என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிவபழனி தலைமை வகித்தார்.

    வட்டத்தலைவர் ராஜேஷ்குமார் வரவேற்றார். மாநிலச் செயலாளர் எஸ். கோதண்டபாணி சிறப்புறை யாற்றினார்.

    இதில் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகள் முழுவதையும் நிறைவேற்ற வேண்டும், அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை சார்பாக கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசி க்கப்பட்டது. பின்னர் செய்தியா ளர்களிடம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.கோத ண்டபாணி கூறுகையில்,

    சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்கள் ஆக்க வேண்டும் என 40 ஆண்டு காலமாக போராடி வருகிறார்கள்.

    அதன்படி திமுக அரசு சத்துணவு ஊழியர்களின் முழு நேர அரசு ஊழியர்கள் ஆக்குவோ மே என வாக்குறுதி அளித்துவிட்டு அதற்கு மாறாக சத்துணவுத் திட்டத்தை சிதைக்கும் வகையில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களுக்கு கொடுக்கா மல் தனியாருக்கு தரக்கூடிய நிகழ்வை இந்த பேரவை எதிர்க்கிறது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படு த்துவோம் என கூறிவிட்டு ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் சாத்தியம் இல்லை என ஒற்றை வரியில் அவையை அரசு முடித்து விட்டது.

    காங்கிரஸ் அரசு உள்ள மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் போது வாய்ப்புள்ள தமிழகம் எந்தவித கவலையும் இல்லாமல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வஞ்சித்து கொண்டுள்ளது என்பதும் கவனிக்க வேண்டியுள்ளது என இந்த பேரவை கூட்டம் மாநில மையத்தை வலியுறு த்த உள்ளது என்று கூறி னார்.

    • டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
    • சீர்காழி நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது,

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலச்சாலை பகுதியை சேர்ந்த 20 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர் சென்னையி லிருந்து வருகை புரிந்தார். தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் இருந்ததால் சீர்காழி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது டெங்கு அறிகுறிப்பது தெரிய வந்தது.

    இதனை அடுத்து அரசு மருத்துவ மனை டெங்கு சிகிச்சை வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் பெங்களூரில் இருந்து வருகை புரிந்தவருக்கும், சீர்காழி சேர்ந்த மற்றொருவருக்கும் டெங்கு பாதிப்பு இருந்தததை அடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சீர்காழி அரசு மருத்துவம னையில் டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்க ப்பட்டுள்ளது.

    டெங்கு பாதிப்பு அடுத்து சீர்காழி நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் தேவையில்லாத தூக்கி எறியப்பட்ட டயர்கள் தேங்காய் ஓடுகள் , பழைய பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றில் தண்ணீர் தே ங்காதவாறு கண்காணித்து அதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் அறிவுறு த்தியுள்ளது.

    • ரூ. 47 லட்சத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெறுவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.13 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர னுக்கு வழக்கப்ப ட்டுள்ள அரசின் வாகனத்தி ன் சாவியை கலெக்டர் மகாபாரதி வழங்கி தொடங்கிவைத்தார். அப்போது நகராட்சி ஆணை யர் ஹேமலதா, துணை தலைவர் சுப்புராயன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், முழுமதி இமயவரம்பன், மேலாளர் லதா, வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து பழுதடைந்த மணிமண்டபத்தினை தமிழ்நாடு அரசின் உத்தரவு ப்படி, ரூ. 47லட்சத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெ றுவதை கலெக்டர் மகாபா ரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒவ்வொரு பணியையும் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் பணிக ளை தரமாகவும், விரைவாக வும் முடிக்க அறிவுறு த்தினார்.

    இதில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.13 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு முதலமை ச்சர் அரசாணை வெளியி ட்டுள்ளார். அதன்படி, பொது ப்பணி த்துறையி னரால் தளவாட பொருட்க ள் வாங்கும் பணிகள் நடைபெற்று கொண்டி ருக்கின்றது.

    இந்த ஆய்வின்போது பொது ப்பணித்துறை செயற்பொ றியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணிகள்) பாலரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் ராமர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முடல் நீக்கியல் வல்லுநர் ரூபன்ஸ்மித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    • 19 மாற்றுதிறனாளிகள் உபகரணங்கள் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகம் சமூக செயலாற்றுகிற பொறுப்பி ன் கீழ் மாற்று த்திறனா ளிகளுக்கான உதவி உபகரணங்கள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது.

    கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகா ஷ் தலைமையே ற்று முகாமை தொடக்கி வைத்து பேசினார். கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, முடல் நீக்கியல் வல்லுநர் ரூபன்ஸ்மித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முகாமில் கலந்து கொண்ட 19 மாற்றுதி றனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் பொருத்தப்பட்ட வாகனம், ஊன்றுகோல் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கு வதற்கு தேர்வு செய்ய ப்பட்டனர்.

    • மழைநீர் வடிவதில் சிரமமும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருந்து வந்தது.
    • தனியார் இடம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை அளவீடு செய்து ஆய்வு செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே மடவளா கம் சாலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்னர் சிறுபாலம் கல்வெட்டு அமைக்க ப்பட்டது. இதனால் அப்பகுதியில் மழைநீர் வடிவதில் சிரமமும், போக்கு வரத்திற்கு இடையூறாகவும் இருந்து வந்தது. இதனை சீரமைத்திட பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் சரிசெய்து அகலப்படுத்திட மாவட்ட கலெக்டர் மகாபாரதி நெடு ஞ்சாலைத்துறை அதிகாரிக ளை நேரில் வரவழைத்து அறிவுறுத்தினார்.

    இதனையடுத்து கல்வெர்ட் இருக்கும் பகு தியை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சசிகலாதேவி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், பணிதள மேற்பா ர்வையா ளர் விஜயேந்திரன் மற்றும் நகர சர்வேயர், சாலை ஆய்வாளர் உள்ளிட்டோர் அந்த பகுதியில் நெடுஞ்சா லைத்துறை, நகராட்சி, தனியார் இடம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதனை அளவீடு செய்து ஆய்வு செய்தனர். விரைவில் சீரமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நவீன அரிசி ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை சித்தர்க்கா ட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை நிர்வாகம் ஐகோர்ட்டில் அளித்த உறுதி மொழியை மீறி சுற்றுச்சூழல் சீர்கேட்டில் ஈடுபடுவதாக கூறி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல்,

    , ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி மதியழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமணி தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமார் வரவேற்றார். இந்த ஆலையால் ஆயிரக்க ணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக வழக்கறிஞர்கள் கணபதீஸ்வரன், பாலாஜி, விஜயசுந்தரம், ஆறுமுகம், வசந்த் ஆகியோர் விளக்க உரையாற்றினார்.

    இதில் நவீன அரிசி ஆலை நிர்வாகம் ஐகோ ர்ட்டில் அளித்த உறுதிமொ ழிக்கு எதிராக, புழுங்கல் அரிசியை அரைக்க நாள் ஒன்றுக்கு 5 டன் உமியை எரித்து வருவதால் காற்றில் கரித்துகள்கள் பரவி மனிதர்களுக்குசுவாசக் கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட நோய் ஏற்ப டுகிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் நவீன அரிசி ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

    இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஏழு மணி நன்றி கூறினார்.

    • 35 ஏக்கர் நிலம் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தனியாரிடமிருந்து வந்தது.
    • 6.5 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து கையகப்படுத்தி உள்ளனர்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் கோபாலசமுத்திரம், தைக்கா ல் பகுதியில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான அன்னச்ச த்திரத்துக்கான 35 ஏக்கர் நிலம் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தனியாரிடமிருந்து வந்தது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நிலத்தை மீட்கும் பணி நடைபெற்றது.

    இதனை அடுத்து கொள்ளிடம் ஒன்றிய பெரு ந்தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய குழு துணை தலைவர் பானுசேகர், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமி ப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்றினர்.

    மேலும் நில அளவையர்களை கொண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி மற்றும் பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தற்போது அதிகாரிகள் முதற்கட்டமாக 6.5 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து கையகப்படுத்தி யுள்ளனர். மீதமுள்ள நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • செம்பனார்கோயில்- தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் பை, மரக்கன்றுகள் நடுதல், தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் மயிலாடு துறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு செம்பனா ர்கோயில் - தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சா லையில் சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். விழாவில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிவள்ளி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம்.
    • மேலும், கடை சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி சீர்காழி நகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் முக்கூட்டு சாலையில் இயங்கி வந்த பல்பொருள் விற்பனை பெட்டிக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, அங்கு புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் மற்றும் தேனீர் கப்புகள் இருந்ததை கண்டறிந்து பெட்டிக்கடை உரிமையாளரிடம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளரிடம் மாவட்ட கலெக்டர் எச்சரித்தார்.

    மேலும், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட ஈசானிய தெருவில் இயங்கி வரும் பல்பொருள் விற்பனை பெட்டிக்கடையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, கடை உரிமையாளரிடம் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்க ளுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடை சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மகாபாரதி கூறினார்.

