என் மலர்tooltip icon

    மதுரை

    • உசிலம்பட்டி அருகே 58 கிராம பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மறியல் போராட்டம் நடந்தது.
    • இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் விவசாயிகளின் வாழ் வாதாரமாக கருதப்படும் 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் போ ராட்டம் நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் உசிலம் பட்டி பேருந்து நிலையம் அருகே அனைத்து கள்ளர் கூட்டமைப்பு ஒருங் கிணைப் பாளர் தியாகராஜன் தலை மையில் விவசாயிகளின் காவலனாக கருதப்படும் ஏர் பிடித்து பொதுமக்கள் மற்றும் அனைத்து கள்ளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அந்த பகுதி பரபரப்பு நிலவியது தகவல் அறிந்து வந்த நகர் காவல் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    • நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • காவல்துறை எல்லைக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மதுரை:

    நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். முன்னதாக தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தமிழக அரசு நேரக்கட்டுப்பாடு விதிருந்தது.

    மதுரை மாநகர் பகுதியில் அரசு அனுமதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 141 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதே போன்று நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்ட காவல்துறை எல்கைக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மொத்தத்தில் மதுரை மாவட்டம் முழுவதும் 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் உசிலம்பட்டி, மேலூர், வாடிப்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளிலும், மாநகரில் விளக்குத்தூண், ஜெய் ஹிந்த்புரம், எஸ்.எஸ்.காலனி, திடீர்நகர், திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பட்டாசு விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயம்-26 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • பெரிய அளவிலான தீக்காய பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீக்காயங்களால் மாவட்டம் முழுவதிலும் 50-க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் 26 பேர் பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 24 பேர் தனியார் மற்றும் மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர்.

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர். நேற்று நடந்த 50-க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது, பெரிய அளவிலான தீக்காய பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த னர்.

    • ஒரே நாளில் தண்ணீரில் மூழ்கி 2 பேர் பலியாகினர்.
    • மாட்டுத்தாவணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கருப்பாயி ஊரணி சின்னப்பாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னக்கருப்பு (வயது43). இவர் வண்டியூர் கண்மாய்க்கரைக்கு மீன் பிடிக்க சென்றார்.வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது சின்னக் கருப்பு தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி பஞ்சு மாட்டுத்தாவனி போலீஸ் நிலையத்தில் புகார் செய் தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னக் கருப்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மாட்டுத்தாவணி போலீசார் சின்னக்கருப்புவின் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் திருப்ப ரங்குன்றம் ராஜீவ்காந்தி 4-வது தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் அருண்பாண்டி (24).இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. அதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உறவினருடன் திருப்பரங்குன்றம் சரவணபொய்கைக்கு குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை கணேசன் திருப்ப ரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அருண்பாண்டியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வாலிபர் அருண் பாண்டியின் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை மாநகரில் தீபாவளியையொட்டி 1,000 டன் குப்பைகள் சேர்ந்தது.
    • அவற்றை அகற்றும் பணியில் 4 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



    மதுரை மாசி வீதிகளில் தேங்கிய குப்பைகளை துணை மேயர் நாகராஜன் மற்றும் குழுவினர் அப்புறப்படுத்திய காட்சி.

     மதுரை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பொது மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடி னர். இதனால் வீதிகள் எங்கும் குப்பை, கூளங்கள் மலைபோல் தேங்கின. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் உள்ள 100 வார்டுகளில் பொதுமக்கள் வெடித்த பட்டாசுகள் மற்றும் பிளாஸ் டிக் கழிவுகள் நகரின் அடை யாளத்தையே மாற்றியுள் ளது.

    நேற்று ஒரே நாளில் மதுரை மாநகரில் மட்டும் 1,000 டன் குப்பைகள் தேங் கியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரி–வித்துள்ளது. இதனை ஒரே நாளில் அப்பு றப்படுத்தும் வகையில், 4 ஆயிரம் துப்புரவு பணியா ளர்கள் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காலை 6 மணி முதல் பிற்ப கல் 3 மணிக்குள் இந்த பணி களை முடிக்க இலக்கு நிர் ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை கார ணமாக தேங்கியுள்ள குப் பைகள் மழை நீரில் நனைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

