என் மலர்
நாகப்பட்டினம்
- தமிழகத்தில்ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையா ட்டுக்கு அடிமையாகி ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர்.
- 15 உயிர்கள் பலியான சூழலிலும் இதை தடை செய்ய தயங்குவது ஏன்? என்பது புரியவில்லை. பலர் அறிவுறை கூறியும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் ஆன்லைன் ரம்மியை பலர் விளையாடி வருவது வேதனை அளிக்கிறது.
நாகப்பட்டினம்:
முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில்ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையா ட்டுக்கு அடிமையாகி ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர்.
15 உயிர்கள் பலியான சூழலிலும் இதை தடை செய்ய தயங்குவது ஏன்? என்பது புரியவில்லை. பலர் அறிவுறை கூறியும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் ஆன்லைன் ரம்மியை பலர் விளையாடி வருவது வேதனை அளிக்கிறது. எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புனிதஅந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின்ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- கொடி புனிதம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த கோகூரில் புனிதஅந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின்ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடி ஊர்வலம் தேவாலயத்தின் வளாகத்தில் இருந்து தொடங்கி, முக்கியவீதிகள் வழியாக வந்து மீண்டும் தேவாலயத்தை வந்தடை ந்தது.
நாகை மறை மாவட்ட அதிபர் வின்சென்ட் தேவராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி செய்து வைத்தார். தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.
- நாகூர் தர்காவில் தமிழக சிறுபா ன்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்
- 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் தமிழக சிறுபா ன்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார். நாகூர் தர்காவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நபிகள் நாயகத்தின் முழு வரலாற்றைப்படித்தால் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் முழு மனிதனாக மாற முடியும். மீண்டும் அவர் இதுபோலநபிகள் நாயகத்தை பற்றி விமர்சனம் செய்தால், பேரறிஞர் அண்ணா வழியில் எதிர்ப்போம் என்று பாசத்தோடு கூறி கொள்கிறேன்.
20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் விடுதலையாக சட்ட வல்லுனர்கள்குழு அமைத்து உரிய நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தி.மு.க. மீது வைக்கும் ஊழல் புகார்களை நிரூபித்தால் அதனை எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாகப்பட்டினத்தைச் சார்ந்த சலவைத் தொழிலாளிக்கு பித்தளையால் ஆன புதிய இஸ்திரி வழங்கப்பட்டது.
- அயன்பாக்ஸ் வாங்க நிதி உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை எம்.என்.கே. டிரஸ்ட் சார்பாக அதனுடைய நிறுவனத் தலைவர் தெரிவித்துக் கொண்டார்.
நாகப்பட்டினம்:
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் சார்பாக ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சலவைத் தொழிலாளிக்கு பித்தளையால் ஆன புதிய இஸ்திரி பெட்டி நேற்று அவரது வீட்டிற்கு சென்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்ட ளையின் நிறுவனத் தலைவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மாநில நிர்வாகிகள் சாக்ரடீஸ், நாகூர் நகர ஒருங்கிணைப்பாளர் நாகைமணி கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக ஓம்முருகா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் ஆனந்தன் மற்றும் அயன்பாக்ஸ் வாங்க நிதி உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை எம்.என்.கே. டிரஸ்ட் சார்பாக அதனுடைய நிறுவனத் தலைவர் தெரிவித்துக் கொண்டார்.
- சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் நாகூர் சித்திக் கலந்து கொண்டார்.
- நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவடடம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் நாகூர் சித்திக் கலந்து கொண்டார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் "ஒரே ஒரு பூமி "என்ற தலைப்பில் பிளாஸ்டிக் மாசுபாடு, காற்று மாசுபாடு அவற்றை தவிர்க்கும் முறைகள் பற்றி மாணவ -மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்.
2021- 22 ஆம் கல்வியாண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.
பள்ளியின்தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி ஆதினங்குடியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 20).
இவர் மோட்டார் சைக்கிளில் ஆதினங்குடியில் இருந்து வவ்வாலடிக்கு புறப்பட்டார்.
அப்போது தெற்குலேரி அருகே வந்தபோது எதிரில் வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஹரிஹரன் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.
