என் மலர்tooltip icon

    மதுரை

    • கிரிவலப்பாதையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
    • பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பரங்குன்றம்,

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    மதுரைக்கு மிக அருகாமையில் இருப்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர் கள் திருப்பரங் குன்றத்திற்கும் வந்து சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பெரியரத வீதி பேருந்து நிலையம் அருகே செல்லும் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் பெரியரத வீதி கிரிவலப் பாதை செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கழிவுநீர் வழியாகவே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

    மேலும் அப்பகுதியில் வணிக வளாகங்கள் அதிக அளவில் இருப்ப தால் வியாபாரிகளும், கடை களுக்கு வரும் வாடிக்கை யாளர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகா ரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே சுகாதார சீர்கேடாக இருக்கும் கிரிவலப் பாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • சகோதரி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    மதுரை

    மதுரை அச்சம்பத்து பாக்கியலட்சுமி நகரை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் அனுப்பானடியில் உள்ள சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஹரிகரன்(வயது14). இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில வாரங்களாக பள்ளி முடிந்ததும் ஹரிகரன் வீட்டிற்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் ஹரிகரன் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவரது சகோதரி பிரியதர்ஷினி பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்க மாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து சகோதரி ஜன்னல் வழியாக பார்த்த போது, ஹரிகரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார் .

    இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

    தற்கொலை குறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    பெற்றோர் கண்டித்ததால் ஹரிகரன் தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிகிறது. முன்னதாக மகனின் உடலை பார்த்து அவரது பெற்றோர், சகோதரி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    • ஒர்க்ஷாப் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • முத்துக் கருப்பன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் 2-வது தெரு தென்றல் நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது55). இவர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். மதுரை நரிமேடு பி.டி.ராஜன் ரோட்டை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (55). இவரது மனைவி மீனா (50).

    இவர்கள் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த தொழி லில் பங்குதாரராக சேர்ந்தால் அதிக லாபம் கிடைக்கும் என முத்துக் குமரனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய முத்துக்குமரன் பல தவணைகளில் ரூ.18 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் முத்துக்கருப்பன் லாபத்தில் பங்குதராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முத்துக்குமரன் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதில் ரூ. 3 லட்சம் மட்டும் முத்துக் கருப்பன் திருப்பி கொடுத்துள்ளார். மீதி ரூ.15 லட்சத்தை திருப்பித்தராமல் இழுத் தடித்து வந்துள்ளார்.

    பலமுறை கேட்டுப் பார்த்தும் கிடைக்காததால் முத்துக் குமரன் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துக் கருப்பன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூ வியாபாரிகள் மோதல்; 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வியாபாரிகள், போலீசார் விசாரணை, Clash, arrested

    மதுரை

    திருப்பரங்குன்றம் கீழத்தெருவை சேர்ந்த பழனிவேல் மனைவி புஷ்பவல்லி (வயது28). இவர் கோவில் முன்பு பூ வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகன் மதன் (30). இவரும் கோவில் முன்பு பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்குள் வியாபாரம் செய்வது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அவர்க ளிடையே வியாபாரம் செய்வதில் ஏற்பட்ட போட்டியில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொ ண்டனர். இந்த மோதலில் மதன், அவரது தாய் செல்வி, சகோதரி உமாராணி, மாமா ராஜபாண்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து புஷ்ப வல்லியை ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து புஷ்பவல்லி, திருப்பரங் குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனையும், அவருடைய மாமா ராஜபாண்டியையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ராஜபாண்டி தரப்பிலும் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் புஷ்ப வல்லி, சரவணன், கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சரவணன், கணேசன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் ஆவின் நிறுவன பெண் அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • சிசிடிவி காமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் மெயின் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், ராணுவ வீரர். இவரது மனைவி கல்பனா. இவர் மதுரை ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கணவர் ராணுவத்திலும், மகன் வெளியூரிலும் வேலை பார்த்து வந்ததால் கல்பனா மட்டும் மதுரையில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை கல்பனா வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் அதிலிருந்த 32 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி, ரூ.62 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதனிடையே மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த கல்பனா கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம், பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அலங்காநல்லூர் அருகே உள்ள மந்தை கருப்பணசாமி கோவில் உற்சவ விழா நடந்தது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஇலந்தைகுளம் ஆற்றங்கரை தென்புறம் உள்ளது மந்தைகருப்பண சுவாமி கோவில். இங்கு ஆனி மாத கிடாய் வெட்டு உற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு உற்சவ விழா நடந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கினர். விழா ஏற்பாடுகளை பழனிச்சாமி நாட்டாமை வகையறா, அலங்கார் பூசாரி வகையறா, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • விளாச்சேரியில் கால்நடை தடுப்பூசி முகாம் நடந்தது.
    • தகுதியான கன்றுகளுக்கு கால்நடை மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை விளாச்சேரி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் கால்நடை களில் ஏற்படும் 'புருசெல்லா' எனும் கன்று வீச்சு நோய்க்கு 2-வது சுற்று தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. தகுதியான கன்றுகளுக்கு கால்நடை மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. டாக்டர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, செந்தாமரை ஆகியோர் இந்த பணியை மேற்கொண்டனர்.

