search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி நகர்மன்ற தலைவருக்கு அரசு வாகனம் வழங்கல்
    X

    நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரிக்கு அரசு வாகனத்தின் சாவியை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    சீர்காழி நகர்மன்ற தலைவருக்கு அரசு வாகனம் வழங்கல்

    • ரூ. 47 லட்சத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெறுவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.13 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர னுக்கு வழக்கப்ப ட்டுள்ள அரசின் வாகனத்தி ன் சாவியை கலெக்டர் மகாபாரதி வழங்கி தொடங்கிவைத்தார். அப்போது நகராட்சி ஆணை யர் ஹேமலதா, துணை தலைவர் சுப்புராயன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், முழுமதி இமயவரம்பன், மேலாளர் லதா, வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து பழுதடைந்த மணிமண்டபத்தினை தமிழ்நாடு அரசின் உத்தரவு ப்படி, ரூ. 47லட்சத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெ றுவதை கலெக்டர் மகாபா ரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒவ்வொரு பணியையும் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் பணிக ளை தரமாகவும், விரைவாக வும் முடிக்க அறிவுறு த்தினார்.

    இதில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.13 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு முதலமை ச்சர் அரசாணை வெளியி ட்டுள்ளார். அதன்படி, பொது ப்பணி த்துறையி னரால் தளவாட பொருட்க ள் வாங்கும் பணிகள் நடைபெற்று கொண்டி ருக்கின்றது.

    இந்த ஆய்வின்போது பொது ப்பணித்துறை செயற்பொ றியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணிகள்) பாலரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் ராமர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×