search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிற்படுத்தப்பட்டோர் மாணவ- மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
    X

    கலெக்டர் மகாபாரதி

    பிற்படுத்தப்பட்டோர் மாணவ- மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

    • மாணவ- மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும்.
    • அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல மாணவ- மாணவிக ளுக்கென 15 பள்ளி விடுதி கள், 4 கல்லூரி விடுதிகள் மற்றும் 1 தொழி ல்நுட்ப கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகள் படிக்கும் மாணவ- மாணவிகளும் சேர தகுதி உடையவர்கள்.

    விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் இலவசமாக வழங்கப்படு கின்றன. அனைத்து விடுதி மாணவ- மாணவிகளுக்கும், உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 4 இணைச்சீ ருடைகள் வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

    விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர்/ பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    இருப்பிடத்தி லிருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவி களுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்ப ங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/ காப்பாளி னிகளிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவல கத்திலுள்ள பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிகா ப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபா ன்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதிக்குள் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிகா ப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மாணவர்கள் விண்ணப்பி க்கும் போது ஜாதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம் குறித்த சான்றி தழ்கள் அளிக்க தேவையி ல்லை. விடுதியில் சேரு ம்போது மட்டும் இச்சான்றி தழ்களை அளித்தால் போதுமானது. ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்த ப்பட்டுள்ளன. எனவே, மாணவ- மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×