search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்டம்
    X

    சீர்காழியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது.

    சீர்காழியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்டம்

    • அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
    • தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிவபழனி தலைமை வகித்தார்.

    வட்டத்தலைவர் ராஜேஷ்குமார் வரவேற்றார். மாநிலச் செயலாளர் எஸ். கோதண்டபாணி சிறப்புறை யாற்றினார்.

    இதில் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகள் முழுவதையும் நிறைவேற்ற வேண்டும், அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை சார்பாக கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசி க்கப்பட்டது. பின்னர் செய்தியா ளர்களிடம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.கோத ண்டபாணி கூறுகையில்,

    சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்கள் ஆக்க வேண்டும் என 40 ஆண்டு காலமாக போராடி வருகிறார்கள்.

    அதன்படி திமுக அரசு சத்துணவு ஊழியர்களின் முழு நேர அரசு ஊழியர்கள் ஆக்குவோ மே என வாக்குறுதி அளித்துவிட்டு அதற்கு மாறாக சத்துணவுத் திட்டத்தை சிதைக்கும் வகையில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களுக்கு கொடுக்கா மல் தனியாருக்கு தரக்கூடிய நிகழ்வை இந்த பேரவை எதிர்க்கிறது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படு த்துவோம் என கூறிவிட்டு ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் சாத்தியம் இல்லை என ஒற்றை வரியில் அவையை அரசு முடித்து விட்டது.

    காங்கிரஸ் அரசு உள்ள மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் போது வாய்ப்புள்ள தமிழகம் எந்தவித கவலையும் இல்லாமல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வஞ்சித்து கொண்டுள்ளது என்பதும் கவனிக்க வேண்டியுள்ளது என இந்த பேரவை கூட்டம் மாநில மையத்தை வலியுறு த்த உள்ளது என்று கூறி னார்.

    Next Story
    ×