என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரையில் சிறு, குறுதொழில் நிறுவனங்கள் ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் 20-ந் தேதி நடைபெறுகிறது.
    • உத்தேச திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட சிறு, குறு தொழில் நிறுவன பிரதிநிதிகள் இன்று காலை நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழக சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் சமீபத்தில் முதல்- அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மின் கட்டணங்களை குறைத்தால் மட்டுமே சிறுதொழில் நிறு வனங்கள் தங்கு தடையின்றி இயங்க முடியும். எனவே மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மனு கொடுத்தோம்.

    ஆனால் அரசு எங்களின் கோரிக்கைகளை நிறை வேற்றவில்லை. எனவே சிறு, குறுந்தொழில் நிறுவ னங்கள் பாதிப்பு அடைந்து உள்ளது. இந்த நிலையில் திருச்சி செயற்குழு கூட்ட தீர்மானத்தின்படி தமிழகம் முழுவதும் வருகிற 20-ந் தேதி ஒரு நாள் கதவடைப்பு செய்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதில் மதுரை மாவட்ட த்தில் உள்ள 20 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்புகள் பங்கேற்க உள்ளன. அன்றைய தினம் காலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    தாழ்வழுத்த மின் சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுககு, 50 கிலோவாட் வரை ரூ.35 ஆகவும், 51 முதல் 112 கிலோவாட் வரை ரூ.75 ஆகவும் குறைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உச்ச பயன்பாடு நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத் திற்கு 25 சதவீத மின் கட்டண உயர்வை 15 சதவீதம் ஆக குறைப்பது தொடர்பாக அரசு உத்தரவு வெளியிட்டு உள்ளது. ஆனாலும் இதனால் பெரிய அளவில் பலன் இல்லை.

    தமிழக மின்வாரியத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல் கால தாமதப் படுத்து கின்றனர். லட்சக்கணக்கில் பணம் செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பின் அளவை குறைக்க முடியும் என்று தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதனால் எண்ணற்ற சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. நகர பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளை 99 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம் என்ற உத்தேச திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் சிறு தொழில் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனாலும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.

    கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட சிறு, குறுந் தொழில் நிறுவனங்களை மீட்பது தொடர்பான உயர் மட்டக் குழுவின் 50 பரிந்துரைகளை உடனடி யாக செயல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக் ககளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மதுரையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21-ந் தேதி நடக்கிறது.
    • 50-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தேர்வு செய்ய உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவ னங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளை ஞர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவ னங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள த்தில் சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப் படத்துடன் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை)காலை 10 மணிக்கு மதுரை, புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறு வதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது. மேற்கண்ட தகவல் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • சிறுமி கர்ப்பமானார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உடன்பட்டியை சேர்ந்தவர் குமார்(வயது27), வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். ஒரு வரு டத்திற்கு முன்பு இவருக்கும், மாங்கு ளப்பட்டியை சேர்ந்த ஒரு சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறுமி கர்ப்பமானார். இந்த நிலையில் பிரசவத்திற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவருக்கு 18 வயது பூர்த்தியாகமலேயே திருமணம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் கொட்டாம்பட்டி சமூகநல அலுவலர் பஞ்சு விற்கு தகவல் தெரிவித்தனர். அவர் மேற்கொண்ட விசார ணையில் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து மேலூர் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு நடந்த திருமணம் குறித்து பஞ்சு புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி சிறுமியை திருமணம் செய்த குமார், உடந்தையாக இருந்த தாய் சின்னம்மா, உறவினர் செல்வி ஆகியோர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
    • சிசிடிவி காமிரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலூர்

    சிவகங்கை மாவட்டம் கட்டாணி பட்டி அருகே உள்ள பொன்குண்டு பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது55). இவர் இடத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர் கரூரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மாதத்தின் பெரும்பாலான நாட்களில் சொந்த ஊரில் தங்கும் கண்ணன் மேலூருக்கு வேலை நிமித்தமாக சென்று வருவது உண்டு. அதன்படி நேற்று மதியம் கண்ணன் தனது மொபட்டில் மேலூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    நான்கு வழிச்சாலையில் உள்ள ஆட்டுக்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணனை மறித்து சரமாரியாரக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் தொழில் முன்விரோதத்தில் கண்ணன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனிப்படை

    இதனிடையே கண்ண னை கொலை செய்து காரில் தப்பிய கொலை யாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மன்னவன் (மேலூர்), சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு (ஊமச்சிக்குளம்) ஆகியோர் தலைமையில் 2 தனிப்ப டைகள் அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலை நடந்த பகுதியில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொலையாளிகள் சிக்கிய பின்பே கொலைக்கான காரணம் தெரியவரும்.

    • திருமங்கலத்தில் சாலையோர வியாபாரிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
    • வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் பல்வேறு பகுதிகளிலும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் 12 மற்றும் 13 வது வார்டுகளில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த சாலை யோர வியாபாரிகள்

    100-க்கும் மேற்பட்டவர்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    விழாவில் மணிமாறன் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கான எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி வருவதால் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தற்போது தி.மு.க.வை நாடிவரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    விரைவில் குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், நகர அவை தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிமாறன் ஒவ்வொரு வீடாக சென்று தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்த்தார்.

