என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • வீட்டின் அருகில் கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்துள்ளார்.
    • காலையில் ஆட்டுக்கொட்டகையில் சென்று பார்த்தபோது 2 ஆடுகள் திருட்டு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் வசிப்பவர் ஜான்சுல்தான் (வயது 52).

    இவர் ஆடு வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்து உள்ளார்.

    காலையில் ஆட்டுக்கொட்டகையில் சென்று பார்த்தபோது அதில் 2 ஆடுகள் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வேதாரண்யம் காவல்நிலையத்தில் ஜான் சுல்தான் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்கு பதிவு கோடியக்காடு பகுதி விஜய் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.

    தலைமறைவான கோடியக்காடு அஜீத் (22) என்பவரை தேடி வருகின்றனர்.

    • வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கல்.
    • இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வடக்கு வீதியில் உப்பு சத்திய கிரகசத்தியாகிரக நினைவு கட்டிட நுழைவு வாயிலில் ஆட்டோ டிரைவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு வேதாரண்யம் காவல்து றையின் சார்பில் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் உள்ளிட்ட போலீசார் வாகன ஒட்டிகளுக்கு சாலைவி ழிப்புணர்வு ஏற்பட்டுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர் நிகழ்ச்சியில் சாலை விதிகளை மதிக்க வேண்டும் வானத்தில் போகும்போது செல்போன் பேசக்கூடாது இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை போலீசார் எடுத்து கூறினர் மேலும் வேதாரண்யம் பகுதியில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களையும் போலிசார் வழங்கினர் நிகழ்ச்சியில் ஏரளமான போலீசார் பொது மக்கள் வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

    • தொழில் திறன் பயிற்சி கடந்த 10 ஆண்டுகளாக முடக்கம்.
    • ஜி.எஸ்.டி வரி விதிப்பை மத்திய அரசு குறைத்தால் வேலைவாய்ப்பு பெருக்கம் ஏற்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர்ர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர் நலத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன் 3,928 பயனாளிகளுக்கு, 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அமைச்சர் சிவி.கணேசன் பேட்டியளித்தபோது கூறுகையில்,

    கல்வி, திருமண உதவித்தொகை, விபத்து, மரணம் உள்ளிட்டவைகளில் 1 லட்சம் 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிலுவை தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. திரையரங்கம், அடுக்குமாடி குடியிருப்பு, மால் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை கட்டிய கொத்தனார் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை சொந்த வீடு இல்லை என்று வேதனை தெரிவித்த அமைச்சர், தமிழகத்தில் முதற்கட்டமாக 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ. 400 கோடி மதிப்பில் வீடு கட்டும் திட்டம் வருகிற 15ம் தேதி முதல் அமைச்சரால் தொடங்கப்பட உள்ளதாக கூறினார்.

    தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் கூறுகையில்; கட்டிடத் தொழிலில் தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என்று வேதனை தெரிவித்தார். உள்நாட்டு தொழிலாளர்களின் பற்றாக்குறையை போக்க தி.மு.க ஆட்சியில் வருடத்திற்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அளித்து வந்த தொழில் திறன் பயிற்சி கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் முடங்கி கிடந்ததாக குற்றம்சாட்டினார்.

    இந்த பயிற்சி கொடுத்தால் தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். தொழிலாளர் நலத்துறைக்கு மத்திய அரசு 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதித்து இருப்பது கொடூர செயல் என்று கடுமையாக விமர்சித்த பொன்.குமார், ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு 5 சதவீதமாக குறைத்தால், கட்டுமான வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பு பெருக்கம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    • கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை.
    • 2078 கிலோ குட்கா மற்றும் கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல்.

    நாகப்பட்டினம்:

    தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி கயல்விழி உத்தரவின் பேரில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனைகளை தடுக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கண்டெய்னர் லாரியில் குட்கா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வேளாங்கண்ணி அருகே பாலகுறிச்சியில் இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் லாரியில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் லாரியை சோதனையிட்டனர். அப்போது லாரியில் ரகசிய அறை இருப்பது தெரிய வந்ததை அடுத்து போலீசார் ரகசிய அறையை திறந்து பார்த்தனர். அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    குட்காவை கடத்திய பாலகுறிச்சியை சேர்ந்த கவாஸ்கர் மற்றும் கண்டெய்னர் லாரியின் டிரைவர் கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து கண்டெய்னர் லாரி மூலம் குட்காவை கடத்திவந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    பின்னர் கண்டெய்னர் லாரியில் இருந்த 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 2078 கிலோ குட்காவையும், கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்களையும் கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்டு குட்கா கடத்தலை தடுத்த தஞ்சாவூர் சரக தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி கயல்விழி பாராட்டினார்.

    • பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது.
    • கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த தீயணைப்புத்துறை இயக்குநர் ரவி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை அவ்வபோது பெய்து வருகிறது. இந்த நிலையில் தீயணைப்புத்துறை சார்பாக மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.

    தீயணைப்பு நிலையத்தில் மரம் வெட்டும் கருவி, கட்டிடம் இடிக்கும் கருவி, ஆபத்து காலத்தில் கதவுகளை உடைக்கும் கருவி உள்ளிட்ட நவீன மீட்பு பணி உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவைகளை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் கூறுகையில்;

    நாகை மாவட்டத்தில் 7 தீயணைப்பு நிலையங்களில், 7 மீட்பு படையினர், 160 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை காலங்களில் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது, பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது மற்றும் வெகுமதி கட்டாயம் உண்டு. மேலும், சுற்றுலா தலங்களாக விளங்கும் வேளாங்கண்ணி, நாகூர், தரங்கம்பாடி, பூம்புகார் ஆகிய கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    • கன்று குட்டியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்றார்.
    • பசுமாடு குட்டியை ஏக்கத்துடன் பார்த்தவாறு அதனை தனது நாவால் வருடி பாச மழை பொழிந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் வளர்த்து வந்த பசுமாடு நாகை கடற்கரை சாலை அருகே கன்றுக்குட்டி ஈன்றது. பசுவை காணாது பல்வேறு இடங்களில் தேடிச்சென்ற கணேசன் பசுமாடு கன்று குட்டி ஈன்ற நிலையில் கடற்கரை சாலையில் இருப்பதை கண்டார்.

    இதையடுத்து கன்று குட்டியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது தனது கன்றுக்குட்டியை உரிமையாளர் ஆட்டோவில் அழைத்துச் செல்வதை கண்ட பசுமாடு மா, மா... என கத்திக் கொண்டு பின்னாடியே சுமார் 2 கிலோ மீட்டர் துரத்தி சென்றது.

    ஒரு கட்டத்தில் ஆட்டோவை வழிமறித்து நின்ற பசுமாடு குட்டியை ஏக்கத்துடன் பார்த்தவாறு அதனை தனது நாவால் வருடி பாச மழை பொழிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    • மீனவ சமுதாயத்தை சேர்ந்த 300 பேர் ஊர்காவல்படையில் தேர்வு.
    • சுற்றுலா தளங்களில் கடலோர போலீசாருக்கு உதவியாக பணியாற்றுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    கடலோர பாதுகாப்பு காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவதற்காக முதற்கட்டமாக பணியில் சேர்ந்த 24 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பணியில் நியமனம் செய்யப்பட்டனர்.

    தமிழக அரசின் அறிவிப்பின்படி, முதன்முறையாக நாகை மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர்கள் 300 பேர் ஊர்காவல்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக 45 நாட்கள் பயிற்சி முடித்த ஊர்காவல் படையினருக்கு நாகப்பட்டினத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

    கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் அடையாள அட்டைகளை வழங்கினார்‌.

    பணியில் நியமிக்கப்பட்ட அனைவரும் வேளாங்கண்ணி மற்றும் பூம்புகார் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கடலோர காவல்துறை பாதுகாப்பு போலீசாருக்கு உதவியாக பணியாற்றுவார்கள் என்றும், கடலில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியில் ஈடுபட உள்ளனர்.

    குறிப்பாக கடலோரங்களில் நடைபெறும் கடத்தல், அந்நியர்கள் ஊடுருவல்களை கண்காணிக்கும் பணி மற்றும் கடற்கரையோர சோதனை சாவடிகளிலும் உதவியாக பணியாற்றுவார்கள்‌‌.

