என் மலர்
நீங்கள் தேடியது "tag 99515"
வைகாசி அமாவாசை தினமான இன்று விரதம் இருந்து நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் என்ன என்பதை குறித்து விரிவாக இங்கே அறிந்து கொள்ளலாம்.
வைகாசி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.
தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் வைகாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும்.
வைகாசி மாதம் இறை வழிபாடு, விரதங்கள் மேற்கொள்ளும் ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த வைகாசி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் நிம்மதியற்ற நிலை நீங்கும்.
சுபிட்சங்கள் பெருகும். திருமணத்தடை, புத்திர பாக்கியமின்மை போன்ற குறைபாடுகள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி நல்ல லாபங்கள் ஏற்படும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் நிலை உண்டாகும். கடன், வறுமை நிலை போன்றவை ஏற்படாமல் காக்கும்.
தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் வைகாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும்.
வைகாசி மாதம் இறை வழிபாடு, விரதங்கள் மேற்கொள்ளும் ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த வைகாசி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் நிம்மதியற்ற நிலை நீங்கும்.
சுபிட்சங்கள் பெருகும். திருமணத்தடை, புத்திர பாக்கியமின்மை போன்ற குறைபாடுகள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி நல்ல லாபங்கள் ஏற்படும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் நிலை உண்டாகும். கடன், வறுமை நிலை போன்றவை ஏற்படாமல் காக்கும்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு நடந்த அமாவாசை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.இந்த கோவிலுக்கு இன்று வைகாசி மாத அமா வாசையை முன்னிட்டு மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை அடிவாரம் குவிந்தனர்.
பின்னர் காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு நடந்த அமாவாசை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி அருளைப் பெற்றனர்.பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
பின்னர் காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு நடந்த அமாவாசை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி அருளைப் பெற்றனர்.பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
ஆட்டையாம்பட்டி:
சேலம் அருகே கொண்டலாம்பட்டி அடுத்துள்ள உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அமாவாசை தினத்தை ஒட்டி சந்திரசேகரர் சவுந்தரவல்லி சாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முன்னதாக கரபுரநாதர் சாமிக்கும் பெரியநாயகி அம்மையாருக்கும் அபிஷேக ஆராதனை பூஜையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
இன்று சோம வாரம் திங்கட்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சேலத்தை அடுத்த அயோத்தியாபட்டிணம் அருகே மஜ்ரா ஜலகண்டாபுரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் அக்னி குண்டம் திருவிழா நடைபெற்றது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்தியான பெரியநாயகருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்களால் மகா அபிஷேகம், பலவண்ண மலர்களால் அலங்காரம் நடந்தது.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கும்.
அதில் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று கோவிலில் உற்சவ மூர்த்தியான பெரியநாயகருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்களால் மகா அபிஷேகம், பலவண்ண மலர்களால் அலங்காரம் நடந்தது.
அதேபோல் சாமி சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு யாக பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு 1008 சங்காபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மாலை பெரிய நாயகருக்கு பல்வேறு வண்ண மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
அதில் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று கோவிலில் உற்சவ மூர்த்தியான பெரியநாயகருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்களால் மகா அபிஷேகம், பலவண்ண மலர்களால் அலங்காரம் நடந்தது.
அதேபோல் சாமி சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு யாக பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு 1008 சங்காபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மாலை பெரிய நாயகருக்கு பல்வேறு வண்ண மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
மழையின் காரணமாக இன்று முதல் 5-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில் மழையின் காரணமாக இன்று முதல் 5-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் பிரதோஷம் மற்றும் அமாவாசை நாட்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தடை இருப்பதால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவார பகுதிக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மழையின் காரணமாக இன்று முதல் 5-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் பிரதோஷம் மற்றும் அமாவாசை நாட்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தடை இருப்பதால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவார பகுதிக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்...இந்த வார விசேஷங்கள்: 2.11.21 முதல் 8.11.21 வரை
அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் உரிய முறையில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும்.
அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும், அந்த பசியைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். இந்த நாளில் உரிய முறையில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும்.
அன்றைய தினம் கடல், ஆறு மற்றும் புண்ணிய நதிகளின் ஓரங்களில், இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு, தாய், தந்தையர்களுக்கு திதி கொடுக்கலாம். அவ்வாறு திதி கொடுப்பதற்கு, தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் சிறந்த இடங்களாக குறிப்பிடப்படுகின்றன.
