search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.வில் இணைந்த சாலையோர வியாபாரிகள்
    X

    தி.மு.க.வில் இணைந்த சாலையோர வியாபாரிகள்

    • திருமங்கலத்தில் சாலையோர வியாபாரிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
    • வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் பல்வேறு பகுதிகளிலும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் 12 மற்றும் 13 வது வார்டுகளில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த சாலை யோர வியாபாரிகள்

    100-க்கும் மேற்பட்டவர்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    விழாவில் மணிமாறன் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கான எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி வருவதால் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தற்போது தி.மு.க.வை நாடிவரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    விரைவில் குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், நகர அவை தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிமாறன் ஒவ்வொரு வீடாக சென்று தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்த்தார்.

    Next Story
    ×