என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
    • புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக உதவி கலெக்டர் அலுவலகம் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

    சீர்காழி:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பி. ஆர். பாண்டியன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் வேட்டங்குடி சீனிவாசன் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவை பேரிடர் பாதித்த தாலுகாவாக அறிவிக்க வேண்டும். தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப்பட்டன.

    இதில் பாரதிய கிசான் சங்க மாவட்ட செயலாளர் லிங்கேஸ்வரன், விவசாய சங்க தலைவர்கள் ரகு, ரவிச்சந்திரன், அசோகன், ராஜேந்திரன், வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக உதவி கலெக்டர் அலுவலகம் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

    • இந்த அரங்கம் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
    • விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த தில்லையாடியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்து றை அமைச்சர் சாமிநாதன், தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் ரூ.89.54 லட்சம் செலவில் நினைவக கட்டட புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:-

    தரங்கம்பாடி அடுத்த தில்லையாடியில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவாக இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கம் செய்தித்துறையின் பராமரிப்பில் உள்ளது. இந்த அரங்கம் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் செய்யாமல் இருந்துள்ளனர்.

    தற்போது முதல்-அமைச்சர் கவனத்தி ற்கு கொண்டு சென்று ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று சரியான முறையில் பராமரிக்கும் அரசு நிர்வாகத்துறையிடம் ஒப்படைத்து மக்கள் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் மகாபாரதி, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.உ.அ ர்ச்சனா அவர்கள், பொதுப்ப ணித்து றை செயற்பொறி யாளர் திரு.பால ரவிக்குமார் அவர்கள், உதவி செயற்பொறி யாளர்கள் திருமதி. அல்மாஸ் பேகம் அவர்கள், திரு.ராமர் அவர்கள், மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் திரு.என்.செல்வராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மாணவ- மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும்.
    • அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல மாணவ- மாணவிக ளுக்கென 15 பள்ளி விடுதி கள், 4 கல்லூரி விடுதிகள் மற்றும் 1 தொழி ல்நுட்ப கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகள் படிக்கும் மாணவ- மாணவிகளும் சேர தகுதி உடையவர்கள்.

    விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் இலவசமாக வழங்கப்படு கின்றன. அனைத்து விடுதி மாணவ- மாணவிகளுக்கும், உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 4 இணைச்சீ ருடைகள் வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

    விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர்/ பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    இருப்பிடத்தி லிருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவி களுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்ப ங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/ காப்பாளி னிகளிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவல கத்திலுள்ள பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிகா ப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபா ன்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதிக்குள் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிகா ப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மாணவர்கள் விண்ணப்பி க்கும் போது ஜாதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம் குறித்த சான்றி தழ்கள் அளிக்க தேவையி ல்லை. விடுதியில் சேரு ம்போது மட்டும் இச்சான்றி தழ்களை அளித்தால் போதுமானது. ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்த ப்பட்டுள்ளன. எனவே, மாணவ- மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேரணி மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
    • மாணவ- மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி, சீர்காழி மனவளக்கலை மன்றம்,சீர்காழி அரிமா சங்கம் சார்பில் சர்வதேச யோகா தின விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி தலைமை வகித்து பேரணியை துவக்கிவைத்தார்.

    எல்.ஐ.சி உதவி இணை மேலாளர் வை.ரவீக்அ ஹமது, வளர்ச்சி அதிகாரி அரவிந்தன் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற யோகா விழிப்பு ணர்வு பேரணி பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

    முன்னதாக மாணவ, மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

    இதில் உடற்கல்வி இயக்குனர்முரளிதரன், யோகா உடற்கல்வி ஆசிரியர் முரளி, மார்கண்டன், ராக்கேஷ் பங்கேற்றனர்.

    • இளங்கோ மனைவி அருள்மதிக்கு 4 சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
    • நிவேதா முருகன் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன் முன்னிலையில் அனைத்து துறையை சார்ந்த அதிகபட்ச மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மீனவ பயனாளிக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.8 லட்சம் மானிய தொகையில் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோ மனைவி அருள்மதிக்கு வழங்கப்பட்டது.

    இதனை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

    இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் ராஜேஷ்குமார், ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பயனாளியின் பயன்பாட்டிற்கு வழங்கினர்.

    • எங்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும், அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும்.
    • பெற்றோர்கள் தேடுவார்கள் உடனடியாக வீட்டிற்கு செல்லுங்கள் என்றார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்திருந்தார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    முன்னதாக அமைச்சர் உதயநிதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தபோது தன்னை பார்த்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கையசைத்துள்ளார்.

    இதனைப் பார்த்த பள்ளி மாணவர்கள் அமைச்சர் எங்கே போகிறார் என்று விசாரித்துவிட்டு உதயநிதி தேடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆய்வுக் கூட்டம் நடக்கும் கூட்ட அரங்க வாயிலுக்கு வந்தனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், திமுகவினர் எதற்காக வந்தீர்கள் என்று கேட்டபோது நாங்கள் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்கள் என்றும், எங்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்றும், அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என உற்சாகமாக கூறினர்.

    வீட்டில் பெற்றோர்கள் தேடுவார்கள் என்று மாணவர்களை வீட்டிற்கு செல்லும்படி கூறியும் கேட்காமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உதயநிதியை பார்ப்பதற்காக காத்திருந்தனர். தொடர்ந்து ஆய்வு கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னைப் பார்ப்பதற்காக காத்திருந்த மாணவர்களை அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    பின்னர் உற்சாகமடைந்த மாணவர்கள் அமைச்சருக்கு வரேன் சார் என கை கொடுத்து விட்டு மகிழ்ச்சியாக அப்பகுதியில் இருந்து சென்றனர்.

