என் மலர்
நாகப்பட்டினம்
- “மரக்கன்று நடுதல் பணியில் வனத்துறையின் பங்கு” என்ற தலைப்பில் பேசினார்.
- தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன்தலைமை வகித்து மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி குருகுல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வன மகோத்சவம் வார நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக பசுமை உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன்த லைமை வகித்து மாணவி களுக்கு மஞ்சப்பை வழங்கி னார். கோடியக்கரை வனவர் பெரியசாமி "மரக்கன்று நடுதல் பணியில் வனத்துறையின் பங்கு" என்ற தலைப்பில் பேசினார். சிறப்பு விருந்தினராக லண்டன் வாழ் தமிழர் புஷ்பா ராமானுஜம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கலந்து கொண்டார். உதவி தலைமை ஆசிரியை கற்பக சுந்தரி வன மகோத்சவம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார், முன்னதாக தேசிய பசுமை படை இணை ஒருங்கிணைப்பாளர் சாந்தினி வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஒருங்கிணை ப்பாளர் கற்பகவல்லி நன்றியுரையா ற்றினார். இறுதியாக பள்ளி வளாக த்தில் மரக்கன்றுகள் நடப்ப ட்டன.
- வீட்டு உபயோக பொருட்களை தனியாக சேகரித்து அவற்றை தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
- வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும் மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும் சேகரித்து தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியை வேதாரண்யம் நகர்மன்றத் தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார்.முன்னதாக தூய்மைக்கான மக்கள் இயக்க தூய்மை உறுதிமொழி நகராட்சி கமிஷனர் ஹேமலாதா தலைமையில் எடுத்துக் கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் வேதாரண்யம் நகராட்சி என் குப்பை என் பொறுப்பு என்ற வாசகத்தோடு நகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும் மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக பொருட்களை தனியாக சேகரித்து அவற்றை தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதில் நகர்மன்றத் துணைத் தலைவர் மங்களநாயகி, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம்,நகர்மன்ற உறுப்பினர்கள் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பள்ளி மாணவ -மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
- பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் பெற்ற கடனை சரிவர செலுத்தியதனாலே இந்த இலக்கை அடைய முடியும்.
நாகப்பட்டினம்:
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
கீழையூர் வேதாரண்யம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் நாகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பா கோவிலில் நடைபெற்று வரும் சமத்துவபுரம் கட்டிட பணிகளை தரமாகவும் துரிதமாகவும் கட்டி முடித்திட பயணாளிகளுக்கு வழங்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான 6.84 கோடி மதிப்பீட்டில் 188 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய அமைச்சர் இந்தாண்டு தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த ஆண்டு 20ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 21ஆயிரத்து 760கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் உதவி வழங்கி தமிழக அரசு சாதனை படைத்ததாக தெரிவித்தார்.பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத நிலையில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்கள் பெற்ற கடனை சரிவர செலுத்தியதனாலே இந்த இலக்கை அடைய முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
- ஒரு டேங்கர் லாரி ரூ. 600 விலை கொடுத்து வாங்கி தான் சாகுபடி செய்துள்ள ஒரு ஹெக்டர்நிலத்திற்கு தண்ணீர் ஊற்றி வருகிறார்.
- இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரைகண்டு கொள்ளவில்லை. இதனால் தண்ணீர் விலை கொடுத்து வாங்கி சாகுபடிக்கு ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா பகுதியில் தற்போது 5000 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு முன்னதாகவே மே 24ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடைமடை விவசாயிகள் தொடர்ந்து தண்ணீர் வரும் என்று நம்பி குறுவை சாகுபடி செய்ய இறங்கினர்.
இந்நிலையில் தாணிகோ–ட்டகத்தில் இருந்து குறுவை சாகுபடிக்கு முள்ளியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது லெட்சுமி வாய்க்காலில் சென்று தாணிகோட்டகம், பஞ்சநதி–க்குளம், தென்னடார் ,வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடிக்கு தண்ணீர் சென்றது .
தற்போது வாய்மேடு சேனாதிக்காடு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயி பரமேஸ்வரன் தனது வயலுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் இறைத்து ,குறுவை சாகுபடி காப்பாற்றி வருகிறார்.
ஒரு டேங்கர் லாரி ரூ. 600 விலை கொடுத்து வாங்கி தான் சாகுபடி செய்துள்ள ஒரு ஹெக்டர்நிலத்திற்கு தண்ணீர் ஊற்றி வருகிறார்.
