search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு மலைப்பாதை வழியாக சென்ற பக்தர்கள்.
    X
    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு மலைப்பாதை வழியாக சென்ற பக்தர்கள்.

    வைகாசி அமாவாசை: சதுரகிரி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு நடந்த அமாவாசை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.இந்த கோவிலுக்கு இன்று வைகாசி மாத அமா வாசையை முன்னிட்டு மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை அடிவாரம் குவிந்தனர்.

    பின்னர் காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு நடந்த அமாவாசை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி அருளைப் பெற்றனர்.பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×