    இதனை அப்பு றப்படுத்த தூய்மை பணியா ளர்களுக்கு கையுறை மற்றும் உபக ரணங்கள் வழங்க–வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. குறிப்பாக மதுரை மாந கரில் தெற்கு மாசி வீதி, கீழமாசி வீதி, விளக்குத்தூண் ஆகிய பகுதிகளில் தீபாவளி தினத்தன்று அப்பகுதிகளில் சேர்ந்த குப்பைகளை அகற் றும் பணியினை கடந்த நான்காண்டுகளாக மதுரை மாநகர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஞாயிறு தீபாவளி முன் னிட்டு தெற்குமாசி வீதி கீழமாசி வீதி விளக்குத்தூண் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்க ளில் நடைபெற்ற வியா பாரத்தின் போது சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியினை இன்று மாவட்டத் தலைவர் பாச வேல் சிந்தன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வாலிபர் சங்கத்தினர் குப்பைகளை அகற்றினர்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் செல்வா, பொருளாளர் வேல் தேவா ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    இந்த பணியில் ஏராளமான வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அந்த குப்பைகள் அவனி யாபுரம் வெள்ளக்கல் பகுதிக்கு கொண்டு சென்று கொட்டப்பட்டன.

    • சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை எப்படி மீட்க போகிறார்கள்? என பசும்பொன் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    • எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது பற்று கொண்ட ஒவ் வொரு தொண்டனும் அ.தி.மு.க. கொடியை பயன்படுத் தலாம், அ.தி.மு.க. கரை வேட்டியை கட்டலாம்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக் கறிஞர் பசும்பொன் பாண் டியன் வெளியிட்டுள்ள அறிக் யில் கூறியிருப்பதாவது:-

    வழக்கறிஞர் என்ற முறை யில் நீதிமன்ற தீர்ப்பு களை மனதார வரவேற்பவன் நான். ஆனாலும் நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சனம் செய்யக்கூடாது என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை. அ.தி.மு.க. கொடியை ஓ.பன்னீர்செல் வம் மற்றும் எதிர் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் எந்த தரவுகளின் அடிப்படையில் உத்தரவு பிறப்பித்தது என்று தெரியவில்லை.

    ஆனால் இந்த உத்தரவு வந்த உடனேயே ஓ.பன் னீர்செல்வம் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அ.தி.மு.க. கொடியை கழற்றி விட்டு காரில் பயணம் செய் கிறார். அதுபோல எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியை யும் கட்சியையும் ஒப்படைத்த சசிகலா பெங்களூரு சிறை யில் இருந்து விடுதலையாகி தமிழ்நாட்டுக்கு வந்த போது தான் பயணம் செய்த காரில் இருந்த அ.தி.மு.க. கொடியை ஒரு போலீஸ்காரர் கழற்ற சொன்னதின் அடிப்படை யில் வேறு காருக்கு மாறி பயணம் செய்தார். இதனால் அவரை நம்பி சென்ற தொண்டர்கள் மனம் வெதும்பினர்.

    கட்சியையும், ஆட்சியை யும் எடப்பாடியிடம் ஒப்ப டைத்தவர் சசிகலா என்ப தில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமியிடமிருந்து அ.தி.மு.க. கொடியை மீட்க முடி யாத சசிகலாவும், ஓ.பன் னீர்செல்வம், டி.டி.வி. தினகரனும் எப்படி அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எப்படி மீட்க போகிறார்கள் என்ற சந்தே கம் லட்சோப லட்சம் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    எனவே அ.தி.மு.க. கொடியை எடப்பாடி ஆதரவாளர்களை தவிர வேறு யாரும் கட்டக்கூடாது என்று கூறுவது வேடிக்கை யானது, வினோதமானது. எனவே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது இயக்க பற்றாளர்கள் ஒவ்வொருவரும் அ.தி.மு.க. கொடியை யும், அ.தி.மு.க. கரை வேட்டி யையும் பயன்படுத்துவதை எடப்பாடியோ அல்லது நீதிமன்றமோ கட்டுப்படுத்து வதற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என் பதை சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது பற்று கொண்ட ஒவ் வொரு தொண்டனும் அ.தி.மு.க. கொடியை பயன்படுத் தலாம், அ.தி.மு.க. கரை வேட்டியை கட்டலாம். இதற்கு எடப்பாடி தரப்பு மட்டும் உரிமை கொண்டாட எந்தவித தகுதியும் இல்லை. எனவே அ.தி.மு.க. இயக் கத்தை மீட்டு எடுப்பதாக கூறிவரும் சசிகலா, தினக ரன், ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் அ.தி.மு.க. கொடியை எவ்வித தயக்கம் இன்றி பயன்படுத்தலாம். இது தொடர்பாக தேவை யான சட்டப் போராட்டங் களையும் அவர்கள் முன் நின்று நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • பட்டாசு வெடித்து வீட்டின் மேற்கூரை-தென்னை மரம் எரிந்து சாம்பல்
    • பெரியார் நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    மதுரை

    தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட் டது. தமிழகத்தில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையி லும் அதை கண்டுகொள் ளாமல் பொதுமக்கள் பட் டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் மதுரை பைபாஸ் நேரு நகர் பகுதி யில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப் போது ராக்கெட் பட்டாசு ஒன்று அருகிலிருந்த வீட்டின் மேற்கூரையில் பட்டதில் மளமளவென தீ பரவியது. இது குறித்து பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.

