என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாலம் கட்டுமான பணி உடனே நிறைவடையுமா?
- மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக கடந்த மே மாதம் 24-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- திருமருகல்-மருங்கூர் இடையே பாலம் கட்டும் பணி தற்போதுதான் துவங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கரையிருப்பில் வடக்குப் புத்தாறு ஆற்றில் திருமருகல் -மருங்கூர் இடையே ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை துறை மூலம் பாலம் கட்டும் பணி கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடி க்காக கடந்த மே மாதம் 24-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்த நிலையில் வடக்குப்பு த்தாறு ஆற்றில் தண்ணீர் சாகுபடிக்காக வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வடக்குப்பு த்தாறு ஆற்றில் பாசன வசதி பெறும் சீயாத்தமங்கை, வாளாமங்கலம், புறாக்கிராமம், திட்டச்சேரி, ஆலங்குடிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் முன்னதாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.
மேலும் திருமருகல்-மருங்கூர் இடையே பாலம் கட்டும் பணி தற்போதுதான் துவங்கப்பட்டுள்ள நிலையில் ஆற்றில் தண்ணீர் வந்தால் அவசரத்திற்கு திருமருகல் மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்ல வடக்குப்புத்தாறு ஆற்றை கடந்து செல்ல சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலம் கட்டும் பணிகளை துரிதப்படுத்தி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
வடக்குப்புத்தாறு ஆற்றில் பாசனம் பெறும் நிலங்களுக்கு குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்