தண்ணீர் வராததால் இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் ஆற்றில் அனுமதி இன்றி போடப்ப–ட்டுள்ள குழாய்களினால் தண்ணீர் சாகுபடி வேலைகளுக்கு வராமல் வீணாக செல்கிறது. இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரைகண்டு கொள்ளவில்லை. இதனால் தண்ணீர் விலை கொடுத்து வாங்கி சாகுபடிக்கு ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஆற்றில் தண்ணீர் வருவதற்கு இடையூறாக உள்ள குழாய்களை அகற்றி உடனடியாக சாகுபடிக்கு தண்ணீர் தரவேண்டும் என கோரிக்பகை விடுத்துள்ளார்.
- மண்ணிலுள்ள சத்து குறைபாடுகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு உரமிடுதல் மூலம் உரச்செலவினை குறைக்க முடியும்.
- மண் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை வாகனத்திற்கு கொண்டு வந்து வேளாண்மை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர் .
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு வட்டார வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் காடந்தேத்தி கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தலைமை தாங்கினார் வேளாண்மை அலுவலர் நவீன்குமார் முன்னிலை வகித்தார்
முகாமில்மண்ணி லுள்ள சத்து குறைபாடு களை கண்ட றிந்து அதற்கு ஏற்றவாறு உரமிடுதல் மூலம் உரச் செலவினை குறைக்க முடியும் எனவும் மண் பரிசோதனைக்கு எடுக்கும் முறைகள் பற்றி அதன் அவசியம் குறித்தும் வேளாண் அலுவலர் சுதா செயல்விளக்கம் செய்து காண்பித்தார் விவசாயிகள் தங்கள் வயல்களில் சேகரித்த மண் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை வாகனத்திற்கு கொண்டு வந்து வேளாண்மை அலுவ லர்களிடம் ஒப்படைத்தனர் . உடனடியாகவாகனத்தி லேயே மண் பரிசோதனை செய்து விவசாயி களுக்கு முடிவுகள் தெரிவி க்கப்பட்டது. இந்த முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அமிர்தராஜ், ரவிச்சந்திரன் , விதை அலுவலர்கள் ரவி, ஜீவா ஆகியோர் செய்து இருந்தனர்.
- ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒன்பது லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
- தண்ணீர் வரும் வழியில் வால்வு அமைத்து தண்ணீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுகா தலைஞாயிறு பேரூராட்சி யில் கடந்த சில தினங்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் வரவேண்டிய நீரின்அளவு சரிவர வராத தால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
பொது மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாள்தோறும் பேரூராட்சிக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீர் வந்த நிலையில் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒன்பது லட்சம் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.
இதனால் பொதுமக்க ளுக்கு போதுமான தண்ணீர் வழங்க முடியவில்லை மேலும் குடிதண்ணீர் குழாயில் சட்டவிரோதமாக பொதுமக்கள் மோட்டார் வைத்தும் தண்ணீர் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தலைஞாயிறு வலம்புரி சாலை, பள்ளி வாசல் தெரு, இடம்புரி ,சந்தைவெளி ஆகிய பகுதிகளில் குடிநீர்தண்ணீர் மிக குறைவாக வருவதாக கூறி முஸ்லிம் பெண்கள் ஏராளமானோர் பேரூரா ட்சிக்கு வந்து செயல் அலுவலர் குகனிடம் முறையிட்டனர்..உடனடியாக களப்ப ணியில் இறங்கி செயல் அலுவலர் குகன் வீடு வீடாக சென்று நேரடியாக பார்வையிட்டு குடிநீர் தண்ணீர் வரும் வழியில் வால்வு அமைத்துதண்ணீர் சீராக கிடைக்க நடவடி க்கை எடுப்பதாக பொது மக்களிடம் உறுதி அளித்தார். குடிதண்ணீர் கேட்டு வார்டு கவுன்சிலர்கள் அப்துல் அஜீஸ் ,மாதவன், கூட்டுறவு சங்க முன்னாள்இயக்குனர் வீரகுமார்,வழக்கறிஞர் ஹைதர்அலி,
ஜமாத் மன்ற உறுப்பினர் பக்ருதீன் உள்ளிடோர் பொதும க்களுடன் பேருரா ட்சி செயல் அலுவலரை சந்தித்தனர். பின்புமுன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன், மாநில விவசாயிகள்கள் குழு உறுப்பினர் மகா குமார் உள்ளிட்டோர் பேருராட்சி செயல் அலுவலருடன் பேச்சுவார்த்தை நடத்திசட்ட விரோதமாக எடுத்துள்ள குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் .பொது மக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இக்கோரிககையைஏற்று செயல் அலுவலர் குகன் பொதுமக்களிடம்
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட அறிவிப்பின்படி 13 ,14 , 15 ஆகிய மூன்று நாட்கள் குடிநீர் வழங்க இயலாது என்றும் அதன் பிறகு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு தட்டுபாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபடும்என்றும் தெரிவித்தார்.
- குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள வாய்க்காலில் சிலர் வலைகளை கட்டி மீன்பிடித்து வருகின்றனர்.
- தண்ணீர் தடைபட்டு தேங்கி செல்வதால் குறுவை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுக்கா தலைஞாயிறு மல்லியனா ருமற்றும் பெரிய வாய்க்கால் பகுதியில் குறுவைசாகுபடி க்காக தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது இந்த வாய்க்காலில் சிலர் வலைகளை கட்டி மீன்பிடித்து வருகின்றனர் இதனால் தண்ணீர் தடை பட்டுதேங்கிசெல்வ தால் குறுவை வயல்க ளுக்கு தண்ணீர்பாய்ச்சு வதில் சிரமம் ஏற்பட்டு ள்ளது இக்குறித்துபொது ப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் ஆற்றின் குறுக்கே உள்ள மீன்பிடி வலைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதனை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன உதவியாளர்கள் மற்றும் பொதுபணித்துறை பணியா ளர்கள் மல்லியனாறு மற்றும் பெரியவாய்காலில் தண்ணீர் செல்ல தடையாக ஜந்து இடங்களில் வைக்கபட்டிருந்த மீன்பிடி வலைகளை அகற்றினர் மீன்பிடி வலைகளில் அகற்றியதால் தண்ணீர் தற்போது குறுவை சாகுபடிக்கு வேகமாக செல்கின்றன இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- முன்னதாக விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையில் தொடங்கியது.
- கடம் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தென்னடார் கிழக்கு ஆமைகுளத்து ஐயனார் கோவில் தனி சன்னதியில் ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார்.
இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றது முன்னதாக விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையில் தொடங்கியது இதைத்தொடர்ந்து கடம் புறப்பாடு ஆகி ஆஞ்சநேயர் கோயில் கோபுர கலசத்தில் புனிதரின் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது பின்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் தரிசனம் செய்தனர்.
- மாரியம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த ஆலங்குடி கிராமத்தில் அமைந்துள்ள செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 8-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது மாரியம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனை தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒருவர் பின் ஒருவராக பக்தி பரவசத்துடன் தீ மிதித்த தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொண்டனர். அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் கடனை சரிவர கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.
- பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கதுவினை உடைத்து அவரை தகாத வார்த்தையில் திட்டி கடனை உடனடியாக செலுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணி–யை அடுத்த செம்பியன் மகாதேவியைச் சேர்ந்த அகிலா.இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கீழ்வேளூரில் செயல்பட்டு வரும் நிதி வங்கி நிறுவனத்தில் 30,000 கடனாகப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மாதந்தோ றும் தவணையாக 2020 வீதம் பத்து மாதங்கள் தவணைக் தொகையை சரியாஞ கட்டி கடனை ஓரளவுக்கு அடைத்து வந்துள்ளார்.மேலும் கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் கடனை சரிவர கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நிறுவ னத்தில் பணி புரியும் ஊழியர்கள் இவர்களை கட்டாயப்படுத்தி கடனை கட்டுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.மேலும் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் பூட்டி இருந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கதுவினை உடைத்து அவரை தகாத வார்த்தையில் திட்டி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் இல்லை யெனில் வீட்டில் உள்ள பெண்ணை அனுப்பி வைக்குமாறு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கடும் மனஉளைச்ச லுக்கு ஆளான அகிலா வீட்டில் உள்ள மண்ணெண்ணையை குடித்து தற்கொலைக்கு மேடு உள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு நாகை அரசு தலைமை மருத்து–வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கொடுத்த கடனை செலுத்த வற்புறுத்தி பெண்ணை தகாத முறையில் திட்டி தற்கொலை முயற்சிக்கு காரணமாய் இருந்த நிதி நிறுவனம் இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்க–ப்பட்ட பெண்ணின் உறவி னர்கள் முன்வை த்தனர். பெண்ணை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- ஆற்றில் குப்பைகளை கொட்ட கூடாது என வலியுறுத்தி செயல் அலுவலர் குகன் தலைமையில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
