search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிடர் பாதித்த தாலுகாவாக சீர்காழி, தரங்கம்பாடியை அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் பேசினார்.

    பேரிடர் பாதித்த தாலுகாவாக சீர்காழி, தரங்கம்பாடியை அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

    • தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
    • புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக உதவி கலெக்டர் அலுவலகம் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

    சீர்காழி:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பி. ஆர். பாண்டியன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் வேட்டங்குடி சீனிவாசன் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவை பேரிடர் பாதித்த தாலுகாவாக அறிவிக்க வேண்டும். தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப்பட்டன.

    இதில் பாரதிய கிசான் சங்க மாவட்ட செயலாளர் லிங்கேஸ்வரன், விவசாய சங்க தலைவர்கள் ரகு, ரவிச்சந்திரன், அசோகன், ராஜேந்திரன், வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக உதவி கலெக்டர் அலுவலகம் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

    Next Story
    ×