திதி கொடுக்கும் அன்றைய தினம், விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்வது அவசியமான ஒன்றாகும். இறந்தவர்களின் நாள்,தேதி தெரியாதவர்களும், 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி மகாளய அமாவாசை திதிகளில் திதி கொடுத்தால் ஆண்டு தோறும் திதி கொடுத்த பலன் கிடைப்பதாக ஐதீகம்.
அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். இந்த நாளில் உரிய முறையில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும்.
அன்றைய தினம் கடல், ஆறு மற்றும் புண்ணிய நதிகளின் ஓரங்களில், இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு, தாய், தந்தையர்களுக்கு திதி கொடுக்கலாம். அவ்வாறு திதி கொடுப்பதற்கு, தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் சிறந்த இடங்களாக குறிப்பிடப்படுகின்றன.
திதி கொடுக்கும் அன்றைய தினம், விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்வது அவசியமான ஒன்றாகும். இறந்தவர்களின் நாள்,தேதி தெரியாதவர்களும், 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி மகாளய அமாவாசை திதிகளில் திதி கொடுத்தால் ஆண்டு தோறும் திதி கொடுத்த பலன் கிடைப்பதாக ஐதீகம்.
மாதம் தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒரு முறை வரும் தை அமாவாசையில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து, அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனை பெறலாம்.
பிதுர் தோஷமும் பரிகாரங்களும் :
உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,5,7,9- இவ்விடங்களில் ராகு அல்லது கேது நின்றால் இதுவே பித்ரு தோஷம் ஆகும். மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம். திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா, ராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.
வேதாரண்யம் :
தை அமாவாசை தினத்தன்று வேதாரண்யம் கடற்கரை ஓரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று அங்குள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து, நிவர்த்தி பெற்று வரலாம்.
பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.
முக்தி பேறு கிடைக்கும் :
தை அமாவாசை நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர் களுக்கு முக்தி பேறு கிடைக்கும். மேலும் அன்றைய தினம் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்யவேண்டும்.
மறைந்த தாய், தந்தை படங்களுக்கு வீட்டில் மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வணங்க வேண்டும். நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பது முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம்.
தர்ப்பணம் செய்வது எப்படி :
தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம். எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக் களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.
காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.
வீட்டிலும் வழிபடுங்கள் :
தர்ப்பணம் செய்தபின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.
உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,5,7,9- இவ்விடங்களில் ராகு அல்லது கேது நின்றால் இதுவே பித்ரு தோஷம் ஆகும். மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம். திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா, ராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.
வேதாரண்யம் :
தை அமாவாசை தினத்தன்று வேதாரண்யம் கடற்கரை ஓரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று அங்குள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து, நிவர்த்தி பெற்று வரலாம்.
பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.
முக்தி பேறு கிடைக்கும் :
தை அமாவாசை நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர் களுக்கு முக்தி பேறு கிடைக்கும். மேலும் அன்றைய தினம் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்யவேண்டும்.
மறைந்த தாய், தந்தை படங்களுக்கு வீட்டில் மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வணங்க வேண்டும். நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பது முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம்.
தர்ப்பணம் செய்வது எப்படி :
தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம். எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக் களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.
காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.
வீட்டிலும் வழிபடுங்கள் :
தர்ப்பணம் செய்தபின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.
எல்லா பஞ்சாங்கத்திலும் இன்றைய தை அமாவாசை (4.2.2019) “மஹோதயம்“ என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய சிறப்பான மஹோதய அமாவாசை தினம் இந்த ஆண்டு வந்துள்ளது.
தை அமாவாசை திங்கட்கிழமை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. எல்லா பஞ்சாங்கத்திலும் வருகிற தை அமாவாசை (4.2.2019) அன்று “மஹோதயம்“ என்று குறிப்பிட்டுள்ளது. மஹோதயம் என்றால் என்ன தெரியுமா?
