என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலையில் தான் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
    • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க சாலையின் அருகில் வடிகால் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாபட்டினம் 1-வது வார்டில் கூட்டுறவு வங்கிக்கு அருகில் வடக்கு நோக்கி செல்லும் சாலை மண்சாலையாக இருந்தது.

    சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இந்த மண் சாலையை தான் போக்குவரத்துக்கு அப்பகுதி மக்கள்பயன்ப டுத்தி வந்தனர். மழைக்கால ங்களில் சுமார் நான்கடி தண்ணீர் இந்த சாலையில் தேங்கி இருக்கும். இதனால் மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலையில் எப்போது மக்கள் வாழ்ந்து வந்தனர்.இதுகுறித்து அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் பொதுமக்களின் நலன் கருதி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து ஒருங்கிணைந்த ஒப்படைக்க ப்பட்ட வருவாய் நீரில் இருந்து ரூ. 14 லட்சத்து 27 ஆயிரம் நிதி பெற்று மண் சாலையை தார்சாலையாக போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காாமல் இருக்க சாலையின் அருகில் வடிகால் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகிறது. 75 ஆண்டு காலத்திற்கு பிறகு தார் சாலையை காண போகும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் மன அழுத்தத்தை குறைக்கவும் சிறப்பு யோகா வகுப்பு நடைபெற்றது.
    • பயிற்சியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கூடும் கூட்டத்தை கலைக்கவும், பயிற்சிகள் நடத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின்படி இ. ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் காவலர்கள் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் மன அழுத்தத்தை குறைக்கவும் சிறப்பு யோகா வகுப்பு நடைபெற்றது.

    இந்த வகுப்பில் பயிற்சிக் காவலர்கள் மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்கள் 150 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

    இந்த பயிற்சியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கூடும் கூட்டத்தை கலைக்கவும், பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    • சுதந்திர போராட்ட தியாகிகள் சர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் தியாகி சுப்பையா பிள்ளை ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
    • மணியன் தீவு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் 120 -வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் கலந்து கொண்டு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்புவேதாரணியம் வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள்ச ர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் தியாகி சுப்பையா பிள்ளைஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதையடுத்து மணியன் தீவு பள்ளியில் மாணவ -மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர் சங்கமன் கோவிந்தராஜ், நகர தலைவர் அர்ஜுனன் , முன்னாள் நகர தலைவர் வைரவன் , காங்கிரஸ் நகர பொதுச்செயலாளர் ராகுல் காந்தி,மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் ஆரோ.பால்ராஜ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலவர் கணேசன்,நகர துணைத்தலைவர் ரபீக், வர்த்தக அணி பொதுச் செயலாளர் அப்துல் உசேன், ஜ.என்டி.யூசி உப்பு தொழிலாளர் சங்க துணைத் தலைவர் தங்கமணி, பொருளாளர் தாயுமானவன், மகிளா காங்கிரஸ் தலைவர் சத்யகலா, மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, வட்டார மகளிர் அணி தலைவர் மல்லிகா ,நகர மகளிர் அணி தலைவர் ரத்னமாலா, நகர்மன்ற உறுப்பினர் தங்கதுரை, தகவல் நுட்ப அணி பொறுப்பாளர் விக்னேஷ் மற்றும் அனைத்து காங்கிரஸ் கட்சிநிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டும் பணிகள்.
    • நாகை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.46 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி, பண்டாரவடை, போலகம் ஆகிய ஊராட்சிகளில், தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டுவதற்கும், இடையாத்தங்குடி, அம்பல் ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம் கட்டுவதற்கும், நாகை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.46 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கிய மேரி, தி.மு.க திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் சக்திவேல் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அடையாளம் தெரியாத வாட்ஸ்-அப் எண் மூலம் தொடர்பு கொண்டு சாட் செய்து டிரேடிங் பிசினஸ் பற்றி கூறியுள்ளார்.
    • அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி ரூ.1,20,000 மோசடி செய்தார்.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளியை சேர்ந்த கவிதரன் என்பவர் கடந்த சில மாதங்களாக பினான் ஆப்பு டிரேடிங் பிசினஸ் செய்து வந்துள்ளார். அதன் மூலமாக சிறு சிறு தொகை லாபம் கிடைத்து வந்துள்ளது.

