என் மலர்
மயிலாடுதுறை
- பேரணியை ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தொடங்கி வைத்தார்.
- முக்கிய நகர வீதிகளில் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்வாணன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர்.
பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மயிலாடுதுறை முக்கிய நகர வீதிகளில் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்றது. அப்போது சுகாதாரத்தை பேணி காப்போம், தூய்மையான ஊராட்சிகளை பாதுகாப்போம். சுத்தமான குடிநீர், குப்பை இல்லா ஊராட்சி, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட சேவைகளை துரிதமாக செயல்ப டுத்துவோம் என்று கூறி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் காளி பாபு, மாநிலத் துணைச் செயலாளர் கொக்கூர் வீரமணி துணைத் தலைவர் மதியழகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் இந்திரா, ராஜசேகர், கலியபெருமாள், செல்வராஜ் , மயிலாடுதுறை குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றிய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- புனித நீர் கொண்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.
- விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை நகரில் பழமைவாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமானது. தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றின் நடு மையத்தில் அமைந்துள்ள இந்த சித்தி விநாயகர் என்று அழைக்கப்படும். இந்தகோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை அமைக்கப்பட்டு அதில் புனித நீர் கொண்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.
தொடர்ந்து நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மஹா பூர்ணாஹூதி நடைபெற்று, யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார் கடங்க ங்களை சுமந்து வந்து மல்லாரி இசைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீசித்தி விநாயகருக்கு கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் கருவரையில் உள்ள வினாயகர் சிலைக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் பலிபீடம் ஆகிய இடங்களில் கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காட்டப்பட்டது. விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரி யார் சுவாமிகள். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஆரோக்கியமதன், விழா ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், நகர மன்ற தலைவர் குண்டாமணி ஆகியோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- குப்பைகளை தரம் பிரித்து வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வரும் காலத்தில் நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
சீர்காழி:
சீர்காழி நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையர் ஹேமலதா, துணை தலைவர் சுப்பராயன், பொறியாளர் குமார், பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் ராஜகணேஷ் மன்ற பொருட்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
ராமு (தி.மு.க.):- கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் இருந்து உள்ள கழிவுநீர் கால்வாய் 20 ஆண்டுகளாக தூய்மைப்படுத்தப்படாமல் மண்தூர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்றார்.
நாகரத்தினம் செந்தில் (அ.தி.மு.க.):- பால சுப்ரமணியன் நகர் பகுதியில் தெரு மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும், சாலை அமைத்து தர வேண்டும்.பாஸ்கரன்:- குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்படுவதில்லை. தரம் பிரித்து வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயந்தி பாபு:- 14-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாய் பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளதால் அதனை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். முபாரக் (தி.மு.க.):- சீர்காழி நகராட்சி மூலம் 24 வார்டுகளுக்கும் சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்து வந்த நிலையில், அங்கு குடிநீர் மோட்டார் பழுதால் கடந்த சில மாதங்களாக நகராட்சி வளாகத்திலேயே ஆழ்குழாய் அமைத்து நிலத்தடிநீர் அதிகளவு உறிஞ்சப்படுவதால் வரும் காலத்தில் நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
இதற்கு பதில் அளித்து தலைவர் துர்கா ராஜசேகரன் (தி.மு.க.) பேசுகையில்:-
9-வது வார்டில் உள்ள குளம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றிக்கு டாக்டர் கலைஞர் நூற்றாண்டு குளம் என பெயர் வைக்க மன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மழைகாலம் தொடங்கி உள்ளதால் குடியிருப்புகளை மழைநீர் சூழாமல் இருக்க வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படும்.
உறுப்பி னர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிதி நிலைமைக்கு ஏற்ப சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 85 மனுக்கள் ஏற்கப்பட்டது.
- கோரிக்கை மற்றும் புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாமில் 96 பயனாளிகளுக்கு ரூ.12.89 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முகாமில், பாலையூர், காஞ்சிவாய், நல்லாவூர், ஸ்ரீகண்டபுரம் ஆகிய கிராம ங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமை யொட்டி செப்டம்பர் 5-ஆம் தேதியில் இருந்து அலுவலர்கள் பாலையூர் கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் இருந்து பெற்ற 101 கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்ததில் 85 மனுக்கள் ஏற்கப்பட்டது. 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
அதன்படி, வருவாய் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா தலா ரூ.20,000 மதிப்பிலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் இதர உதவித்தொகை 34 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலும், திருமண உதவித்தொகை (மகன் திருமணம்) 11 பயனாளிகளுக்கு தலா ரூ.8,000 மதிப்பிலும், திருமண உதவித்தொகை (மகள் திருமணம்) 5 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பிலும், இயற்கை மரண உதவி த்தொகை 21 பயனாளிகளுக்கு தலா ரூ.21,500 உள்பட மொத்தம் 96 நபர்களுக்கு ரூ.12,89,700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோர் வழங்கினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை 7092255255 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் தெரிவிக்கலாம். அந்த கோரிக்கை மற்றும் புகார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தித் தரப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, சமூக பாதுகாப்பு த் திட்ட தனித்துணை ஆட்சியர் கண்மணி, கோட்டாட்சியர் யுரேகா, ஒன்றியக்குழுத் தலைவர் மகேந்திரன், வட்டாட்சியர் சித்ரா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கழிவுநீர் வெளியேறி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.
- பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட இரட்டைகாளியம்மன் கோயில் தெருவில், பழைய பேருந்துநிலையகட்டண கழிவறை கழிவுநீர் வெளியேறி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதியடை ந்துவந்தனர்.
இதற்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தியதின்பேரில் அப்பகுதி நகர்மன்ற உறுப்பி னர் சாமிநாதன் நகர்மன்ற தலைவர் துர்காராஜ சேகரனிடம் கோரிக்கை வைத்தார்.
அதன்படி கட்டண கழிவறை கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க நகராட்சி சார்பில் கழிவுநீர் தொட்டி அமைத்திடவும் கட்டண கழிவறை சுற்றுசுவர் அமைத்திடவும் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு பொதுநிதியில் ரூ.5லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து பணிகள் தொடங்கிட நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், முபாரக், தேவதாஸ் உடனிருந்தனர்.
- ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்து 500 கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கப்பட்டது.
- போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி நாகலெட்சுமி என்பவர் பட்டா பெயர் மாற்றம் கேட்டு பொறையாறு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
அதனை பரிந்துரை செய்ய பொறையாரில் (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலராக செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து விஜய் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவியரூ.2500 விஜய், கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் கொடுத்தார்.
அந்த பணத்தை பாண்டியராஜன் பெற்றபோது மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி மனோகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருள் பிரியா மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்த பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சம்பவம் பொறையார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சுவாமி அறை அருகே பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு அதில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
- வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகளை சீர்காழி சட்டைநாதர் கோவிலில் வைக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரியும்,முன்னாள் ஐ.ஜி.யுமான பொன்.மாணிக்கவேல் வருகை புரிந்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கணக்கர் செந்தில் கோயில் ஸ்தலவரலாறு புத்தகம் கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர்சுவாமி, சட்டைநாதர்சுவாமி, மலைமீது அருள்பாலிக்கும் தோணியப்பர்-உமாம கேஸ்வரி அம்மன்,சட்டைநாதர் சுவாமி மற்றும் திருஞானசம்பந்தர்,திருநிலைநாயகிஅம்மன் சுவாமி சந்நிதிகளில் பொன்.மாணிக்கவேல் சுவாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் சட்டைநாதர்கோயில் வளாகத்தில் கண்டெடுக்க ப்பட்ட 23 சுவாமி ஐம்பொன் திருமேனிகள்,தேவாரபதிகம் தாங்கிய செப்பேடுகள் ஆகியவை கோயில் பள்ளியறை அருகே தனிபாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு பூட்டி சில்வைக்கப்பட்டுள்ளது.
இதனை பொன்.மாணிக்கவேல் பார்வையிட்டு சுவாமி திருமேனிகளின் காலம் மற்றும் அதன் வரலாறு ஆகியவை குறித்து விவாதித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், சீர்காழி சட்டைநாதர் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தெய்வ திருமேனிகள் சட்டைநாதர் கோயிலில்தான் வைக்க வேண்டும்.
இதனை அரசு கையகப்படுத்தக் கூடாது. பூமிக்கு அடியில் பொருள்கள் அல்லது பொக்கிஷங்கள் கிடைத்தால் தான் அரசு கையகப்படுத்த வேண்டும்.
தெய்வ திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது. அப்படி கையகப்படுத்த நினைத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு அரசை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.
பேட்டியின் போது அ.தி.மு.க.வை சேர்ந்தவரும், தமிழ் சங்கத் தலைவருமான மார்கோனி, வர்த்தக சங்க துணை தலைவர் கோவி.நடராஜன், மருந்தாளுனர் முரளிதரன் உடனிருந்தனர்.
- பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
- 101 தென்னங்கன்றுகள் மண்ணரிப்பை தடுக்கும் பொருட்டு நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் நடப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தாழ்ந்தொண்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்று வந்தது.
அதன் நிறைவாக திருமுல்லைவாசல் கடற்கரை ஓரங்களில் நெகிழிகள் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை எடுத்து தூய்மைப்படுத்தும் பணிகளும், அதன்பின்னர் பள்ளியின் ஓவிய ஆசிரியர் மகாதீர் குடும்பத்தார் அளித்த 101 தென்னங்கன்றுகளை மண்ணரிப்பை தடுக்கும் பொருட்டு நாட்டு நலப்பணி த்திட்ட மாணவர்களால் நடப்பட்டது.