    • மின் கட்டண உயர்வை கண்டித்து கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் வருகிற 20-ந் தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடக்கிறது.
    • அரசு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டுமென கப்பலூர் தொழிலாளர்கள் சிட்கோ சங்கத்தலைவர் ரகுநாதராஜா தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சிட்கோ தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. பல ஏக்கரில் உள்ள இந்த தொழிற் பேட்டையில் 500-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்து அங்கிருந்து விற்ப னைக்கு அனுப்பி வைக்கின்றன. இந்த சிட்கோ மூலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அண்மையில் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது மாநிலம் முழுவதும் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் நிலங்களை ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி குத்தகைக்கு விடாமல் புதிதாக 99 ஆண்டுகளுக்கு குத்தகை அல்லது வாடகைக்கு விட முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    மேலும் சிட்கோவில் இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கான நிலையான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்ட 2 முடிவுகளுக்கும் சிட்கோ தொழிலதிபர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேற்கண்ட உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கையும் வைக்கப் பட்டது. ஆனால் தமிழக அரசு இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க வில்லை.

    இதனை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) சிட்கோ தொழிற்பேட்டைகளில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கப்பலூரில் உள்ள சிட்கோ தொழிற் பேட்டையிலும் உற்பத்தி நிறுத்த போராட்டம் அன்றைய நாளில் நடைபெறுகிறது. அப்போது கோரிக்கைகள் தொடர்பாக மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.

    எனவே அரசு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டுமென கப்பலூர் தொழிலாளர்கள் சிட்கோ சங்கத்தலைவர் ரகுநாதராஜா தெரிவித்துள்ளார்.

    • தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அலங்காநல்லூர்

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த தினத்தையொட்டி அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன், பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர் ஜெயராமன் முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    இேதபோன்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வாடிப்பட்டி

    ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வாடிப்பட்டியில் காங்கிரஸ் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் மகேசுவரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சோனைமுத்து, வட்டார தலைவர்கள் குருநாதன், பழனிவேல், காந்தி, சுப்பாராயல் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடராஜன் தொடங்கி வைத்தார்.

    நகர தலைவர் முருகானந்தம் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் வைரமணி, சந்திரசேகர், வருசைமுகமது, அய்யங்காளை, மணி, முருகன், கணேசன், பிரசாத், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

    • மதுரையில் விஷம் குடித்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • 4 ஆயிரத்து 543 பேர் குணமடைந்தனர் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது

    மதுரை

    சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர், மதுரை அரசு மருத்து வமனை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பி யிருந்தார். அதற்கு மருத்துவ மனை நிர்வாகம் பதில் அளித்தது. அதில் மதுரை மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு 2 ஆயிரத்து 380 பேரும், 2022-ம் ஆண்டு 2 ஆயிரத்து 550 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 930 பேர் விஷம் குடித்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் 2021-ம் ஆண்டு 180 பேரும், 2022-ம் ஆண்டு 207 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    அதாவது 2 ஆண்டுகளில் மட்டும் 387 பேர் விஷம் குடித்து இறந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் விஷம் குடித்தோருக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக பிரிவு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    அங்கு மருத்துவ குழுவினரின் துரித சிகிச்சை காரணமாக 4 ஆயிரத்து 543 பேர் குணமடைந்தனர் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • தன்னம்பிக்கை இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்று எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார்.
    • ஏற்பாட்டை மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

    மதுரை

    மதுரையின் அட்சய பாத்திரம் அமைப்பு மூலம் ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு 710 நாளை எட்டியது.

    இதையொட்டி மதுரை சொக்கிகுளம் ஜே.சி அரங்கில் கொடை யாளர்களுக்கு அட்சய சேவா ரத்னா விருது வழங்கும் விழா நடந்தது. டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். ரோட்டரி முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ஆடிட்டர் சேது மாதவா முன்னிலை வகித்தார்.

    எஸ்.வி.எஸ். கடலை மாவு நிறுவன நிர்வாக பங்குதாரர் சூரஜ் சுந்தர சங்கர் வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 18 பேருக்கு அட்சய சேவா ரத்னா விருதை வழங்கினார்.

    டாக்டர் உஷா கிம், மின்வாரிய முன்னாள் கூடுதல் தலைமை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என்.எல். முன்னாள் உதவி பொது மேலாளர் கிருஷ்ண மூர்த்தி, காந்தி பொட்டல் சிலை பராமரிப்பு கமிட்டி தலைவர் சாமிக் காளை, நானோ சொல்யூ ஷன்ஸ் நிர்வாக இயக்குநர் முகமது உமர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க துணைத் தலைவர் இளங்கோவன், அமுதா அக்சயா டிரஸ்ட் நிர்வாகி அமுத லட்சுமி, ஆச்சார்யா எஜுகேஷன் நிர்வாக இயக்குனர் கண்ணன், எஸ்.எஸ். காலனி செல்வி கிளினிக் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுவாமிநாதன். சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, ஆன்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகி ரத்தினவேல்சுவாமி, எஸ்.வி.எஸ். கடலை மாவு நிர்வாக பங்குதாரர் சூரஜ் சுந்தர சங்கர், உசிலம்பட்டி தமிழ் ஒளி தொலைக்காட்சி நிறுவனர் தமிழரசன், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் நாகரத்தினம், மதுரை பாண்டியன் ரோட்டரி சங்க செயலாளர் சலீம் உள்பட 15 பேர் அட்சய சேவா ரத்னா விருதை பெற்றனர்.

    விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசியதாவது:-

    உங்களைச் சுற்றி உங்களை தாழ்வாக கருது பவர்களை விட உங்களை ஊக்கப்படுத்தும் நல்லவர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மனிதனுக்கு இரு சந்தர்ப் பங்களில் வேகம் வர வேண்டும். ஒன்று உங்களை குட்டுகிற போது மற்றொன்று தட்டிக் கொடுக்கும் போது. இந்த இரு சந்தர்ப்பங்களிலும் வேகம் வராவிட்டால் மனிதன் சாதிப்பது கடினம்.

    தன்னம்பிக்கை ஒவ்வொரு மனிதனுக்கும் மூச்சுக்காற்று. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் உலகில் எதையும் சாதிக்கலாம். பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பிலேயே வரவேண்டும். குழந்தைகளுக்கு பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை இளமையிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

    • பட்டப்பகலில் 4 வழிச் சாலையில் மர்ம நபர்கள் அரங்கேற்றிய இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர்:

    சிவகங்கை மாவட்டம் கட்டாணிபட்டியை அடுத்து உள்ள பொன்குண்டுபட்டி கிராமத்ைத சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் இன்று மதியம் வேலை நிமித்தமாக மதுரை மாவட்டம் மேலூருக்கு புறப்பட்டார். மேலூர் 4 வழிச்சாலையில் உள்ள ஆட்டுக்குளம் பகுதியில் வந்தபோது கருப்பு நிற கார் பின்தொடர்ந்து வந்தது.

    ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென அந்த கார் கண்ணனை மறித்தது. காரில் இருந்து அரிவாள், வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய மர்ம நபர்கள் கண்ணனை கீழே தள்ளி சரமாரியாக வெட்டினர். உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

    உயிருக்கு போராடிய கண்ணனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை குறித்து தகவல் அறிந்த மேலூர் டிஎஸ்.பி. ஆர்லியன்ஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

    பட்டப்பகலில் 4 வழிச் சாலையில் மர்ம நபர்கள் அரங்கேற்றிய இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    முன்விரோதம் காரணமாக கண்ணன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலையாளிகள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பட்டா மாறுதல்களுக்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்ற பிறகு கையெழுத்திடுகின்றனர்.
    • உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை ஐகோர்ட்டில் அழகப்பன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா அமராவதி புதூர் கிராமத்தில் எனது விவசாய நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 2019-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டு வருவாய் ஆவணங்களின் அடிப்ப டையில் ஆக்கிரமிப்புகளை உரிய காலத்திற்குள் அகற்ற உத்தரவிட்டிருந்தனர்.

    நீதிமன்றம் வழங்கிய அவகாசம் முடிந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர், அதிகாரிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    நீதிபதிகள் கலெக்டரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டும் அது தொடர்பாக ஏன்? எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுக்க வில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றனர்.

    பல்வேறு வழக்குகளிலும் இதுபோன்ற நிலையே நீடிக்கின்றன. இதனால் கடந்த 100 நாட்களில் 600-க்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற முடியவில்லை என்றால் சட்டத்தின் அடிப்படையில் கூடுதல் கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். நீதிமன்றம் கால அவகாசம் வழங்க தயாராக உள்ளது. ஆனால் அவ்வாறாக ஏன்? எந்தவித மனுவும் தாக்கல் செய்வதில்லை.

    இத்தகைய செயல்கள் ஆக்கிரமிப்பாளர்களை அதிகாரிகள் ஊக்குவிக்கும் விதமாகவே அமைகிறது. மேலும் ஒவ்வொரு தாசில்தார் அலுவலகங்க ளில் பட்டா மாறுதல் செய்வதற்கு லஞ்சம் பெற்றுக் கொண்டே அதிகாரிகள் பட்டா மாறுதல் செய்கின்றனர். இதற்காக தனி புரோக்கர்கள் செயல்படுகின்றனர் என நீதிபதிகள் வேதனை தெரி வித்தனர்.

    லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் நீதிமன்ற உத்தரவை சட்டத்தின் அடிப்படையில் எப்படி பின்பற்ற வேண்டும் என அனைத்து தாசில்தாருக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்த வேண்டும்.

    அதன் பின்பும் முறையாக நடவடிக்கை எடுக்காத தாசில்தார் மீது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து கலெக்டர் தரப்பில் சம்பந்தப்பட்ட மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி மாவட்ட கலெக்டர் மீதான அவ மதிப்பு வழக்கினை முடித்து வைத்தார். மனுதாரரிடம் மேலும் கோரிக்கை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


    ×