    முகாமில் அவர்கள் கூறியதாவது:- புருசெல்லா ேநாய் கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. இது புருசெல்லா எனும் நுண்ணுயிர் கிருமியால் ஏற்படுகிறது. இந்த நோய் மனிதர்களின் மூட்டு மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. 4-ல் இருந்து 8 மாத வயதுடைய பெண் பசு, எருமை கன்றுகளுக்கு உரிய பாதுகாப்பு முறை களை பின்பற்றி ஒருமுறை தடுப்பூசி செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் அவைகளை இந்த நோயில் இருந்து காப்பாற்றுவதோடு மனிதர்களுக்கு பரவுவதையும் தவிர்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேலூர் வீரமாகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.
    • மேலூர் வீரமாகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் வெங்கடேஸ்வரா நகரில் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12-வது வருடாபிஷேகம் இன்று நடந்தது. இதையொட்டி மேலூர் சிவன் கோவில் சிவாச்சாரியார்கள் ராஜா, தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் கணபதி ஹோமம் நடந்தது.

    கோவில் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு புனித நீரால் விநாயகர், முருகன், வீரமாகாளியம்மன் ஆகியோருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். வெங்கடேஸ்வரா நகர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மதுரை மாவட்டத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
    • சிகிச்சை ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும்.

    மதுரை

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 2 சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம்கள், ஊரகப்பகு தியில் 4 சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம்களும் நடத்த திட்டமிடப் பட்டு உள்ளது. இந்த முகாம்கள் வருகிற 24-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

    மாநகராட்சி பகுதியில் பொன்னகரம், வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கே.கே.நகர், அருள்மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், ஊரக பகுதியில் மதுரை கிழக்கு வட்டாரம் சக்கிமங்கலம் மீனாட்சி நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மதுரை மேற்கு வட்டாரம் ஊமச்சிக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, அலங்காநல்லுார் வட்டாரம் வெள்ளயம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வாடிப்பட்டி வட்டாரம் அய்யப்பநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் நடை பெற உள்ளது.

    முகாம்களில் தாய்சேய் நலம், தொற்றாநோய், நோய்களுக்கான பரிசோதனையான இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, மற்றும் இசிஜி பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக செய்யப்படும். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதய மருத்துவம், மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோ சனைகள் சிறப்பு மருத்து வர்களால் இலவசமாக வழங்கப்படும். இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆலோ சனைகளும் இலவசமாக வழங்கப்படும்.

    மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • 18 கிராமங்களில் உள்ள ரெயில்வே கிராசிங் பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பயணிக்க இயலாத வகையில் கரடுமுரடான சாலை உள்ளது.

    மதுரை

    மீட்டர் கேஜ் பாதையாக இருந்த மதுரை- போடி ரெயில் பாதை கடந்த சில வருடங்களுக்கு முன்பு அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நடந்தது. பணியின் போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட்களை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தெற்கு ரெயில்வே மூடியது.

