search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிராக்டர் மோதி வாலிபர் பலி
    X

    விபத்தில் பலியான ஹரிஹரன்.

    டிராக்டர் மோதி வாலிபர் பலி

    தெற்குலேரி அருகே வந்தபோது எதிரில் வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி ஆதினங்குடியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 20).

    இவர் மோட்டார் சைக்கிளில் ஆதினங்குடியில் இருந்து வவ்வாலடிக்கு புறப்பட்டார்.

    அப்போது தெற்குலேரி அருகே வந்தபோது எதிரில் வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஹரிஹரன் இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×