search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மாநகரில் தீபாவளியையொட்டி 1,000 டன் குப்பைகள் சேர்ந்தது
    X

    தீபாவளியையொட்டி மதுரை நேதாஜி சாலையில் தேங்கிய குப்பையின் ஒரு பகுதி.

    மதுரை மாநகரில் தீபாவளியையொட்டி 1,000 டன் குப்பைகள் சேர்ந்தது

    • மதுரை மாநகரில் தீபாவளியையொட்டி 1,000 டன் குப்பைகள் சேர்ந்தது.
    • அவற்றை அகற்றும் பணியில் 4 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



    மதுரை மாசி வீதிகளில் தேங்கிய குப்பைகளை துணை மேயர் நாகராஜன் மற்றும் குழுவினர் அப்புறப்படுத்திய காட்சி.

    மதுரை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பொது மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடி னர். இதனால் வீதிகள் எங்கும் குப்பை, கூளங்கள் மலைபோல் தேங்கின. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் உள்ள 100 வார்டுகளில் பொதுமக்கள் வெடித்த பட்டாசுகள் மற்றும் பிளாஸ் டிக் கழிவுகள் நகரின் அடை யாளத்தையே மாற்றியுள் ளது.

    நேற்று ஒரே நாளில் மதுரை மாநகரில் மட்டும் 1,000 டன் குப்பைகள் தேங் கியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரி–வித்துள்ளது. இதனை ஒரே நாளில் அப்பு றப்படுத்தும் வகையில், 4 ஆயிரம் துப்புரவு பணியா ளர்கள் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காலை 6 மணி முதல் பிற்ப கல் 3 மணிக்குள் இந்த பணி களை முடிக்க இலக்கு நிர் ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை கார ணமாக தேங்கியுள்ள குப் பைகள் மழை நீரில் நனைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

    இதனை அப்பு றப்படுத்த தூய்மை பணியா ளர்களுக்கு கையுறை மற்றும் உபக ரணங்கள் வழங்க–வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. குறிப்பாக மதுரை மாந கரில் தெற்கு மாசி வீதி, கீழமாசி வீதி, விளக்குத்தூண் ஆகிய பகுதிகளில் தீபாவளி தினத்தன்று அப்பகுதிகளில் சேர்ந்த குப்பைகளை அகற் றும் பணியினை கடந்த நான்காண்டுகளாக மதுரை மாநகர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஞாயிறு தீபாவளி முன் னிட்டு தெற்குமாசி வீதி கீழமாசி வீதி விளக்குத்தூண் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்க ளில் நடைபெற்ற வியா பாரத்தின் போது சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணியினை இன்று மாவட்டத் தலைவர் பாச வேல் சிந்தன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வாலிபர் சங்கத்தினர் குப்பைகளை அகற்றினர்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் செல்வா, பொருளாளர் வேல் தேவா ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    இந்த பணியில் ஏராளமான வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அந்த குப்பைகள் அவனி யாபுரம் வெள்ளக்கல் பகுதிக்கு கொண்டு சென்று கொட்டப்பட்டன.

    Next Story
    ×