என் மலர்
நாகப்பட்டினம்
- முன்னதாக தமிழ்த்துறை தலைவர் குமரேசமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
- வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சி துறை, தமிழ் மாணவர் மன்றம் மூலம் பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் காமராஜ் தலைமை தாங்கினார்.
முன்னதாக தமிழ்த்துறை தலைவர் குமரேசமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
போட்டிகளுக்கு நடுவர்களாக தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சணமூர்த்தி, அம்பிகாபதி, தமிழ் துறை பேராசிரியர் மாதவன், பேராசிரியர் பிரபாகரன் மாரிமுத்து, இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும் என தமிழ்துறை பேராசிரியர் குமரேசமூர்த்தி தெரிவித்தார்.
முடிவில் பேராசிரியர் ராஜா நன்றி கூறினார்.
- மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன், அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
- நாகையில் மணிமண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் 74-வது நினைவு தினம் அவர் பிறந்த ஊரான நாகையில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நாகை ரெயில்வே நிலையத்திற்கு எதிரே உள்ள மறைமலை அடிகளாரின் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் தஞ்சாவூரில் வசிக்கும் மறைமலை அடிகளாரின் மகன் 76 வயதான பச்சையப்பன் , அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இதேப்போல் நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அப்போது தமிழை வளர்த்த மறைமலை அடிகளாருக்கு நாகையில் மணிமண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன், நாம் தமிழர் கட்சி நாகை பாராளுமன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் அற்புதராஜ் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் நாகை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மதியழகன், நாகை தொகுதி செயலாளர் ஆதித்தன், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பழனிவேல், தமிழர் மீட்சி பாசறை மாவட்ட தலைவர் மதிவாணன், நாகை சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜேஷ், பொருளாளர் நாகராஜன், கீழ்வேளூர் தொகுதி தலைவர் அருள் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கடலில் 13 மைல்கல் தூரம் சென்ற போது படகு திடீரென பழுதானது.
- மீன்பிடிக்க கடலுக்கு வந்தார்களா, அல்லது வேறு காரணமா என பல கோணங்களில் போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
இலங்கை தலைமன்னாரை சேர்ந்தவர்கள் நிக்சன் டீலக்ஸ் (வயது 38). சுபத்திரன் (36). இவர்கள் 2 பேரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு படகில் இலங்கையில் இருந்து கடலுக்கு சென்றனர்.
அவர்கள் கடலில் 13 மைல்கல் தூரம் சென்ற போது படகு திடீரென பழுதானது. இதனால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.
பின்னர் காற்றின் வேகத்தினால் அவர்களது படகு இன்று காலை வேதாரண்யம் கோடியக்கரை அருகே சிறுதலைக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இலங்கை வாலிபர்கள் நிக்சன் டீலக்ஸ், சுபத்திரன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு வந்தார்களா, அல்லது வேறு காரணமா என பல கோணங்களில் போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை மாற்ற வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை மாற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை நகராட்சி ஆணையர் வெங்கடலெட்சுமணன் தொடங்கி வைத்தார்.
இதில் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன், ஆசிரியர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்ற கட்டணமில்லா தொலை பேசி எண். 14420 பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
- திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
- 46 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்தி தலைமை தாங்கினார்.
வட்டாச்சியர் ரமேஷ், தனி வட்டாச்சியர் (சமூக பாதுகாப்பு) கவிதாஸ்,வட்ட வழங்கல் அலுவலர் நீலாயதாட்சி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய் ஆய்வாளர் புனிதா வரவேற்றார்.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை,இலவச வீட்டுமனை பட்டா,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்து 776 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்தி வழங்கினார்.
இதில் மண்டல துணை வட்டாட்சியர் ஜெயசெல்வம், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் செல்லபாண்டியன்,சரவண அய்யப்பன்,வேளாண்மை உதவி அலுவலர் பழனிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார் நன்றி கூறினார்.
- அரசு தொடக்கப்பள்ளியில் சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
- மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் அரசு தொடக்கப்பள்ளியில் சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கினார்.
பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மாணவ- மாணவிகளுக்கு சர்வதேச கலாச்சார ஒற்றுமை குறித்து எடுத்து கூறப்பட்டது.
இவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர். மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரி அமைப்புகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நாகை மாவட்டத்தில் 2 வது நாளாக திருக்குவளை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்குவளை கடைத்தெருவில் இருந்து மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் பேரணியாக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து திருக்குவளை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள், இந்தியாவில் அதிகரிக்கும் வேலை தட்டுப்பாட்டை கண்டித்தும், இந்தி திணிப்புக்கு எதிராகவும், சொந்த லாபங்களுக்கு நாட்டை தனியார்மயமாக்கும் செயலுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
- ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.
- நந்திபகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புதுப்பள்ளி கிராமத்தில் உள்ள ஞானாம்பிகை உடனுறைஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷச விழாவை முன்னிட்டு மற்றும் நந்திபகவானுக்கு பால், பன்னீர்,சந்தனம் ,பஞ்சாமிர்தம், இளநீர், தேன், தயிர் உள்ளிட்ட பல்வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது.
- வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் கொசுபுழு ஒழிப்பு நிகழ்ச்சி.
- சுகாதார துறையினர் வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் கொசுபுழு ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஊராட்சி துணை தலைவர் வெற்றிவேல், ஊராட்சி செயலர் ரெங்கராசு, டாக்டர் ஆனந்தன் சுகதார ஆய்வாளர் அருளானந்தம், ஒன்றிய கவுன்சியர் கஸ்தூரி குஞ்சையன் உள்ளிட்ட சுகாதார துறையினர் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் சுவாமி கோவி லில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சாமிக்கும், நந்தி கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது.
பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதைப்போல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலு வேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில்,
புஷ்பவனம் சுகந்தனே ஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோயில் மற்றும் ருத்ரசோ மநாதர் கோவில், மறைஞா யநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண் தீ வைத்து கொண்டார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறக்கிராமம் புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மனைவி ஜெபுருஷ் நிஷா (வயது 44). இவர் உடல் நலக்குறைவால் அவதி பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த ஜெபுருஷ் நிஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெபுருஷ் நிஷா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனக்குத்தானே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஜெபுருஷ் நிஷாவை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஜெபுருஷ் நிஷா சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் திட்டச்சேரி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
- சிமெண்டு சாலை அமைக்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராமமக்கள் அறிவித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திரும ருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு வயல்வெளி களுக்கு நடுவில் மயானம் உள்ளது.இந்த மயானத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் வயல் வெளி வழியாக உடலை தூக்கிச் செல்கின்றனர்.இந்த நிலையில் மயானம் செல்வ தற்கு சிமெண்டு சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
இந்த மயானம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் இருந்த தால் சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மாவட்ட கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பலமுறை மனு அளித்துள்ளனர்.
ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து பொது மக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள மயான பாதையை மீட்டு சிமெண்டு சாலை அமைக்கக்கோரி திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் மறியல் போராட்ட த்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த இடங்களின் ஆக்கிரமிப்பு களை திருமருகல் சரக வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி,திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி,ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்,கிராம நிர்வாக அலுவலர்கள் குமரேசன்,ரத்தினவேல் ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமப்பு களை அகற்றினார்.