ஆழ்வார்களால் மங்களா–சாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, வருகிற 9-ம் தேதி தங்க கருடசேவையும், 13-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மாதவன், ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக கடந்த மே மாதம் 24-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- திருமருகல்-மருங்கூர் இடையே பாலம் கட்டும் பணி தற்போதுதான் துவங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கரையிருப்பில் வடக்குப் புத்தாறு ஆற்றில் திருமருகல் -மருங்கூர் இடையே ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை துறை மூலம் பாலம் கட்டும் பணி கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடி க்காக கடந்த மே மாதம் 24-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்த நிலையில் வடக்குப்பு த்தாறு ஆற்றில் தண்ணீர் சாகுபடிக்காக வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வடக்குப்பு த்தாறு ஆற்றில் பாசன வசதி பெறும் சீயாத்தமங்கை, வாளாமங்கலம், புறாக்கிராமம், திட்டச்சேரி, ஆலங்குடிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் முன்னதாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.
மேலும் திருமருகல்-மருங்கூர் இடையே பாலம் கட்டும் பணி தற்போதுதான் துவங்கப்பட்டுள்ள நிலையில் ஆற்றில் தண்ணீர் வந்தால் அவசரத்திற்கு திருமருகல் மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்ல வடக்குப்புத்தாறு ஆற்றை கடந்து செல்ல சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலம் கட்டும் பணிகளை துரிதப்படுத்தி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
வடக்குப்புத்தாறு ஆற்றில் பாசனம் பெறும் நிலங்களுக்கு குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஓடும் பஸ்சில் பதட்டமான சூழல் நிலவியது. டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.
- இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த மணிரத்தினம், பரமகுரு உள்பட 15 பேர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.
வேளாங்கண்ணியை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு அக்கரைப்பேட்டை வழியே நாகை செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினர். அப்போது டிக்கெட்டை கண்டக்டர் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
டிக்கெட்டை ஏன் தூக்கி வீசுகிறீர்கள் என மணிரத்தினம், பரமகுரு மற்றும் அவருடன் வந்தவர்கள் தட்டி கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிரத்தினம் தரப்பினர் கண்டக்டரை தாக்கியதாக தெரிகிறது.
இதை பார்த்த பஸ்சில் இருந்த 3 மர்ம நபர்கள் திடீரென மணிரத்தினம், பரமகுருவை கத்தியால் குத்தினர்.
இதனால் ஓடும் பஸ்சில் பதட்டமான சூழல் நிலவியது. டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து மற்ற பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்து கொண்டு ஓடினர்.
இது குறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தாக்குதலில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம் :
வேதாரண்யத்தில் பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நகர தலைவர் நந்தகுமார் வரவேற்றார்.
கூட்டத்தில் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரகுமார், வைரமுத்து, பாலச்சந்திரன் வடக்கு ஒன்றிய தலைவர் இளவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர் .
மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் அறிமுக செய்யபட்டனர்.
பின்பு தேர்தலுக்கு வார்டு கமிட்டி அமைப்பது புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது அனைத்து ஊராட்சிகளிலும் கொடியேற்றுவது என தீர்மானிக்கபட்டது.
கூட்ட முடிவில் வேதை தெற்கு ஒன்றிய தலைவர் கரு.நாகராஜன் நன்றியுரை கூறினார்.
- காலை திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
- சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் பொரவச்சேரி வடக்கு தெருவை சேர்ந்த வர் தியாகராஜன். இவர் சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது சொந்த ஊரான பொரவச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று குடும்பத்துடன் சென்னை புறப்பட்டு சென்றார்.இன்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பீரோவில் உள்ள 4 பவுன் மற்றும் ரொக்கம் ரூ.3000 ஆகியவற்ஆறை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.
- திருப்பூண்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.
- தேரடி விநாயகர் கோவிலில் இருந்து பழங்கள், மங்கள பொருட்கள், பட்டுப்பாவாடை, வேண்டுதல் நிறைவேற வேண்டி கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் தேரடி விநாயகர் கோவிலில் இருந்து பழங்கள், மங்கள பொருட்கள், பட்டுப்பாவாடை, வேண்டுதல் நிறைவேற வேண்டி கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால்,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள்,இளநீர் உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.