    தமிழகத்திலேயே முதல் முறையாக நாகை மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் தேர்வு செய்யப்படுள்ள நிலையில், மீனவர்கள் மற்றும் கடலோர காவல்துறை போலீசாருக்கு இணைப்பு பாலமாக திகழ்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அருங்காட்சியகம் மேம்பாட்டில் அரசு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
    • வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களும், கலை பொருட்களும் பாதுகாப்பின்றி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகத்தை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். போதிய இட வசதி மற்றும் கட்டமைப்பு இல்லாததால், வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்களும், கலைப் பொருட்களும், முக்கிய ஆவணங்களும் பாதுகாப்பின்றி உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

    ஏற்கெனவே, இது தொடர்பாக சட்டப்பே ரவையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசியதாகவும், அதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் அருங்காட்சியகம் பழைய பாரம்பரிய கட்டடத்திற்கு மாற்றப்படும் என்றும், அந்த பாரம்பரிய கட்டிடம் ரூ.1.4 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டு புதிய காட்சிக் கூடங்களுடன் மேம்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளதை எம்.எல்.ஏ சுட்டிக்காட்டினார்.

    அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டு மென்றும், நாகையின் வரலாற்றுச் சிறப்புக்கு ஏற்ப அருங்காட்சியகம் மேம்பாட்டில் அரசு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டுமென்றும் அங்கிருந்தவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஷாநவாஸ் எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    • பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது.
    • 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் திட்டச்சேரி காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், சிறுவர்கள் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்கள் குறித்து திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் பேசினார்.

    இதில் காவலர் நற்குணம் மற்றும் போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கண்ணபுரம் ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளி, திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராராந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    புதிய வகுப்பறை கட்டடங்கள் வேண்டுமென்று பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர். புதிய கட்டங்கள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    மேலும், பரமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதையும் விரைந்து நிறைவேற்றுவதாக எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    அப்போது, திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், விசிக ஒன்றிய செயலாளர் கு.சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • நாட்டு நலப்பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம்.
    • “பறவைகள் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் உரையாற்றினார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தேசிய மேல்நிலை ப்பள்ளி நாட்டு நல பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம் முட்டம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. தேசிய பசுமை படை சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவர்களது இல்லங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    "பறவைகள் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் ஆதி லிங்கம் உரையாற்றினார்.

    நகராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.முத்தமிழ் ஆனந்தன். மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய வெங்கடேசன். மற்றும் ஆசிரியர்கள் செங்குட்டுவன், முத்துக்குமார், விமல், தேசிய பசுமைப்படை ஆசிரியர் சக்தி வேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.

    • சேமிப்பின் முக்கியத்துவம் உறுப்பி னர்களுக்கு காப்பீடு வங்கி கடன் எவ்வாறு வாங்குவது விவசாய உற்பத்தி குழு குறித்த விளக்குவது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
    • விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மேளதாளங்கள் முழங்க வடிவழகி அம்மன் ஆலயத்திலிருந்து முளைப்பாரி எடுத்து வந்து இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த புதுப்பள்ளி மழை முத்துமாரியம்மன் ஆலயத்தில் தானம் அறக்கட்டளை கீழையூர் கிழக்கு வட்டார வயலகம் கீழையூர் கிழக்கு வட்டார வயலக பரஸ்பரம் கீழையூர் நெய்தல் ஜீவிதம் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனம் சார்பில் 18 ஆண்டு பொதுக்குழு கூட்டம் முப்பெரும் விழா நடைபெற்றது

    கூட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவம் உறுப்பி னர்களுக்கு காப்பீடு வங்கி கடன் எவ்வாறு வாங்குவது விவசாய உற்பத்தி குழு குறித்த விளக்குவது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது முன்னதாக விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மேளதாளங்கள் முழங்க வடிவழகி அம்மன் ஆலயத்திலிருந்து முளைப்பாரி எடுத்து வந்து இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது

    இதில் ஜீவித வட்டார பொருளாளர், திருமதி இளவரசி வரவேற்புரை வழங்கினார், வட்டார. ஒருங்கிணைப்பாளர் மோ.அபிரகாம் ஸ்டான்லி அவர்கள், மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு சரவணன் அவர்களும், எதிர்கால திட்டம், வட்டாரம் ஒரு பார்வை என்னும் தலைப்பில், கொள்கை மாற்றம் குறித்து விளக்கவுரை யாற்றினார்.

    சிறப்பு விருந்தினர்களாக, விழுந்தமாவடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், கிளை மேலாளர் ஆனந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார், சிறப்பு விருந்தினர்களுக்கு, நினைவுப்பரிசு வழங்கப்ப ட்டது, சிறந்த குழுவிற்கு கேடயம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை, வட்டார பணியாளர் கார்த்திகேசன், செய்திருந்தார்.

    ×