    தொடர்ந்து, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை மேற்கூரை கடந்த சில தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததை யொட்டி, மாவட்ட கலெக்டர் துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளி சமையலறை, புதிய கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் எடுக்க ப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆணையரிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, நகராட்சி ஆணையர் ஹேமலதா , நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன் , நகர் மன்ற உறுப்பினர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • 20 ஆயிரம் டன் மூட்டைகள் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    • குறைந்தபட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 93 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த பயிர்கள் ஆகஸ்டு மாதத்தில் துவங்கி அறுவடை செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சேமிப்பு கட்டிடங்கள் கூடிய நெல் கொள்முதல் நிலையம், திறந்தவெளி கொள்முதல் நிலையம் என 120 இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கொள்முதல் நிலையங்களிலும் இதுவரை 35ஆயிரம் டன்களுக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் 20 ஆயிரம் டன் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    15 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடப்பதால் எடை குறைவு ஏற்பட்டால் ஊழியர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து கொள்முதல் நிலைய ஊழியர்கள், விவசாயிகள் தெரிவிக்கையில் குறுவை நெல் எப்போதும் அறுவடை செய்து பல நாட்கள் அடுக்கிவைத்திருந்தால் இயல்பாகவே எடை குறையும்.

    கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப்படாமல் தேங்கி கிடக்கிறது, கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரத்தில் மழையும் பெய்துவருகிறது.

    கடந்த சில வாரங்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் குறைந்த பட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் குறையாமல் தேங்கி கிடக்கிறது,

    இதனால் ஏற்படும் எடை இழப்பிற்கு ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது.

    மேலும் மழைபெய்வதாலும், கால்நடைகள், எலி ஆகியவற்றால் ஏற்படும் சேதத்திற்கும் ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது, கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவத்றகு முன்பு உடனுக்குடன் கிடங்கிற்கு கொண்டு செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுதரக்கோரி போராட்டம் நடந்தது.
    • அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிரை காப்பாற்ற தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்று தரக் கோரி தொடர் முழக்கப் போராட்டம் நடை பெறுகிறது.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சிம்சன், வீரராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மதியழகன் முன்னிலை வகித்தாார்.

    போராட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளான காவிரியில் கர்நாடக வழங்க வேண்டிய சட்டரீ தியான தண்ணீரைஉடனடி யாக திறந்துவிட உச்ச நீதி மன்றம் அவசர வழக்காக எடுத்து உடனே உத்தரவிட வேண்டும், குருவைசாகுபடி யில் பாதிக்க ப்பட்டஅனை த்து விவசாயி களுக்கும் ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரியில் தமிழகத்துக்கு மாத வாரிய தண்ணீர் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கர்நாடக அரசு தர மறுத்தால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து தண்ணீர் வழங்கிட வேண்டும்.

    உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    போராட்டத்தை தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொருளாளர் பெருமாள் தொடங்கி வைத்தார்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், பொதுச் செயலாளர் மாசிலா மணி, டெல்டா பாசன விவசாய சங்க தலைவர் அன்பழகன், காவிரி டெல்டா பாசனக்காரர்கள் முன்னேற்ற சங்கம் தலைவர் குரு கோபி கணேசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், உள்ளிட்ட ஏராளமான அனைத்து கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    • பனமங்கலம் பகுதியில் குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
    • கூண்டுகள் அமைத்து 9 குரங்குகளை பிடித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பனமங்கலம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

    வீட்டு விலங்குகளான ஆடு,மாடுகளை கடித்தும் வீட்டுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடியும் பொதுமக்களை மிகவும் அவதிக்கு உள்ளாக்கியது. குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த கோரி சீர்காழி நகராட்சியில் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனை அடுத்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் முழுமதி இமயவரம்பன் சொந்த செலவில் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த முடிவெடுத்தார்.

    தொடர்ந்து குரங்கு பிடிக்கும் நபர்களை அழைத்து வந்து கூண்டுகள் அமைத்து 9 குரங்குகளை பிடித்தனர்.குரங்குகள் பிடிக்கப்பட்டது குறித்து சீர்காழி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் விரைந்து வந்த சீர்காழி வனத்துறை வனவரிடம் குரங்குகளை ஒப்படைத்தனர்.

    இதனை யடுத்து பிடிக்கப்பட்ட குரங்குகள் அனைத்தையும் வனத்துறையினர் மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டு சென்றனர்.

    ×