search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mud road"

    • மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலையில் தான் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
    • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க சாலையின் அருகில் வடிகால் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாபட்டினம் 1-வது வார்டில் கூட்டுறவு வங்கிக்கு அருகில் வடக்கு நோக்கி செல்லும் சாலை மண்சாலையாக இருந்தது.

    சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இந்த மண் சாலையை தான் போக்குவரத்துக்கு அப்பகுதி மக்கள்பயன்ப டுத்தி வந்தனர். மழைக்கால ங்களில் சுமார் நான்கடி தண்ணீர் இந்த சாலையில் தேங்கி இருக்கும். இதனால் மழைக்காலங்களில் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலையில் எப்போது மக்கள் வாழ்ந்து வந்தனர்.இதுகுறித்து அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் பொதுமக்களின் நலன் கருதி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து ஒருங்கிணைந்த ஒப்படைக்க ப்பட்ட வருவாய் நீரில் இருந்து ரூ. 14 லட்சத்து 27 ஆயிரம் நிதி பெற்று மண் சாலையை தார்சாலையாக போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காாமல் இருக்க சாலையின் அருகில் வடிகால் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகிறது. 75 ஆண்டு காலத்திற்கு பிறகு தார் சாலையை காண போகும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×