    அதன்பேரில் நிலைய அதிகாரிகள் எஸ்.எஸ்.ஓ. பாலமுருகன், ஏ.டி.ஓ. சுரேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இத னால் உயிர்சேதம் ஏற்படு வது தவிர்க்கப்பட்டது.

    அதேபோன்று டி.வி.எஸ். நகர் பகுதியில் வெடித்த பட்டாசுகளால் அப்பகுதியில் இருந்த தென்னை மரத்தில் தீப்பிடித்தது. பெரி யார் நிலைய தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆதறவற்றோர், முதியோர்களுக்கு

    தீபாவளியையொட்டி அன்பு உறவுகள் குழு சார்பில் திருநகரில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லம், பைக்கா ராவில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் மற்றும் காளவாசல், பெரியார் உள்ளிட்ட பல்வேறு சாலையோ ரத்தில் வசிப்பவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு களை நவீன் கண்ணன், தீபன் சக்ரவர்த்தி, சரவணன் உள்ளிட்ட அன்பு உறவுகள் குழு உறுப்பினர்கள் வழங்கினர்.

    • ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
    • காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்தசஷ்டி விழா பிரசித்தி பெற்றதாகும். ஐப்பசி மாதம் 7 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகருக்கு காப்பு கட்டப்பட்டு, உற்சவர் சுப்பிரமணியசுவாமி தெய் வானைக்கு காப்பு கட்டப்பட்டது. உற்சவ நம்பியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 9 மணிக்கு மேல் கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்புகட்டப்பட்டது.

    இதையொட்டி மதுரை மட்டுமல்லாது விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் தங்கி கந்தசஷ்டி விரதம் தொடங்கினார்கள். விழாவினை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை நடைபெறும்.

    தினமும் இரவு 7 மணிக்கு தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி ஆறுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 17-ந் தேதி மாலை 6:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்ய கோவர்த்தன அம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 18-ந்தேதி சூரசம்ஹார லீலை நடைபெறும். திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சூரனை சுப்பிரமணியசுவாமி வதம் செய்யும் சூரசம்காரம் நடை பெறும்.

    விழாவில் நிறைவு நாளான 19-ந்தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதி மற்றும் கிரி விதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பார். அன்று மாலை பாவாடை தரிசனம் நடைபெற்று மூலவர் சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

    • பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் 400 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    மதுரை

    திருமங்கலம் ஆலம் பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீபாவளி பண்டிகையை பாது காப்பான முறையில் கொண்டாட மாணவ மாண விகளை அறிவுறுத்தும் வகையில் தீயணைப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கல்லூரி தாளாளர் எம். எஸ்.ஷா மற்றும் பொருளாளர் சகிலாஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நடந்த கூட்டத்தை தொடங்கி வைத்து கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பேசினார்.

    திருமங்கலம் தீயணைப்புத்துறை சார்ந்த அலுவலர்கள் கவியரசு மற்றும் வரதராஜன் ஆகியோர் பேசுகையில், பட்டாசுகளை வெடிக்க செய்யும் பொழுது எதிர் பாராமல் ஏற்படக்கூடிய தீ விபத்துக்களை தடுக்கும் வண்ணம் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக அருகில் மணல் மற்றும் தண்ணீர் நிரம்பிய வாளி களை வைத்துக்கொள்ள வேண்டும். நமது உடைக ளையும் பாதுகாப்பான முறையில் அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.

    வீட்டில் தீபாவளி பலகாரங்கள் செய்யும் பொழுது எண்ணெய் சட்டியில் ஏற்படும் தீயை அணைக்க தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. அடுப்பை உடனடியாக அணைத்துவிட்டு எண்ணை சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி வேண்டும் என தெரிவித்தனர்.