    அந்த சமயத்தில் சுனில் குமார் குப்தா என்ற அடையாளம் தெரியாத நபர் கவிதரனிடம் அடை–யாளம் தெரியாத வாட்ஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டு சாட் செய்து டிரேடிங் பிசினஸ் பற்றி கூறி அதில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகளை கூறி ரூ.1,20,000 மோசடி செய்தார். இது குறித்த புகாரின் பேரில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், நாகை சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்–கரசுவிடம் விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

    விசாரணையின் அடிப்படையில் மோசடி செய்தவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டு–பிடிக்கப்பட்டது. மேலும் அவர் பயன்படுத்திய வங்கிக் கணக்கினை முடக்கிய சைபர் கிரைம் போலீசார் ரூ.1,20,000 பணத்தை மீட்டனர்.

    மீட்ட பணத்தை கவிதரனிடம், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஒப்படைத்தார். மேலும் மோசடி செய்த நபர் விரைவில் கைது செய்யப்–படுவார் என்று அவர் தெரிவித்தார்.

    • ரேசன் கடைகளில் தரமான பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும்.
    • 1000 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து புதிய கடைகளை உருவாக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நெல் கொள்முதல் மற்றும் பொது வினியோகத் திட்டம் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் பேசியதாவது,

    தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, மக்களின் உணவு உரிமையை உறுதிப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறை இது. எனவே இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் செயலாற்ற வேண்டும்.சமூகத்தில் நலிந்த பிரிவினர், விளிம்பு நிலை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும். பொதுவாக, குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் விபரங்களை பரிசீலித்து 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஏற்கெனவே கூறியுள்ளார். அதை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும். பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்காக மக்களை அலையவிடக் கூடாது.

    நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்கள், சரியான எடையில் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி எம்.எல்.ஏக்கள் திடீர் ஆய்வுகள் செய்து வருகிறோம். தரமான பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும்.நாகப்பட்டினத்தில் பழுதடைந்த நியாய விலைக் கடைகளை விரைந்து புதுப்பித்து கட்ட வேண்டும். 1000 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளை பிரித்து புதிய கடைகளை உருவாக்க வேண்டும்.

    கைரேகை பதிவில் முதியோர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்கள் நேரடியாக வர முடியாவிட்டால் அவர்கள் அனுப்பும் பிரதிநிதியிடம் பொருள்களை வழங்க வேண்டும். மாற்றுத்தி றனாளிகளை வரிசையில் காத்திருக்க வைக்காமல் நேரடியாக அவர்களுக்கு பொருள்களை வழங்க வேண்டும்.நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களை மேம்படுத்த வேண்டும். நெல் மூட்டைகளை வெட்ட வெளியில் அடுக்கிவைக்கும் நிலை உள்ளது. பல இடங்களில் கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.
    • தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா ஆலய ஆண்டு திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாலமாக துவங்கியது. மாதா கோவிலின் முக்கிய திருவிழாவான தேர்பவனி நடைபெற்றது.

    பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் புனிதம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவப் பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.

    தேரானது வேளாங்க ண்ணி கடற்கரை, உத்திரிய மாதா, ஆரியநாட்டு தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றபோது இருபுறமும் நின்றிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித உத்திரிய மாதா, செபஸ்தியர், அந்தோணியார் தேர் மீது மலர்களை தூவி தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

    தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா ஆலய ஆண்டு திருவிழா நாளை காலை கொங்கனி மொழியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

    • காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
    • காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை அரசு மேல்நிலை பள்ளியில் காமராஜர் 120 -வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மகாதேவன் தலைமை வகித்தார். ஆசிரியர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் செங்கொடி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் - மாணவிகள் கலந்துகொண்டனர்.

    விழாவில் கோட்டாட்சியர் ஜெயராஜ் பெளலின் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.முடிவில் ஆசிரியர் துரைராஜ் நன்றி கூறினார்.

    • திருமருகல் ஒன்றியத்தில் 209 கிராமங்களில் தினசரி குடிநீர் வழங்கப்படுவதில்லை.
    • ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இடிக்கப்பட்ட பழுதடைந்த கட்டடங்களை விரைந்து கட்டவேண்டும்.