வரும் அமாவாசை அன்று திங்கள்கிழமையும், திருவோண நட்சத்திரமும், வ்தீபாத யோகமும், சதுஷ்பாத கரணமும் சேர்ந்த நாளாகும். இத்தகைய சேர்க்கை பல ஆண்டுகளுக்கு ஒரு தடவையே நிகழும். இத்தகைய சிறப்பான மஹோதய அமாவாசை தினம் இந்த ஆண்டு வந்துள்ளது. எனவே அன்று சூர்யோதயத்துற்கு முன் சமுத்ரம், மஹாநதி, ஆறு, குளம் அல்லது கடைசி பக்கமாக கிணற்றிலோ சங்கல்பம் செய்து ஸ்நானம், வேதவித்துக்களுக்கு தானம், ஜபம், பூஜை, ஹோமம், பித்ரு தேவைகளுக்கு ஸ்ராத்தம் போன்ற கர்மங்கள் செய்வது ஆனந்தமான பலனைத் தரும்.
வருகிற தை அமாவாசை தினமானது கோடி சூரிய கிரகணத்திற்கு சமமானது என்று ரிஷிகள் கூறியுள்ளனர்.
பல மடங்கு புண்ணியம் தரும் இந்த மஹோதய அமாவாசை தினத்தன்று தென்மாவட்டத்துக்காரர்கள் திருப்புல்லாணி சேதுக்கரையில் நீராடலாம். சென்னை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் மகாபலிபுரம் கடலில் நீராடலாம். தை அமாவாசை தினத்தன்று காலை 8 மணிக்கு மகாபலிபுரம் அர்த்த சேதுவில் ஸ்தலசயனப் பெருமாள் தீர்த்தவாரி செய்ய உள்ளார். அதில் பக்தர்களும் பங்கேற்று புனித நீராடுவது மிகுந்த புண்ணியங்களைத் தரும்.
வரும் அமாவாசை அன்று திங்கள்கிழமையும், திருவோண நட்சத்திரமும், வ்தீபாத யோகமும், சதுஷ்பாத கரணமும் சேர்ந்த நாளாகும். இத்தகைய சேர்க்கை பல ஆண்டுகளுக்கு ஒரு தடவையே நிகழும். இத்தகைய சிறப்பான மஹோதய அமாவாசை தினம் இந்த ஆண்டு வந்துள்ளது. எனவே அன்று சூர்யோதயத்துற்கு முன் சமுத்ரம், மஹாநதி, ஆறு, குளம் அல்லது கடைசி பக்கமாக கிணற்றிலோ சங்கல்பம் செய்து ஸ்நானம், வேதவித்துக்களுக்கு தானம், ஜபம், பூஜை, ஹோமம், பித்ரு தேவைகளுக்கு ஸ்ராத்தம் போன்ற கர்மங்கள் செய்வது ஆனந்தமான பலனைத் தரும்.
வருகிற தை அமாவாசை தினமானது கோடி சூரிய கிரகணத்திற்கு சமமானது என்று ரிஷிகள் கூறியுள்ளனர்.
பல மடங்கு புண்ணியம் தரும் இந்த மஹோதய அமாவாசை தினத்தன்று தென்மாவட்டத்துக்காரர்கள் திருப்புல்லாணி சேதுக்கரையில் நீராடலாம். சென்னை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் மகாபலிபுரம் கடலில் நீராடலாம். தை அமாவாசை தினத்தன்று காலை 8 மணிக்கு மகாபலிபுரம் அர்த்த சேதுவில் ஸ்தலசயனப் பெருமாள் தீர்த்தவாரி செய்ய உள்ளார். அதில் பக்தர்களும் பங்கேற்று புனித நீராடுவது மிகுந்த புண்ணியங்களைத் தரும்.
தை அமாவாசை எனப்படும் புண்ணிய காலத்தில், இந்தப் புனிதமான நாளில், கடலில் ஸ்நானம் செய்வது விசேஷ பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
கடல் குளியல் எல்லா காலத்திலும் செய்யக் கூடாது என்று தெரிவிக்கின்றன ஞானநூல்கள். குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கடல் நீராடுவது உத்தமம். தை அமாவாசை எனப்படும் புண்ணிய காலத்தில், இந்தப் புனிதமான நாளில், கடலில் ஸ்நானம் செய்வது விசேஷ பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதேபோல், கடல் மட்டுமின்றி நதி நீராடலும் நல்லன எல்லாவற்றையும் தந்தருளும் என்கின்றனர்.
ராமேஸ்வரம் கடல், திருப்புல்லாணி சேதுக்கரை, மாமல்லபுரம் முதலான இடங்களில், கடலில் நீராடினால், முன்னோருக்கு கடன் தீர்க்காத பாவங்கள் அனைத்தும் விலகி, புண்ணியங்கள் பெருகும்! முன்னோரின் ஆத்மா குளிர்ந்து, நம்மை, நம் குடும்பத்தை, சந்ததியை ஆசீர்வதிக்கும் என்பது ஐதீகம். நம் வாழையடி வாழையென தழைக்கும் என்பது உறுதி!