    • ஒட்டுமொத்த தமிழகமே பா.ஜ.க.வை எதிர்க்கத்தான் செய்யும்.
    • தமிழ்நாட்டின் பெயரை கவர்னர் மாற்ற நினைக்கிறார்.

    மயிலாடுதுறை :

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மயிலாடுதுறையில் நேற்று நடந்தது.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழியும், மாற்றுத்திறனாளிகள் 60 பேருக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் 300 பெண்களுக்கு தையல் எந்திரங்களை வழங்கினார்.

    முன்னதாக அவர் பேசியதாவது:-

    நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். இதை பொறுக்க முடியாத மத்திய அரசு என்ன செய்வது என்று தெரியாமல் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் அச்சுறுத்தி வருகிறது. நாங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தையே சந்தித்தவர்கள். இதற்கு அச்சப்பட மாட்டோம்.

    அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து நமது முதல்-அமைச்சர் மத்திய அரசை எதிர்ப்பதால் இதுபோன்ற அழுத்தத்தை மோடி அரசு கொடுக்கிறது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனக்கு கொடுத்த வேலையை விட்டுவிட்டு, கொடுக்காத வேலைகளையும் செய்து வருகிறார். தமிழ்நாட்டின் பெயரை கவர்னர் மாற்ற நினைக்கிறார். கவர்னருக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தவர் தான் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    மத்திய அரசு அ.தி.மு.க.வை தங்கள் அடிமை கட்சியாக வைத்துள்ளது. தி.மு.க.வையும் அடிமைப்படுத்த நினைத்தால் அது நடக்காது. என்னை சின்னவர் என்று பட்டப்பெயர் வைத்து அழைக்காதீர்கள். நான் உண்மையாகவே அரசியல் அனுபவம் உள்ளிட்ட அனைத்திலும் சின்னவன்தான். அந்த பட்டப்பெயரை தவிர்த்து விட்டு கலைஞர் வைத்த அழகான உதயநிதி என்ற பெயரை கூறி அழைத்தாலே போதும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர் மெய்யநாதன், ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா முடிவடைந்த பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜ.க., தி.மு.க.வை தொடர்ந்து எதிர்ப்பது தி.மு.க. நல்ல பாதையில் போய்க் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். ஒட்டுமொத்த தமிழகமே பா.ஜ.க.வை எதிர்க்கத்தான் செய்யும். எந்த காலத்திலும் பா.ஜ.க.வை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

    அமலாக்கத்துறை சோதனையை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு ஜாலியாக போய்க் கொண்டிருப்பதாக பதில் அளித்தார்.

    • திரவுபதி அம்மன் கோவிலில் சுவாமி வீதிஉலா, படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • தீ மிதித்த பக்தர்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே கொண்டல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் அம்பாள் திருக்கல்யாணம், சுவாமி வீதிஉலா, படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தீமிதி உற்சவம் நடைபெற்றது.

    விழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் காவிரி கரையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை அடைந்தனர்.

    அங்கு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மேலும் தீ மிதித்த பக்தர்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    அப்போது ஏராளமான பக்தர்கள் சாட்டையடி பெற்று சென்றனர்.

    • தொழிலாளியின் கூரை வீடு எரிந்து நாசமானது.
    • கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.

    மயிலாடுதுறை:

    சீர்காழி அருகே எடமணல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆமபள்ளம் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது38).

    கூலித் தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு முகேஷ்குமார் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    நேற்று முன்தினம் இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    அப்போது பலத்த காற்று வீசியதால் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.

    இதில் வீட்டில் இருந்த பீரோ, நகை, பணம், உடைகள், உணவுப் பொருள்கள், கட்டில், மெத்தை, சைக்கிள், டிவி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானது.

    இது குறித்த தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கூரை வீட்டில் எப்படி தீப்பிடித்தது? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொறையாறு அருகே 2 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டது
    • பொது மக்கள் பயன்பாட்டிற்காக மின்மாற்றிகள் திறந்து வைக்கப்பட்டது.

    மயிலாடுதுறை:

    தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே காட்டுச்சேரி மற்றும் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஆகிய ஊராட்சிகளில் புதிய மின் மாற்றிகள் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

    செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர் முன்னிலை வகித்தார். பொறையாறு உதவி மின் பொறியாளர் அன்புசெல்வன், வரவேறறார்.

    இதில் மயிலாடுதுறை ராமலிங்கம்,எம்.பி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இரு மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தனர்.

    விழாவில் செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் நள்ளிரவு தண்ணீர் வந்தடைந்தது.
    • இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும்.

    குத்தாலம்:

    டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12-ம் தேதி தண்ணீரை திறந்து வைத்தார்.

    இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், காவிரி நீர் இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் நல்லிரவு தண்ணீர் வந்தடைந்தது. அதிகாலை 3 மணி அளவில் பொதுப்பணித்துறையினர் 782 கன அடி நீரை பாசனத்திற்காக திறந்து விட்டனர்.

    மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.

    இதன் படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நிகழாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிட த்தக்கதாகும்.

    • காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
    • சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை இலவசமாக வழங்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரம், திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலை ப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, ரத்த பரிசோதனை ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்படும்.

    மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு டாக்டர்களால் இலவசமாக வழங்கப்படும்.

    இத்துடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை இலவசமாக வழங்கப்படும்.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய தகுதிவாய்ந்த பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள்.

    மேலும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×