    நாகப்பட்டினம்:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், நாகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    அதில் எம்.எல்.ஏ ஷா நவாஸ் பேசியதாவது,

    அமைச்சர் அடுத்த முறை நாகப்பட்டினம் வரும்போது நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் மற்றும் நாகை ஒன்றியத்தில் ஆய்வு செய்ய வேண்டும். திருமருகல் ஒன்றியத்தில் 209 கிராமங்களில் தினசரி குடிநீர் வழங்கப்படுவதில்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் தான் குடிநீர் கிடைக்கிறது. குடிநீருக்காக மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. பொதுவாகவே, குடிநீர் வசதி, சாலை வசதி, இருப்பிட வசதி போன்ற அடிப்படை தேவைகளுக்காக மக்களை போராடும் நிலைக்கு தள்ளக்கூடாது. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

    ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இடிக்கப்பட்ட பழுதடைந்த கட்டடங்களை விரைந்து கட்டவேண்டும். குளங்களுக்குசுற்றுச்சுவர் அமைத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.100 நாள் வேலைதிட்டம் முறையாக செயல்படு த்தப்பட வேண்டும். நாகப்ப ட்டினம் பேரிடர்களால் பாதிக்கப்படும் பகுதி என்பதால், அதுபோன்ற காலங்களில் மக்களுக்கு மீட்பு மையங்களாக சமுதாயக் கூடங்கள் தான் பெரிதும் பயன்படுகின்றன. எனவே சமுதாயக் கூடங்கள் அதிகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.

    குப்பைகள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை முறையாக செய்யப்பட வேண்டும்.திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ப்பட்டவுடன் அவற்றை காலதாமதம் இன்றி நிறைவேற்ற அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும். இவ்வாறு பேசினார்.

    ஆய்வுக் கூட்டத்தில், அரசு முதன்மைச் செயலர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷிணி கலெக்டர் அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    • நாகை மாவட்டத்தை பொறுத்தவரை நடவு மற்றும் நேரடி விதைப்பு மூலமாக 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.
    • உரம் மற்றும் யூரியாக்கள் கொடுக்கவில்லை என்றால் பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் பாதிக்கக்கூடும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் ஒரத்தூர், கீழ்வேளூர், திருமருகல், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தை பொறுத்தவரை நடவு மற்றும் நேரடி விதைப்பு மூலமாக 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஒரத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 25 நாட்களான பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு முட்டை டி ஏ பி, அரை மூட்டை யூரியா கலந்து கொடுக்க வேண்டும். ஆனால் நாகை தாலுக்கா பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய டிஏபி மற்றும் யூரியாக்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தால் வழங்க முடியாத நிலை உள்ளதாக விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    உரம் மற்றும் யூரியாக்கள் கொடுக்கவில்லை என்றால் பயிர்கள் வளர்ச்சி இல்லாமல் பாதிக்கக்கூடும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியாரிடம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறுவை தொகுப்பு திட்டம் வழங்குவது ஒரு பக்கம் இருந்தாலும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க மூலம் விலைக்கு வழங்க வேண்டும் எனவும் வருங்காலங்களில் தட்டுப்பாடு இல்லாமல் கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊராட்சி மன்ற வளாகத்தில் கூடியிருந்த மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களை சந்தித்து அரசின் உதவிகள் குறித்து கேட்டார்.
    • மகளிர் சுயஉதவிகுழு வினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

     வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் உள்ள 3 ஊராட்சிகளில் நடந்துவரும் ஊரக வளர்சி பணிகள், மகளிர் சுயஉதவி குழுவினரை சந்திப்பு மற்றும் சீரமைக்கப்பட்ட நூலக திறப்பு விழா என பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் பெரியகருப்பன் தலைஞாயிறு ஒன்றியம் நாலுவேதபதி ஊராட்சி மன்றம் அருகே ரூ 1.19 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்துவைத்தார்.

    பின்னர் அரசு திட்டத்தில் வளர்க்கபட்டுள்ளசுமார் 10 ஆயிரம் எண்ணிக்கையிலான முருங்கை,புங்கை, புளி, மா உள்ளிட்ட மரக்கன்றுகளை பார்வையிட்ட அமைச்சர் மரக்கன்றுகளை நன்கு பராமரிக்க அறிவுறுத்தினார்.

