என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கால்நடை தடுப்பூசி முகாம்
- விளாச்சேரியில் கால்நடை தடுப்பூசி முகாம் நடந்தது.
- தகுதியான கன்றுகளுக்கு கால்நடை மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மதுரை
மதுரை விளாச்சேரி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் கால்நடை களில் ஏற்படும் 'புருசெல்லா' எனும் கன்று வீச்சு நோய்க்கு 2-வது சுற்று தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. தகுதியான கன்றுகளுக்கு கால்நடை மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. டாக்டர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, செந்தாமரை ஆகியோர் இந்த பணியை மேற்கொண்டனர்.
முகாமில் அவர்கள் கூறியதாவது:- புருசெல்லா ேநாய் கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. இது புருசெல்லா எனும் நுண்ணுயிர் கிருமியால் ஏற்படுகிறது. இந்த நோய் மனிதர்களின் மூட்டு மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. 4-ல் இருந்து 8 மாத வயதுடைய பெண் பசு, எருமை கன்றுகளுக்கு உரிய பாதுகாப்பு முறை களை பின்பற்றி ஒருமுறை தடுப்பூசி செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் அவைகளை இந்த நோயில் இருந்து காப்பாற்றுவதோடு மனிதர்களுக்கு பரவுவதையும் தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்