    இதை தொடர்ந்து மதுரை- போடி ரெயில்வே பாதைக்கு அருகே இருந்த பெரும்பாலான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ரெயில்வே கேட்டை கடக்க வழி இல்லாமல் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ரெயில்வே கிராசிங்கை கடக்கும் சூழல் உருவானது.

    சில இடங்களில் ரெயில்வே நிர்வாகத்தால் 500மீட்டர் தூரம் வரை மட்டுமே சர்வீஸ் ரோடு போடப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் பொதுமக்கள் பயணிக்க இயலாத வகையில் கரடுமுரடான சாலை உள்ளது.

    மேலும் புளியங்குளம் ஒத்தவீடு- கிண்ணிமங்கலம், மீனாட்சிபட்டி, தென்பழஞ்சி, மணப்பட்டி, வெள்ளப்பாரைபட்டி, சின்னசாக்கிலிபட்டி, அய்யனார்குளம், மீனாட்சி காலனி, கரடிப்பட்டி, ஆலம்பட்டி, கீழப்புதூர் க.புதூர் முத்துப்பட்டி, நாகமலைபுதூர், அடைக்கம்பட்டி, ஓந்திமலை, டீச்சர்ஸ் காலனி போன்ற 18 கிராம மக்கள் மதுரை- போடி ரெயில்வே லைனை கடந்து, மதுரை - தேனி மெயின் ரோட்டுக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது.

    இது குறித்து மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், ரெயில்வே கோட்ட மேலாளர் ஆகியோரிடம் மதுரை - போடி ரெயில்வே லைனில் உள்ள சர்வீஸ் ரோடுகளை நாகமலை புதுக்கோட்டையில் இருந்து செக்கானூரணி வரை தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.

    • மாணவியின் உயிரை காப்பாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.
    • ராணுவ வீரர் நவநீத கிருஷ்ணனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது23). பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 16-ந்தேதி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள பக்ரா கால்வாய் கரையில் நடந்து சென்ற 19 வயது கல்லூரி மாணவி எதிர்பாராத விதமாக கால்வாயில் தவறி விழுந்து வேகமாக ஓடிய தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

    அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் இதைக்கண்டு உடனடியாக கால்வாயில் குதித்து தன்னுயிரை பற்றி சிந்திக்காமல் உயிருக்கு போராடிய மாணவியை பாய்ந்தோடிய தண்ணீரில் இருந்து காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

    ராணுவ வீரரின் இந்த துணிச்சல் மிகு செயல் பற்றி தகவலறிந்த ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே ராணுவ வீரர் நவநீத கிருஷ்ணனை நேரில் அழைத்து பாராட்டி விருது வழங்கி கவுரவித்தார்.

    மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவியின் உயிரை காப்பாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனுக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார். ராணுவ வீரர் நவநீத கிருஷ்ணனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • தகவலறிந்ததும் சாகுபுரம் டி.சி.டபிள்யூ., தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
    • சம்பவம் குறித்த ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    மதுரை பாண்டியன்நகர் தெப்பக்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது43). காமராஜர் சாலை தங்கம் நகரை சேர்ந்தவர் ஹரிஷ் (25). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று காலையில் மதுரையில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல காரில் புறப்பட்டனர். மதுரை கே.கே. நகரை சேர்ந்த டிரைவர் அப்துல் ரஹீம் என்பவர் காரை ஓட்டினார்.

    நேற்று மாலை திருச்செந்தூர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு இவர்கள் இரவில் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டனர். கார் சாகுபுரம் அருகே சென்றபோது காரின் முன் பக்க என்ஜினில் இருந்து புகை கிளம்பியது. இதனால் அவ ர்கள் உஷாரான அவர்கள் உடனடியாக காரை நிறுத்தினர்.

    அப்போது காரில் தீப்பிடித்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த 3 பேரும் சுதாரித்துக் கொண்டு காரை விட்டு வெளியே வந்தனர். அடுத்த சில வினாடிகளில் காரில் திடீரென தீ பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த 3 பேரும் காயமின்றி தப்பினர்.

    இது குறித்து தகவலறிந்ததும் சாகுபுரம் டி.சி.டபிள்யூ., தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்துவிட்டது. இந்த சம்பவம் குறித்த ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×