என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் சவுந்தரவல்லி அம்மையார் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
ஆட்டையாம்பட்டி:
சேலம் அருகே கொண்டலாம்பட்டி அடுத்துள்ள உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அமாவாசை தினத்தை ஒட்டி சந்திரசேகரர் சவுந்தரவல்லி சாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முன்னதாக கரபுரநாதர் சாமிக்கும் பெரியநாயகி அம்மையாருக்கும் அபிஷேக ஆராதனை பூஜையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
இன்று சோம வாரம் திங்கட்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சேலத்தை அடுத்த அயோத்தியாபட்டிணம் அருகே மஜ்ரா ஜலகண்டாபுரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் அக்னி குண்டம் திருவிழா நடைபெற்றது.
Next Story






