருந்து அய்யாறப்பர் கோவிலின் தெற்கு வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டார் சன்னதியின் வாசலில் குங்கிலியம் பொடி போட்டு வணங்கி சென்று ஆட்கொண்டாருக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் கோவிலின் உள்ளே அய்யாறப்பர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்திருந்தனர்.
இதேபோல் கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் காலை முதல் பக்தர்கள் குளத்தின் 4 கரைகளிலும் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர். பின்னர் குளத்தில் கரையில் அமைந்துள்ள சோடச லிங்க சன்னதிகளில் சென்று வழிபட்டனர். பின்னர் அருகில் உள்ள சிவன் கோவில்களில் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
இதில் 7 வயது சிறுமியான அவரது மூத்த மகள் அருகில் உள்ள மளிகை கடைக்கு சாக்லேட் வாங்க சென்றார். அப்போது கடைக்காரர் வேதராசு (வயது 50). சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அழுது கொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி இதுகுறித்து தனது தந்தையிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வர்ஜினியா வழக்குப்பதிவு செய்து மளிகை கடைக்காரர் வேதராசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் சரகம் இளந்தோப்பு பகுதி நடராஜபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். விவசாயி. இவரது மனைவி வனிதா. இவர்களது ஒரே மகன் விஷ்ணு(வயது5).
சிறுவன் விஷ்ணு அப்பகுதியில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான். இன்று பள்ளியின் ஆண்டு விழாவையொட்டி காலை 8.30 மணியளவில் பள்ளி வேனில் தங்கள் மகன் விஷ்ணுவை பெற்றோர் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.இதையடுத்து மற்ற மாணவர்களையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வேன் வந்தது. டிரைவர் வேனை பள்ளியின் வாயிலில் நிறுத்தியதும் அதிலிருந்து மாணவ-மாணவிகள் இறங்கியுள்ளனர். அப்போது டிரைவர் வேனை நகர்த்தியபோது சிறுவன் விஷ்ணு வேனின் முன்பக்க டயரில் சிக்கி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். இதைக்கண்ட மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பதறி துடித்தனர்.
இதையடுத்து வேன் டிரைவரான கடுவங்குடியை சேர்ந்த உதயசங்கர்(35) அங்கிருந்து தப்பியோடி விட்டார். பள்ளிக்கு மகனை அனுப்பிய சிறிது நேரத்திலேயே மகன் இறந்து விட்டான் என்று கேள்விப்பட்ட கோவிந்தராஜிம், வனிதாவும் கதறி அழுதபடி பள்ளிக்கு ஓடிவந்தனர். அங்கு மகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு தரையில் புரண்டு துடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மணல்மேடு போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து டிரைவர் உதயசங்கரை தேடிப்பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே இன்று காலை பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரை மேடு ஊராட்சி தென்னலக்குடி கிராமம் கன்னிக்கோயில் தெருவில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.


இதனால் வெறுத்துப் போன கிராம மக்கள் நேற்று உடைமை பொருட்களான உடைகள், பாய், தலையணை ஆகியவற்றை மூட்டை கட்டிக் கொண்டு வீடுகளை பூட்டி விட்டு ஊரை காலி செய்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கன்னிக்கோயில் தெரு அருகேயுள்ள கோவிலில் தஞ்சம் புகுந்தனர். மேலும் குரங்கை பிடித்து அப்புறப்படுத்தும் வரையில் கோயிலிலேயே தங்க உள்ளதாகவும் தெரிவித்து அங்கேயே உணவு தயாரித்து சாப்பிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சீர்காழி வனத்துறை ரேஞ்சர் கருப்பசாமி கூறியதாவது:-
கன்னிக்கோயில் தெருவில் கடந்த சில வாரங்களாக ஒரு ஆண் குரங்கு பொது மக்களுக்கு தொந்தரவு அளித்து வருவதாக தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்று குரங்கை பிடிக்க 3 முறை கூண்டு, வலைகள் விரித்தும் அதில் எதிலும் சிக்காமல் குரங்கு தப்பி வருகிறது.
