என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.46 லட்சத்தில் கட்டுமான பணிகள்- எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
- ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டும் பணிகள்.
- நாகை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.46 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி, பண்டாரவடை, போலகம் ஆகிய ஊராட்சிகளில், தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டுவதற்கும், இடையாத்தங்குடி, அம்பல் ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம் கட்டுவதற்கும், நாகை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.46 லட்சம் ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்து அடிக்கல் நாட்டினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கிய மேரி, தி.மு.க திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் சக்திவேல் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்