search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Terabani"

    • புனிதஅந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின்ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கொடி புனிதம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த கோகூரில் புனிதஅந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின்ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கொடி ஊர்வலம் தேவாலயத்தின் வளாகத்தில் இருந்து தொடங்கி, முக்கியவீதிகள் வழியாக வந்து மீண்டும் தேவாலயத்தை வந்தடை ந்தது.

    நாகை மறை மாவட்ட அதிபர் வின்சென்ட் தேவராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி செய்து வைத்தார். தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.

    ×