தமிழகத்தில் ஊர்க்காவல் படையினருக்கு பணி நாட்கள், ஊதியம் அதிகரிக்க வேண்டும்

ஆந்திராவில் தினமும் ரூ.600 ஊதியத்துடன் மாதம் ரூ. 18,000.பணி நாட்கள் உயர்த்தி அதிகரிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊர்க்காவல் படையினருக்கு பணி நாட்கள், ஊதியம் அதிகரிக்க வேண்டும்
Published on

தரங்கம்பாடி:

தமிழ்நாடு முழுவதும் சுமார் 16 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் உள்ளனர்.

ஆண்கள் மட்டும ல்லாமல் பெண்களும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ்நாடு காவல்துறை க்கு உதவியாக சாலை பாதுகாப்பு, போக்குவ ரத்து சீரமைப்பு, திருவிழாக்கள, அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள், பேரிடர் காலங்களில் உதவிடுதல், பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சேவையை ஆற்றுகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு தமிழ்நாட்டில் பணி நாள் மற்றும் ஊதியம் மிக குறைவு.

ஆந்திராவில் தினமும் ரூ.600 ஊதியத்துடன் மாதம் ரூ. 18,000, கேரளாவில் தினமும் ரூ.626 ஊதியத்துடன் ரூ. 18780, பாண்டிச்சேரியில்791 ஊதியத்துடன் ரூ.23730, கர்நாடகாவில் 400 ஊதியத்துடன் ரூ.12000பெறுகிறார்கள்.

அவ்வாறு இருக்கின்ற பொழுது தமிழ்நாட்டில் மட்டும் வெறும் ஐந்து பணி நாட்களுடன், நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் மாதம் ரூ.2800 ஊதியம் என்பது மிகவும் குறைவானதாகும்.

மேலும் அவர்களின் முழு கவனமும் இப்பணியைச் சார்ந்தே இருப்பதினால், அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அரசின் முழுமுதற் கடமையாக்கும்.

குறிப்பாக தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூட ஊர்க்காவல் படை யினரின் நலன் காக்கப்படும் என்றும்,அவர்களின் பணி நாட்கள் உயர்த்தி அதிகரிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த வாக்குறுதியை காப்பாற்ற முதல்- அமைச்சர் நடவடிக்தகை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com