ஆகவே, தை மாத புண்ணிய கால அமாவாசையில், கடல் நீராடுங்கள். கடற்கரையில் தர்ப்பணம் செய்யுங்கள். இயலாத வர்கள், காவிரிக்கரைகளில், ஈரோடு பவானி கூடுதுறை, திருவையாறு காவிரிக்கரை முதலான புண்ணிய நதிக்கரைகளில் தர்ப்பணம் செய்யுங்கள்! எல்லா வளமும் நலமும் பெற்று, தோஷங்கள் அனைத்தும் விலகி, சந்தோஷமாக வாழ்வீர்கள்!
ராமேஸ்வரம் கடல், திருப்புல்லாணி சேதுக்கரை, மாமல்லபுரம் முதலான இடங்களில், கடலில் நீராடினால், முன்னோருக்கு கடன் தீர்க்காத பாவங்கள் அனைத்தும் விலகி, புண்ணியங்கள் பெருகும்! முன்னோரின் ஆத்மா குளிர்ந்து, நம்மை, நம் குடும்பத்தை, சந்ததியை ஆசீர்வதிக்கும் என்பது ஐதீகம். நம் வாழையடி வாழையென தழைக்கும் என்பது உறுதி!
ஆகவே, தை மாத புண்ணிய கால அமாவாசையில், கடல் நீராடுங்கள். கடற்கரையில் தர்ப்பணம் செய்யுங்கள். இயலாத வர்கள், காவிரிக்கரைகளில், ஈரோடு பவானி கூடுதுறை, திருவையாறு காவிரிக்கரை முதலான புண்ணிய நதிக்கரைகளில் தர்ப்பணம் செய்யுங்கள்! எல்லா வளமும் நலமும் பெற்று, தோஷங்கள் அனைத்தும் விலகி, சந்தோஷமாக வாழ்வீர்கள்!
தை அமாவாசையான இன்று பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த நாளாகும். இன்று சில விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.
நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக் கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.
சிராத்தம், தர்ப்பணம் செய்கிற நாட்களில், வீட்டு வாசலில் கோலம் இடக் கூடாது. பூஜையறையில் தீபம் ஏற்றக்கூடாது. பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய இந்தக் காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக் கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.
சிராத்தம், தர்ப்பணம் செய்கிற நாட்களில், வீட்டு வாசலில் கோலம் இடக் கூடாது. பூஜையறையில் தீபம் ஏற்றக்கூடாது. பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய இந்தக் காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
தை அமாவாசை நாளில், வேதம் அறிந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் பசு தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம். இது நம் வாழ்வுக்கு பலம் சேர்க்கும்.
முக்கியமான நாட்களில், புண்ணியம் நிறைந்த நன்னாளில், தானங்கள் செய்வது, நம் வாழ்வுக்கு இன்னும் இன்னும் பலம் சேர்க்கும். தை அமாவாசை நாளில், வேதம் அறிந்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் பசு தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.
சொர்ணம் எனப்படும் தங்கத்தை தானமாகத் தரலாம். எள் தானம் வழங்குங்கள். நெய் தானம் வழங்கலாம். வஸ்திரம் கொடுக்கலாம். நவதானியங்கள், வெல்லம், வெள்ளி, உப்பு, புத்தகம், பூஜை மணி, தீர்த்தப் பாத்திரம், பழங்கள், காய்கறிகள் முதலானவற்றை தானமாக வழங்கலாம்.
முக்கியமாக, தை அமாவாசை நாளில், நம்மால் முடிந்த அளவு யாருக்கேனும் ஒரு பொட்டலம் தயிர்சாதமாவது வாங்கிக் கொடுங்கள். பித்ருக்கள் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.
சொர்ணம் எனப்படும் தங்கத்தை தானமாகத் தரலாம். எள் தானம் வழங்குங்கள். நெய் தானம் வழங்கலாம். வஸ்திரம் கொடுக்கலாம். நவதானியங்கள், வெல்லம், வெள்ளி, உப்பு, புத்தகம், பூஜை மணி, தீர்த்தப் பாத்திரம், பழங்கள், காய்கறிகள் முதலானவற்றை தானமாக வழங்கலாம்.
