என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பூ வியாபாரிகள் மோதல்; 4 பேர் கைது
- பூ வியாபாரிகள் மோதல்; 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாபாரிகள், போலீசார் விசாரணை, Clash, arrested
மதுரை
திருப்பரங்குன்றம் கீழத்தெருவை சேர்ந்த பழனிவேல் மனைவி புஷ்பவல்லி (வயது28). இவர் கோவில் முன்பு பூ வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகன் மதன் (30). இவரும் கோவில் முன்பு பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்குள் வியாபாரம் செய்வது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் சம்பவத்தன்று அவர்க ளிடையே வியாபாரம் செய்வதில் ஏற்பட்ட போட்டியில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொ ண்டனர். இந்த மோதலில் மதன், அவரது தாய் செல்வி, சகோதரி உமாராணி, மாமா ராஜபாண்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து புஷ்ப வல்லியை ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து புஷ்பவல்லி, திருப்பரங் குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனையும், அவருடைய மாமா ராஜபாண்டியையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ராஜபாண்டி தரப்பிலும் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் புஷ்ப வல்லி, சரவணன், கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சரவணன், கணேசன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்