என் மலர்
நாகப்பட்டினம்
- உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
- வேளாங்கன்னி பேராலயம் சார்பில் கல்லரைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் இறந்தவர்களின் சமாதியை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருகி பிரார்த்தனை.
இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிருஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட குருக்கள் துறவியர்கள், விசுவாசிகள், சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து ஆன்மாக்களுக்கும்.
தங்களுடைய உறவினர்களின் கல்லரைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லரைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாளில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பங்கேற்றனர்.
- இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும், பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன்.
- எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பை நல்குவேன்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர். தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்த உறுதிமொழியில் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும் நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.
எனது நாட்டில் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் நலமாற உறுதி அளிக்கிறேன். என்று காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
- மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது.
- பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக அமைந்துள்ள மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இது தொடர்பாக நாகை எம்.எல்.ஏ ஷாநவாஸ் அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விரைவில் மணிக்கூண்டு மற்றும் பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.
ஆய்வின் போது, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- வீட்டில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனையிட்டனர்.
- வீட்டில் இருந்தவர்களின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம்:
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் சில அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வீடுகளில் தமிழக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்த அசல் அலி, மஞ்சகொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
வீட்டில் ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனையிட்டனர். வீட்டில் இருந்தவர்களின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது. இந்த சோதனையை முன்னிட்டு அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அசன் அலி மற்றும் ஹாரிஸ் முகமது ஆகியோர் மீது தேசிய புலனாய்வு முகமை பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரது வீடு மற்றும் அவர்களது உறவினர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
- ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படுத்தல் எந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார எந்திரம் உள்ளிட்டவை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
தூய்மை பணியாளரு–க்கென ஓய்வறை வழங்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டார்.
அந்த அறிவிப்பை அடுத்து நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் ஆலோசனைபடி தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஓய்வறை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த ஓய்வறையை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைப்பதற்காக வருைா தந்தார்.
திடீரென அவர் அருகில் நின்ற தலைஞாயிறு பேருராட்சி தூய்மை பணியாளர் மாரிமுத்துவைவை அழைத்து கட்டிடத்தை திறக்க வைத்தார் .கட்டிடத்தை திறந்த மாரிமுத்து ஆனந்த கண்ணீர்விட்டார்.
ஓய்வறையை உடனடியாக கட்டிக்கொடுத்த தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகனை பாராட்டி கலெக்டர் அருண்தம்புராஜ் சால்வை அணிவித்தார்.
அந்த ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படதையல் இயந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும்உணவு உண்பதற்கான டைனிங் டேபிள், கேரம் போர்டு, தாயங்கட்டை, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் முதலுதவி பெட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார இயந்திரம் உள்ளிட்டவை அந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன், துணைத்தலைவர் கதிரவன், பேருராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் பேருராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன் மற்றும் துப்பரவு பணியாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
கலெக்டரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தது.
- மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும்.
- தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் 115 -வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முக்குலத்து புலிகள் கட்சியின் சார்பாக மாநில நிறுவனத்தலைவர் ஆறு சரவணத்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் கூறும்போது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும். அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முன்பு இருந்தது போல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டவேண்டும் என்றார்.
இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.
- சிங்காரவேலவர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் விற்குடி வீரட்டேசுவர சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால், அங்குள்ள ஏற்பாடுகளை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அந்தக் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ உறுதியளித்தார்.
அப்போது தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதைத் தொடர்ந்து சிக்கல் சிங்காரவேலவவர் கோவிலுக்கு சென்று, கந்தசஷ்டி விழா ஏற்பாடு களை பார்வையிட்டார்.
மேலும், சிங்காரவேலவர் கோவில் குளத்தை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளது தொடர்பாக அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆனந்த், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- அம்பாள் வேல்நெடுங்கண்ணி சன்னதியில் இருந்து சக்திவேலை முருகனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி.
- வியர்வையை சிவாச்சாரியர்கள் வெண்பட்டால் துடைத்து அதனைபக்தர்களுக்கு காட்சிப்படுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலவர் கோவில் பிரசித்தி பெற்றது.
அந்த கோவிலில் கந்த சஷ்டிப் பெருவிழா கடந்த 24ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
முக்கிய திருவிழாவான அம்பாளிடம் முருகன் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சிநடைபெ ற்றது.
இதனை முன்னிட்டு முருகப்பெ ருமான் அலங்கரிக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
மகா தீபாராதனைக்கு பிறகு முருகப்பெருமான் அஜபா நடனத்துடன் கோவிலுக்குள் வலம் வந்தார்.அப்போது அம்பாள் வேல்நெடுங்கண்ணி சன்னதியில் இருந்து சக்திவேலை முருகனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிக ளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது முருகன் சிலைக்கு முத்து முத்தாக வியர்க்கும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.