முக்கியமாக, தை அமாவாசை நாளில், நம்மால் முடிந்த அளவு யாருக்கேனும் ஒரு பொட்டலம் தயிர்சாதமாவது வாங்கிக் கொடுங்கள். பித்ருக்கள் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.
தை அமாவாசையையொட்டி வேதாரண்யம், திருவையாறில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உத்ராயனப் புண்ணிய காலத்தை முன்னிட்டு (சூரிய பகவான் வடக்கு நோக்கி நகரும் நாள்) தை அமாவாசையில் கோடியக்கரையில் ஆதிசேது என்ற சித்தர் கட்ட கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கடலில் புனித நீராடினர். பின்பு வேதாரண்யம் சன்னதி கடல் என்று அழைக்கப்படும் வேதநதியிலும் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர்.
பின்பு வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்திலும் நீராடி சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். ரிஷப வாகனத்தில் சந்திசேகர சுவாமி அலங்கரிக்கப்பட்டு மேல் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அருள்பாலித்தார். பின்பு திரிபங்கி வடிவிலான துர்க்கை அம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் மற்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.ஸ்ரீகாந்த் தலைமையில் 500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தினர்.
அதேபோல் பூம்புகார் கடலிலும், காவிரி கடலில் கலக்கும் சங்கம துறையிலும் நீராடி கடற்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர் ரெத்தினபூரணேஸ்வரர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதேபோல் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி உத்திர பாத தரிசனம் செய்தனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறில் காசிக்கு வீசம் கூட என்ற பெயர் பெற்ற காவிரி புஷ்ய மண்டப படித்துறையிலும் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அங்கு வழியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் காய்கறிகள், பழங்கள் வாங்கி சென்று காவிரியில் நீராடி புஷ்ய மண்டபத்தில் உள்ள புரோகிதர்களிடம் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
பின்னர் பிண்டத்தை காவிரியில் விட்டு வணங்கி அங்கிருந்து அய்யாறப்பர் கோவிலின் தெற்கு வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டார் சன்னதியின் வாசலில் குங்கிலியம் பொடி போட்டு வணங்கி சென்று ஆட்கொண்டாருக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் கோவிலின் உள்ளே அய்யாறப்பர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்திருந்தனர்.
இதேபோல் கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் காலை முதல் பக்தர்கள் குளத்தின் 4 கரைகளிலும் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர். பின்னர் குளத்தில் கரையில் அமைந்துள்ள சோடச லிங்க சன்னதிகளில் சென்று வழிபட்டனர். பின்னர் அருகில் உள்ள சிவன் கோவில்களில் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பின்பு வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்திலும் நீராடி சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். ரிஷப வாகனத்தில் சந்திசேகர சுவாமி அலங்கரிக்கப்பட்டு மேல் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அருள்பாலித்தார். பின்பு திரிபங்கி வடிவிலான துர்க்கை அம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் மற்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.ஸ்ரீகாந்த் தலைமையில் 500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தினர்.
அதேபோல் பூம்புகார் கடலிலும், காவிரி கடலில் கலக்கும் சங்கம துறையிலும் நீராடி கடற்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர் ரெத்தினபூரணேஸ்வரர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதேபோல் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி உத்திர பாத தரிசனம் செய்தனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறில் காசிக்கு வீசம் கூட என்ற பெயர் பெற்ற காவிரி புஷ்ய மண்டப படித்துறையிலும் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அங்கு வழியில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் காய்கறிகள், பழங்கள் வாங்கி சென்று காவிரியில் நீராடி புஷ்ய மண்டபத்தில் உள்ள புரோகிதர்களிடம் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
பின்னர் பிண்டத்தை காவிரியில் விட்டு வணங்கி அங்கிருந்து அய்யாறப்பர் கோவிலின் தெற்கு வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டார் சன்னதியின் வாசலில் குங்கிலியம் பொடி போட்டு வணங்கி சென்று ஆட்கொண்டாருக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் கோவிலின் உள்ளே அய்யாறப்பர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீசார் செய்திருந்தனர்.
இதேபோல் கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் காலை முதல் பக்தர்கள் குளத்தின் 4 கரைகளிலும் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபட்டனர். பின்னர் குளத்தில் கரையில் அமைந்துள்ள சோடச லிங்க சன்னதிகளில் சென்று வழிபட்டனர். பின்னர் அருகில் உள்ள சிவன் கோவில்களில் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டனர்.






