search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயம்26 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    பட்டாசு விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயம்26 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

    • பட்டாசு விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயம்-26 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • பெரிய அளவிலான தீக்காய பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீக்காயங்களால் மாவட்டம் முழுவதிலும் 50-க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் 26 பேர் பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 24 பேர் தனியார் மற்றும் மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர்.

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர். நேற்று நடந்த 50-க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் பெரும்பாலான குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது, பெரிய அளவிலான தீக்காய பாதிப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த னர்.

    Next Story
    ×