search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாடிப்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    வாடிப்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    • வாடிப்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வாடிப்பட்டி

    ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வாடிப்பட்டியில் காங்கிரஸ் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் மகேசுவரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சோனைமுத்து, வட்டார தலைவர்கள் குருநாதன், பழனிவேல், காந்தி, சுப்பாராயல் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடராஜன் தொடங்கி வைத்தார்.

    நகர தலைவர் முருகானந்தம் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் வைரமணி, சந்திரசேகர், வருசைமுகமது, அய்யங்காளை, மணி, முருகன், கணேசன், பிரசாத், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×