search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா
    X

    தி.மு.க ஒன்றிய செயலாளர் சதாசிவம் விவசாயிகளுக்கு உரங்களை வழங்கினார்.

    விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா

    • வேளாண் உழவர்நலத்துறை சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அண்டகாத்துறை, செட்டிபுலம், மகாராஜபுரம், கீழ்பாதி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா பிரந்தியங்கரை ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளான் உழவர்நலதுறை சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் 2022-23 இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வேளாண்மை அலுவலர் அனிஷ் தலைமை வகித்தார். வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வில்வநாதன் வரவேற்றார்.

    வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சதாசிவம், மூலக்கரை பிராந்தி–யங்கரை, வேதாரணியபுரம், அண்டகாத்துறை , செட்டிபுலம், மகாராஜபுரம், கீழ்பாதி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு இடு பொருட்களை வழங்கினார் .நிகழ்ச்சியில்க ரியாபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட தி.மு.க விவசாய அணி ஒன்றிய துணைச் செயலாளர் சேதுராஜன் , உதவிவேளாண்மை அலுவலர் ராஜசேகர், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜகோபால், அவை தலைவர் ஏகாம்பரம், சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாsளர் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் அருள்மேரி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மோகன் மாவட்ட பிரதிநிதி செல்வம், கிளை செயலாளர்கள் அருள் ,உதயசூரியன், செந்தில் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×