    முன்னதாக கல்லூரியின் தமிழ்த்துறை தலைவரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான முனியாண்டி வரவேற்புரை ஆற்றினார். கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் 400 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    • பல சமயங்களில் பால் சப்ளை செய்யும் வாகனங்களை திருப்பி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பால் வாங்க வரும் பொதுமக்கள் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு தனியார் பால் வாங்கி சென்று விடுகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் ஆவின் பால் விநியோகம் தாமதமாவது தொடர்கதையாகி வருகிறது. அண்ணாநகர் பகுதியில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் காலை 2 மணி முதல் 3 மணிக்குள் பால் சப்ளையாகிவிடும்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆவின் பால் தாமதமாக வருவதாக முகவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். பல சமயங்களில் பால் சப்ளை செய்யும் வாகனங்களை திருப்பி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மதுரை சாத்தமங்கலம் பகுதியில் இன்று காலை 7 மணி வரை ஆவின் பால் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த முகவர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 7 மணி வரை பால் வாகனம் வரவில்லை. அடிக்கடி தாமதமாக வருகிறது. பால் வாங்க வரும் பொதுமக்கள் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு தனியார் பால் வாங்கி சென்று விடுகின்றனர். இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

    இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டால், ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அனைத்து பகுதிகளும் தனியார் பால் மட்டும் வந்து விடுகிறது. பிற மாவட்டங்களில் இருந்து வரும் தனியார் பால்கள் கூட சரியான நேரத்தில் மதுரைக்குள் சப்ளை செய்யப்படுகிறது.

    ஆனால் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஆவின் பாலை சப்ளை செய்வதில் தாமதம் ஏற்படுவது ஏன்? என தெரியவில்லை. நிர்வாகத்திடம் பல முறை கூறியும், முழு அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து ஆவின் பால் சரியான நேரத்தில் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேனி, மதுரை மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் நிரம்பி இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது.
    • போக்குவரத்து போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை:

    வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் இருந்தபோதும் தென்மேற்கு பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக்கவில்லை. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து நல்ல மழை கிடைத்து வருகிறது. வருசநாடு, சதுரகிரி மலை பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்ததையடுத்து வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. நேற்று நீர்மட்டம் 71 அடியை நெருங்கியதையடுத்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் மூர்த்தி, பெரியசாமி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். இதனால் வைகை ஆறு செல்லும் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    வைகை அணையில் இருந்து மொத்தம் 769 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் தேனி, மதுரை மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் நிரம்பி இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது.

    ஆரப்பாளையம், செல்லூர், யானைக்கல் தரைப்பாலங்களை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் அந்த பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனமும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. மீனாட்சி கல்லூரியையொட்டிய வைகை ஆற்றங்கரை சாலை, ஆழ்வார்புரம்-ஆரப்பாளையம் ஆற்றங்கரை சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வைகை ஆற்றுக்குள் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆற்றங்கரைகளை ஒட்டிய பகுதிகளில் நடமாட வேண்டாம் எனவும், ஆற்றங்கரைகளின் அருகில் நின்று வேடிக்கை பார்ப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • அண்மையில் காக்கா தோப்பு பகுதியில் மழை காரணமாக 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
    • விபரீதம் ஏற்படும் முன் பழமையான கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை:

    மதுரை ஹார்வி நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அதே பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் பகுதியில் ஓட்டு வீடு உள்ளது. 35 ஆண்டுகள் பழமையான இந்த வீட்டை நாகராஜ் பயன்படுத்தாமல் பூட்டி வைத்திருந்தார். மேலும் இதில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.

    மேலும் அந்த வீட்டின் அருகே உணவகம் நடத்துவோர் பொருட்களை வைக்க இந்த வீட்டை பயன்படுத்தி வந்தனர். பழமையான வீடு என்பதால் கட்டிடம் உறுதி தன்மை இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மதுரையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் வீட்டின் சுவர்கள் மற்றும் ஈரத்தன்மையுடன் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு உணவகத்தில் பணிபுரியும் பிரசாத் என்பவர் பொருட்களை எடுக்க அந்த வீட்டிற்கு சென்றார். கதவை திறக்க முயற்சித்த போது திடீரென வீட்டின் சுவர் சீட்டுக்கட்டு போல் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பிரசாத் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அண்மையில் காக்கா தோப்பு பகுதியில் மழை காரணமாக 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. மதுரை நகரின் மையப்பகுதியில் இது போன்ற பழமையான கட்டிடங்கள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உறுதித்தன்மை இல்லாமல் உள்ளது.

    எனவே விபரீதம் ஏற்படும் முன் பழமையான கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×