அதற்காக அதனை கையாளும் நிபுணர்கள் திருவாரூர் வனத்துறை அலுவலகத்திலிருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். விரைவாக அந்த குரங்கை பிடித்து விடுவோம். இந்த குரங்கு நீண்ட நாட்களாக எங்கேனும் அடைத்து வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாக இருக்கலாம். அதனால் தான் தப்பி வந்ததும் மனிதர்கள் உள்ளிட்டவர்கள் மேல் கோபமாக தாக்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே குரங்கின் அட்டகாசம் குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரிகள் நாக சதீஷ் (நாகை), அறிவொளி (திருவாரூர்) ஆகியோர் வனத்துறை ஊழியர்களுடன் தென்னலக்குடி கிராமத்தில் முகாமிட்டு குரங்கின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நல்லத்தன்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் வேதாரண்யத்தில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தை ஆணாக பிறந்த மகிழ்ச்சியில் இந்த தம்பதியினர் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நீடிக்கவில்லை.
காரணம், இந்த குழந்தையின் இரண்டு கைகளும் முழங்கை வரையில் பாதி அளவே இருந்தன. விரல்கள் இல்லை. இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த இந்த தம்பதியினர், தங்களுக்கு ஆண்டவன் கொடுத்த பாக்கியம் இவ்வளவுதான் என்று மனதை தேற்றிக்கொண்டனர். தங்கள் மகனுக்கு துர்கேஸ்வரன் என்று பெயர் சூட்டினர். பிறவி ஊனம் தங்கள் மகனை எந்தவிதத்திலும் பாதித்து விடாத வகையில் துர்கேஸ் வரனை சுரேஷ்-சுகன்யா தம்பதியினர் வளர்த்து வருகிறார்கள்.
தற்போது துர்கேஸ்வரனுக்கு 7 வயதாகிறது. இவன் வடமழை ரஸ்தா பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்க பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். மற்ற குழந்தைகளைப்போல் தனக்கு இரண்டு கைகளும் முழுமையாக இல்லையே என்று துர்கேஸ்வரன் கவலைப்பட்டதே இல்லை. உள்ளதைக்கொண்டு நல்லதை செய்வோம் என்றபடி தனக்கு இருக்கும் கைகளை வைத்துக்கொண்டு பள்ளியில் கற்பிக்கப்படும் கராத்தே, நடனம், கணினி உள்ளிட்டவற்றை கற்று வருகிறான் துர்கேஸ்வரன்.
மற்றவர்களுக்கு தான் எந்தவிதத்திலும் சளைத்தவன் அல்ல என்ற ரீதியில் தனது ஊனத்தை சிறிதளவும் பொருட்படுத்தாமல் வகுப்புஅறையில் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவனித்து படித்து வருகிறான். விரல்கள் இல்லாத நிலையில், ஆசிரியர், கரும்பலகையில் எழுதி போடுவதை தனது முழங்கைகளுக்கு நடுவில் எழுதுகோலை பிடித்து நோட்டில் எழுதுகிறான். சக மாணவர்களுடன் உற்சாகமாக கற்று தேர்ச்சி அடைந்து, விரைவாக முன்னேறி வரும் துர்கேஸ்வரனுக்கு அவனது பள்ளியின் தலைமை ஆசிரியர் சிங்கார வடிவேலும், ஆசிரியை கஜலட்சுமியும் ஊக்கம் அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து துர்கேஸ்வரன் கூறியதாவது:-
எங்கள் பள்ளியில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி ஆகியவையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனக்கு முன்னங்கைகள் இல்லை. கல்வி மற்றும் விளையாட்டில் எனக்கு உள்ள ஆர்வத்தை பார்த்த ஆசிரியை கஜலட்சுமி, தலைமை ஆசிரியர் ஆகியோர் எனக்கு பாடம் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
இதனால் நான் தன்னம்பிக்கையுடன் பயின்று வருகிறேன். என்னுடைய ஊனத்தை நான் ஒரு போதும் தடையாக நினைத்து பார்த்தது கிடையாது. என்னால் முடிந்தவரை மற்றவர்களை எதிர்பார்க்காமல் எனக்கு தேவையானவற்றை செய்து வருகிறேன். சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை.
மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தின் மூலமாக எனக்கு செயற்கை முன் கைகளை பொருத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கண்டிப்பாக நான் கல்வி மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் சாதனை படைப்பேன்.
இவ்வாறு அவன் கூறினான்.
கைகள் முழுமையாக உள்ளவர்களே உழைப்பதற்கு யோசிக்கும் இந்த காலத்தில் பாதி அளவே உள்ள கைககளை வைத்துக்கொண்டு சாதனை படைப்பேன் என்று கூறும் மாணவன் துர்கேஸ்வரனுக்கு அப்பகுதி மக்கள் பெரிதும் ஊக்கம் அளித்து வருகிறார்கள். நாமும் அவருக்கு ஒரு சபாஷ் போடலாமே!






