search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகூர் தர்காவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு
    X

    நாகூர் தர்காவில் தொழுகையில் ஈடுபட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

    நாகூர் தர்காவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

    • நாகூர் தர்காவில் தமிழக சிறுபா ன்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்
    • 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் தமிழக சிறுபா ன்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார். நாகூர் தர்காவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நபிகள் நாயகத்தின் முழு வரலாற்றைப்படித்தால் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் முழு மனிதனாக மாற முடியும். மீண்டும் அவர் இதுபோலநபிகள் நாயகத்தை பற்றி விமர்சனம் செய்தால், பேரறிஞர் அண்ணா வழியில் எதிர்ப்போம் என்று பாசத்தோடு கூறி கொள்கிறேன்.

    20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் விடுதலையாக சட்ட வல்லுனர்கள்குழு அமைத்து உரிய நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தி.மு.க. மீது வைக்கும் ஊழல் புகார்களை நிரூபித்தால் அதனை எதிர்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×