- குப்பைகளை தெருவில் கொட்டகூடாது தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து வழங்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுகா தலைஞாயிறுபேரூராட்சியில்நகர் தூய்மைக்கான மக்கள்இயக்கம விழுப்புணர்வு நடைபெற்றது.பேரூராட்சி மன்றத் தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன்,தலைமை வகித்தார். துணை த்தலை வர்கதிரவன் முன்னிலை வகித்தார். மூன்றாவது வார்டு உறுப்பினர்முத்துலட்சுமி ராஜேந்திரன், வரவேற்றார். நிகழ்ச்சியில் பேருராட்சி செயல் அலுவலர் குகன் தலைமையில்த லைஞாயிறில் உள்ளஹரிச்சந்திரா நதி ஆற்று கரை பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தூய்மை பணி மேற்கொள்ளபட்டது ஆற்றின்கரையில் இருந்து இரண்டுடன் குப்பைகள் அகற்றபட்டன
பின்பு ஆற்றங்களை பகுதிகளில் குடியிரு ப்போர்கள் மத்தியில் ஆற்றில் குப்பைகளை கொட்ட கூடாது என வலியுறுத்தி செயல் அலுவலர்குகன் தலைமையில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க விழிப்புணர்வு ஏற்படு த்தபட்டது இதில் பேருராட்சி பணியாளர்கள் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள்,தன்னா ர்வலர்கள் கலந்து கொண்டனர்வழக்கமாக விழிப்புண ர்பேபேரணி என்றால் பேனர் ஏந்திசென்று துண்டு பிரசுரங்களைவழங்கு வார்கள் இதனை பொது மக்கள் அலட்சியமாக கருதி அதனைகண்டுகொள்ள மாட்டார்கள்.
ஆனால் பேண்ட் வாத்திய இசைய முழக்க த்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைத்து வர்த்தகர்கள் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்ததுபின்பு தலைஞாயிறு. சிவசக்தி பன்னாட்டு பள்ளியில் மாணவ - மாணவி்களுக்கு என் குப்பை - என் பொறுப்பு என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டடு மாணவ மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்பு தூய்மை பணியாள ர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜீ சோதனை, பெண்களுக்கு மார்பக புற்றுநோய்,கருப்பை வாய் பரிசோதனை மேற்கொள்ளபட்டது
பின்பு இது குறித்து செயல் அலுவலர் குகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது தலைஞாயிறு பேருராட்சியில்தமிழ்நாடு முதல் அமைச்சரின் சிறப்பு திட்டமான நகர் தூய்மைக்கான மக்கள் இயக்கம் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் தலை ஞாயிறு பேருராட்சியை தூய்மை நகரமாக வை த்துக்கொள்ள வேண்டும் குப்பைகளை தெருவில் கொட்டகூடாது தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரித்து வழங்க வேண்டும் உணவகங்களில் கழிவுநீரை சாலையில் ஊற்ற கூடாது என்றும் பேருராட்சி பகுதியை தூய்மை பகுதியாக வைத்திருக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுகொண்டார் நிகழ்ச்சி முடிவில்த லைஞாயிறு பேரூராட்சி. துப்பரவு மேற்பார்வையார் அகிலா நன்றி கூறினார்.
- பள்ளி மேலாண்மை குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் சார்பாக சால்வை அணிவித்து பாராட்ட தெரிவிக்கப்பட்டது.
- பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதியாக ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் வார்டு உறுப்பினர் ஐஸ்வர்யா மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கருப்பம் புலம் பி.வி தேவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக நாதன் தலைமை வகித்தார் தேர்தல் அதிகாரியாக ஆசிரியர் சுப்ரமணியன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்தினார் இதில் தலைவராக சத்தியா துணை தலைவராக தமிழ்ச்செல்வி பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதியாக ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் வார்டு உறுப்பினர்ஐஸ்வர்யா மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவராக தேர்வு செய்யபட்ட சத்யா பள்ளிக்கு தனது சொந்த செலவில் ரூ.75 ஆயிரம் மதிப்பில் பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா மற்றும் இன்வெர்ட்டர் வைக்கும் பணியை துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் சார்பாக சால்வை அணிவித்து பாராட்ட தெரிவிக்கப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைகுழு தேர்தலுக்கு வேதார ண்யம் டிஎஸ்பி முருகவேல்இ ன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