அப்போது ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகன் சிலையின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பும் ஆன்மீக அற்புதம் நடைபெற்றது.
சிங்காரவேலவரின் முகத்தில் இருந்துஅரும்பிய வியர்வையை சிவாச்சா ரியர்கள் வெண்பட்டால் துடைத்து அதனைஆன்மீக அற்புதத்தின் சாட்சியாக பக்தர்களுக்கு காட்சிப்படுத்தினர்.
கோவிலின் வெளியே காத்திருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
வேல் வாங்கும்விழாவின் நிறைவாக இரவு12 மணி அளவில் சிங்காரவே லவருக்கு மகா அபிசேகம் நடைபெற்றது.
- தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே உள்ளார்.
- சுபஸ்ரீ தஞ்சாவூர் மருத்துவகல்லூரியிலும், ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள மருத்துவகல்லூரியில் இடம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா நெய்விளக்கு வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி- ராணி தம்பதிக்கு ஸ்ரீபரன் (வயது 21) என்ற மகனும், சுபஸ்ரீ (18) என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளனர்.
பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள வீராசாமி விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். மூட்டை தூக்கும் தொழில் செய்யும் போது விபத்து ஏற்பட்டு அதில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே உள்ளார்.
இவரது மனைவி ராணி அதன்பிறகு தையல் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்த ஏழ்மையான சூழ்நிலையில் தன் மகன் மகள்களை மருத்துவராக பார்க்க வேண்டும் என பெற்றோர் கனவு கண்டனர்.
இதற்காக இரவு பகல் பாராது ராணி தையல் வேளையிலும் ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு தனது பிள்ளைகளை படிக்க வைத்தார்.
மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஸ்ரீபரன், சுபஸ்ரீ இருவரும் மருத்துவக் கல்லூரியின் கனவுகளோடு தஞ்சாவூரிலே பயிற்சியில் சேர்ந்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றனர்.
இதில் சுபஸ்ரீ தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும் ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
- குலை நோய், அம்மை எனும் ஊதுபத்தி நோய் அறிகுறி அதிகளவில் காணப்படுகிறது.
- நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தான் ஆணை கொம்பன் புழு தாக்குதல் அதிகம்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளான திட்டச்சேரி, திருமருகல், திருக்கண்ணபுரம், கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ஏ.டி.டி., கோ - 45, கோ - 51, பி.பி.டி., (ஆந்திரா பொன்னி) நெல் சாகுபடி செய்தனர்.
அதில் பெரும்பாலான நிலங்களில் நெற்பயிர்களில் ஆணை கொம்பன் நோய், இலை சுருட்டு புழு, குலை நோய், அம்மை எனும் ஊதுபத்தி நோய் அறிகுறி அதிகளவில் காணப்படுகிறது.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது:-
கடந்த சில ஆண்டுக்கு முன்னர் நெற்பயிர்களில் கதிர் வரும் சமயத்தில் ஆணை கொம்பன் நோய் பரவியது.
இதனால், பயிர்களில் கதிர் வராமல், நெல் உற்பத்தி குறைந்து விட்டது. நடப்பாண்டு சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களில், இந்நோய் அறிகுறி காணப்படுகிறது.
அதை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்.
நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தான் ஆணை கொம்பன் புழு தாக்குதல் அதிகமாக உள்ளதால் இதனால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.
- தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எமுந்தருளினார்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே சிக்க லில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோவில் புகழ்பெற்ற முருகன் கோவிலாகும்.
சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்தான் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ள வரலாறாகும்.
அதற்கேற்ப சிக்கல் கோலிலின் சூரசம்ஹார விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
தேரில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எமுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காட்சியளித்தார் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 18 வங்கிகள் பங்கேற்றன.
- கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட்டு 3 வாரங்களில் கல்வி கடன் வழங்க நடவடிக்கை.
நாகப்பட்டினம்:
குடும்ப சூழல் மற்றும் பொருளாதார பின்னடைவின் காரணமாக உயர்கல்வியை தொடர்வதில் நெருக்கடியை சந்திக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கல்விக் கடன் முகாம் நடைபெற்றது.
இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், எம்.எல்.ஏ.க்கள் முகம்மது ஷா நவாஸ், நாகை மாலி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை வழங்கினர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 18 வங்கிகள் இதில் பங்கேற்றன.
மாணவர்கள் அதிக அளவில் வருகை தந்து, கல்விக் கடன் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். மொத்தம் 304 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதற்கான கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட்டு 3 வாரங்களில் கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் தெரிவித்தார்.
கல்விக் கடன் கேட்டு வங்கிகளுக்கு அலையும் நிலையை மாற்றி, ஒரே இடத்தில் வங்கிகளை வரவைத்து, கடன் வழங்கும் முறையில் ஒரு நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தியதற்காக மாணவர்களும் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்தனர் என்று ஷா நவாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.