உதவித் தலை மையாசிரியரும், திட்ட அலுவலருமான ராசேந்திரன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டார்.
இதில் மாணவர்கள்,கிராமமக்கள் பங்கேற்றனர்.
- திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 4-ம் இடம் பிடித்தது.
- இறுதி போட்டியில் வெற்றிபெற்று ரூ.1 லட்சம் ரொக்க பரிசை தட்டிச்சென்றது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி அக்.27-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில், சென்னை, கோயமுத்தூர், திருச்சி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு, தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் க.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் க.அறிவுச்செல்வன் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தார். ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் வரவேற்றார்.
முதல்நாள் போட்டியை மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் துவக்கி வைத்தார்.நாக்-அவுட் முறையில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில், தமிழ்நாடு காவல்துறை அணியும் வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணியும் மோதின. இதேபோல், சென்னை கட்டங்குடி பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணியும், திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணியும், பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணியும் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இப்போட்டியை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியின் முடிவில், தமிழ்நாடு காவல்துறை அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ரூ.1 லட்சம் ரொக்க பரிசை தட்டிச் சென்றது.
சென்னை கட்டங்குடி பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணி இரண்டாம் இடம் பிடித்து ரூ 70ஆயிரம் ரொக்கப் பரிசினையும், வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணி மூன்றாம் இடம் பிடித்து ரூ 60,000 ரொக்க பரிசினையும், திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் இடம் பிடித்து ரூ. 40,000 ரொக்க பரிசை பெற்றன. மேலும் காலிறுதிப் போட்டியில் வெளியேறிய நான்கு அணிகளுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
பரிசுகளை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ வழங்கி பாராட்டி பேசினார்.
இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி மற்றும் ஒன்றிய, நகர மற்றும் பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
- சீர்காழி நகரின் பல்வேறு வீதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.
- அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா என ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழியில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு வீதிகளில் பட்டாசு கடைகள் செயல்பட்டுவருகின்றனர். இந்த கடைகளில் உதவி கலெக்டர் அர்ச்சனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பட்டாசு கடைகளில்உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா பாது காப்பான முறையில் கடைகளில் பட்டாசுகள் விற்பனை நடைபெறுகிறதா, அவசர காலங்களில் வெளியேறும் வகையில் இரு வழிகள் உள்ளனவா, தீ தடுப்பு சாதனங்கள், மணல், தண்ணீர் ஆகியவை தயார் நிலையில் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதா என கோட்டாட்சியர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் ஜோதி, காவல் உதவி ஆய்வாளர் சீனிவா சன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா உடனிருந்தனர்.
- சீர்காழியில் 2.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.
- கழிவுநீர் வடிகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீர்காழி:
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இரண்டு நாட்கள் லேசான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் சட்டநாதபுரம் கொள்ளிடம் திருமுல்லைவாசல் திருவெண்காடு பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சீர்காழியில் 2.8 சென்டிமீட்டர் மழையும் கொள்ளிடத்தில் 2.46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் பகுதி சாலைகளில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாகவே இயக்கி வருகின்றனர்.
மேலும் வைத்தீஸ்வரன் கோவில் நகர் பகுதிகளில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் தேங்கிக் கிடப்பதால் நோய் தொற்று ஏற்படும் எனவும் முறையான கழிவுநீர் வடிகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வதான்யேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தரங்கம்பாடி:
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் பௌ ர்ணமியன்று சிவாலயங்களி ல் அன்னாபி ஷேகம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நிகழாண்டு ஐப்பசி மாத பௌர்ண மியையொட்டி மயிலாடு துறை யில் பல்வேறு சிவாலயங்களில் அன்னா பிஷேகம் நடைபெ ற்றது. சேந்தங்குடி வள்ளலார் கோயில் என்று அழை க்கப்படும் ஸ்ரீ வதான்யே ஸ்வரர் கோயிலில் சுவாமி க்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும் காய்கறிகள் கொண்டு அலங்கரி க்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்ப ட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அன்னாபிஷேக தரிசனம் செய்தனர். இதேபோல், அபயா ம்பிகை மயில் உருவக்கொ ண்டு சிவனை வழிபட்ட தலமான மயிலாடு துறை மாயூரநாதர் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. திருவா வடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் மாயூரநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்ப ட்டு, அன்னத்தால் அபிஷே கம் செய்யப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்த ர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் பல்வேறு கோயில்க ளில் நடைபெற்ற அன்னா பிஷேக விழாவில் ஏராளமா ன பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.