    மேலும் ஊராட்சி மன்ற வளாகத்தில் கூடியிருந்த மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களை சந்தித்து அரசின் உதவிகள் குறித்து கேட்டார். பின்பு அங்கு மரக்கன்றுகளை நட்டார்

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    மகளிர் சுயஉதவிகுழு வினர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அருகில் உள்ள நூலகம் ரூ 1.19 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது போல் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் உள்ள நூலகங்களை பாதுகாக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

    ஆனால் சென்னையில் கடந்த ஆண்டுகளில்மறைந்த திமுக தலைவர் கருணா நிதியால் பல லட்சரூபாய் செலவில் பல்வேறு வகையான அனைத்து நூல்களுடன் அமைக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை அதிமுக அரசு கவனிக்கவில்லை.

    அந்த நூலக கட்டடத்தை பல்வேறு முறையில் பயன்படுத்தும் முயற்சியை தடுத்து முதல்வர் ஸ்டாலின் நூலகத்தை மேலும்பொலிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

    ஒரு அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க நூலகமும், அதில் உள்ள பயன் தரும் நூல்களும் ஆகும். அப்படிபட்ட நூலகங்களை பாதுகாப்பதில் அரசு மட்டும்போதாது.

    பொதும க்களின் ஒத்துழைப்பும் தேவை. நூலகத்துட்டு தேவையான புத்தங்களை பொதுமக்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் வழங்கி பாதுகாக்க வேண்டும்.அப்படி சிறப்பாக பாதுகாக்கப்பட்டு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது ராஜாஜி சிறை வைத்த இடத்தில் சிறைச்சாலையும் உள்ள பகுதியில் உப்புத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது.
    • ஸ்தூபிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி அகஸ்தியன்பள்ளி உப்புசத்தியா கிரக நினைவு ஸ்தூபிக்கு செல்லும் சாலை ரூ.2 கோடியே 27 லட்சத்தில் போடும் பணி தீவிரவமாக நடைபெற்று 30 நாளில் புதிய தார்சாலை போடபட்டுள்ளது.

    வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபிக்கு செல்லும் பாதை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது அதன்பிறகு முற்றிலுமாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.

    இதனை சரி செய்ய நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்திரவிட்டார். இதையொட்டி நகராட்சியின் சார்பில் 2 கோடியே 27 லட்சம் செலவில் தார் சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்றது

    நாடு சுதந்திரம் அடைவதற்காக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து 1931ஆம் ஆண்டு ராஜாஜி சர்தார் வேதரத்தினம் ஆகியோர் தலைமையில் உப்பு சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது அதன் நினைவாக 1949ம் ஆண்டு அகஸ்தியன்பள்ளியில் சுமார் ஒரு ஏக்கர் இடத்தில் உப்பு சத்யாகிரக நினைவுத்தூபி கட்டப்பட்டது மேலும் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடத்தியதால் ராஜாஜியை அங்கு சிறை வைத்தனர்

    தற்போது ராஜாஜி சிறை வைத்த இடத்தில் சிறைச்சாலையும் உள்ள பகுதியில் உப்புத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது. இதனருகில் பூந்தோப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    ஸ்தூபிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது. இதனால் உப்பு சத்தியாகிரகம் நினைவு ஸ்தூபி, ராஜாஜி சிறை வைத்த இடம் ஆகிய வரலாற்று நினைவு இடங்களை பார்க்க இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோரும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்

    இதையடுத்து சாலை யை உடனடியாகசீர் செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர் இந்தநிலையில் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 2 கோடியே 27லட்சம் செலவில் இரண்டரை கிலோமீட்டர் தூரம் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது பணி துவங்கபட்ட 30 நாளில் பணி முடிக்கபட்டு தற்போது பொதுமக்கள் பயன்பட்டிற்கு சாலை திறக்கபட்டுள்ளது

    புதிதாக அமைக்கபட்ட சாலையினைநகராட்சி நிர்வாக மண்டலசெயற்பொறியாளர் பார்த்திபன்நக ரமன்ற தலைவர் புகழேந்தி துணைத்தலைவர் மங்களநாயகி நகராட்சி கமிஷனர் ஹேமலதா பொறியாளர் முகமதுஇ ப்ராகிம் ஆகியோர் சாலை பணியினை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

    ×