என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறவை வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம்
    X

    பறவை வேட்டையில் ஈடுபட்டவர்கள்.

    பறவை வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம்

    • உம்பளச்சேரி செல்லும் சாலையில் ரோந்து பணி.
    • வழக்குப்பதிவு செய்து தலா ரூ. 20,000 இருவருக்கும் அபராதம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பிராந்தியங்கரையில் திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகை வன உயிரிக்காப்பாளர் யோஹேஸ்குமார் மீனா உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் பறவைகள் வேட்டை தடுப்பு சிறப்பு குழுவினர்கள் ராமதாஸ், வனவர், செல்வி, மகாலெட்சுமி, வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், செல்வி, இலக்கியா, வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், பாண்டியன் ஆகியோர் பிராந்தியங்கரையில் உம்பளச்சேரி செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்டிமேடு பகுதியை சேர்ந்த அலி அக்பர், ஹாஜா அலாவுதீன் ஆகியோர் மூன்று மடையான், இரண்டு வக்கா பறவைகள் சமைக்க விலைக்கி வாங்கி வந்தனர்.

    இருவரையும் பிடித்து கோடியக்கரை வனச்சரகர் அலுவலகம் கொண்டுவந்து விசாரணை செய்து இந்திய வன உயிரினப்பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து தலா ரூ. 20,000 இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×