நடமாடும் மண் பரிசோதனை முகாம்

மண்ணிலுள்ள சத்து குறைபாடுகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு உரமிடுதல் மூலம் உரச்செலவினை குறைக்க முடியும்.மண் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை வாகனத்திற்கு கொண்டு வந்து வேளாண்மை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர் .
நடமாடும் மண் பரிசோதனை முகாம்
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு வட்டார வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் காடந்தேத்தி கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தலைமை தாங்கினார் வேளாண்மை அலுவலர் நவீன்குமார் முன்னிலை வகித்தார்

முகாமில்மண்ணி லுள்ள சத்து குறைபாடு களை கண்ட றிந்து அதற்கு ஏற்றவாறு உரமிடுதல் மூலம் உரச் செலவினை குறைக்க முடியும் எனவும் மண் பரிசோதனைக்கு எடுக்கும் முறைகள் பற்றி அதன் அவசியம் குறித்தும் வேளாண் அலுவலர் சுதா செயல்விளக்கம் செய்து காண்பித்தார் விவசாயிகள் தங்கள் வயல்களில் சேகரித்த மண் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை வாகனத்திற்கு கொண்டு வந்து வேளாண்மை அலுவ லர்களிடம் ஒப்படைத்தனர் . உடனடியாகவாகனத்தி லேயே மண் பரிசோதனை செய்து விவசாயி களுக்கு முடிவுகள் தெரிவி க்கப்பட்டது. இந்த முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அமிர்தராஜ், ரவிச்சந்திரன் , விதை அலுவலர்கள் ரவி, ஜீவா ஆகியோர் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com