என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இணை யதளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
    • கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்கியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்கு றிச்சி, தென்கீரனூர், ஜே.ஜே நகர், சின்னசேலம், நைனார்பாளையம், தகடி, கூத்தனூர், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டு காலமாக மரச் சிற்பங்களை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மரத்தாலான சாமி சிற்பங்கள், பூஜை அறைக்கு தேவையான சிற்பங்கள், கோவில் மற்றும் பூஜை அறை கதவு, கோவில் தேர் உள்ளிட்ட கலை அழகு மிகுந்த மரச் சிற்பங்கள் செய்யப்படுகிறது. இந்த மரச்சிற்பங்களை தமிழகத்தைச் சேர்ந்த பலரும் வாங்கிச் செல்கின்றனர். அது மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இணை யதளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில வெளிநாட்டவர்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்த மரச்சிற்ப தொழிலுக்கு கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்கியது.

    இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மர சிற்பம் செதுக்கும் கலைஞர்களுக்கு அவர்களின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் ரூ.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் நவீன தொழில்நுட்ப எந்திரங்களைக் கொண்ட ஒரு பொது வசதி மையம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மரச் சிற்ப தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் தயாரிப்பு கைவினைத் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல் கூறியதாவது,

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மரச் சிற்பம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் மரச் சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக, கலைவண்ணம் மிகுந்து காணப்படும். இதனால் மரச்சிற்பத்திற்கு தமிழக அரசின் புவிசார் குறியீடை பெற்றுள்ளோம். இங்கு தயாரிக்கப்படும் மரச்சிற்பங்கள் ரூ. 3 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசு மர சிற்ப தொழிலாளிகள் பயனடையும் வகையில் ரூ. 50 லட்சம் மதிப்பில் தொழில்நுட்ப எந்திரங்களை கொண்ட வசதி மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் பயனடைவார்கள் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். எனவே இந்த அறிவிப்பு மரச்சிற்ப தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என கூறினார்.

    • கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • ஒரு இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் வினைத் (வயது 24) என்பதும், இவரது மொபட்டில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.

    • திருக்கோவிலூர் பகுதியில் வெயில் கொடுரமாக இருப்பதால், இங்கு மின்சாரம் இல்லாமல் பொது மக்களால் வாழவே முடியாது என்ற சூழல் நிலவுகிறது.
    • நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 தடவை திடீர் திடீர் என மின்வெட்டு ஏற்படுகிறது.

    கள்ளக்கறிச்சி:

    தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் கோரத்தாண்டவம் பொது மக்களை வாட்டி வதைக்கின்றது. குறிப்பாக திருக்கோவிலூர் பகுதியில் வெயில் கொடுரமாக அடிக்கிறது. இதனால் இங்கு மின்சாரம் இல்லாமல் பொது மக்களால் வாழவே முடியாது என்ற சூழல் நிலவுகிறது. ஆனால், திருக்கோவிலூர் மின்வாரய ஊழியர்களின் செயல்பாடு சுட்டெரிக்கும் சூரியனே தேவலாம் என்ற அளவில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 தடவை திடீர் திடீர் என மின்வெட்டு ஏற்படுகிறது. அவ்வாறு மின்வெட்டு ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வரும்போது கூடுதலான மின்னழுத்தத்துடன் வருகிறது. இதனால் மின்சாதன பொருட்கள் ஆங்காங்கே பழுதடைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதுகுறித்து மின்வாரியத்திடம் கேட்டால் பதில் ஏதும் இல்லை   கோடை காலம் தொடங்கியதால் மின் பற்றாக்குறையால் இந்த மின்தடை ஏற்படுவதாக வைத்துக் கொண்டால் கூட நாள் ஒன்றுக்கு எத்தனை மணி நேரம் மின்தடை ஏற்படும் என அறிவித்துவிட்டு மின்சாரத்தை நிறுத்தலாம். அதை விடுத்து திடீர் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதும் பின்னர் உயர் மின்னழுத்தத்தில் மின்விநியோகம் நடைபெறுவதும் பொதுமக்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.மேலும் 24 மணி நேரத்தில் எத்தனை மணி நேரம் மின்தடை ஏற்படும் என்பதை உடனடியாக பட்டியலிட்டு திருக்கோவிலூர் மின்வாரியம் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • அமுதா (வயது 40). இவரது கணவர் இறநது விட்டதால் தனது தாய் வீட்டில் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.
    • வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள் பிரியதர்ஷினியை (19) காணவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி அமுதா (வயது 40). இவரது கணவர் இறந்து விட்டதால் தியாகதுருகம் அருகே உள்ள பிரிதிவிமங்கலத்தில் தனது தாய் வீட்டில் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அமுதா விவசாய வேலைக்கு சென்று விட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள்    ரியதர்ஷினியை (19) காணவில்லை. இவர் தலைவாசல் காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.   அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அமுதா தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் சங்கராபுரம் அருகே பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் மகன் குருபாலன் (20) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மணிராஜ் (வயது 19). இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மணிராஜ் பரிதாபமாக இறந்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விருத்தாச்சலம் ரோடு உ.கீரனூரில் வசித்து வருபவர் மணிராஜ் (வயது 19). இவர் செங்குறிச்சி சுங்கச்சாவடி பால் பண்ணை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிராஜ், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தனி வருவாய் கிராமமாக பிரித்து கொடுக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் புது உச்சிமேடு ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக பிரிக்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தே.மு.தி.க. தியாகதுருகம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, பா.ம.க. தியாகதுருகம் தெற்கு ஒன்றிய செயலாளர் துரை, வி.சி.க. தியாகதுருகம் தெற்கு ஒன்றிய செயலாளர் கலையமுதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனலட்சுமி, சுமதி பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டக்குழு உறுப்பினர் ஜக்கரியா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., வி.சி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சுமார் 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியுள்ளதாவது,

    புது உச்சிமேடு ஊராட்சி பழைய உச்சிமேடு, ராமநாதபுரம், பட்டி, புது உச்சிமேடு ஆகிய 4 கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு சுமார் 5000 பேர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி கொங்கராயபாளையம் ஊராட்சியில் இருந்து கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தது. ஆனால் இதுநாள்வரை புது உச்சிமேடு தனி வருவாய் கிராமமாக பிரிக்கப்படாமல் உள்ளது. இதனால் புது உச்சிமேடு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொங்கராயபாளையம் ஊராட்சிக்கு சென்று பட்டா, சிட்டா, அடங்கல்கள், சான்றிதழ்கள் மற்றும் பிற அரசு திட்ட அனுமதி மற்றும் பதிவுகளை பெற வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் மற்றும் முதலமைச்சர் தனி பிரிவிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது நாள் வரை தனி வருவாய் கிராமமாக பிரிக்கப்படவில்லை. எனவே புது உச்சிமேடு ஊராட்சி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தனி வருவாய் கிராமமாக பிரித்து கொடுக்க வேண்டும். மேலும் தற்காலிகமாக பொதுமக்கள் சிரமத்தை குறைக்கும் வகையில் வாரத்தில் 3 நாட்கள் புது உச்சிமேடு ஊராட்சியிலும், 3 நாட்கள் கொங்கராயபாளையம் ஊராட்சியிலும் கிராம நிர்வாக அலுவலகத்தை செயல்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளக்குறிச்சியில் நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி தமிழ்நாடு கிராம மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா ட்டத்திற்கு மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாநில பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தலைவர் கொளஞ்சி வேலு கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டை அமல்படுத்த வேண்டும்.

    தூய்மை காவலரின் ஊதியத்தை நேரடியாக ஊராட்சியின் மூலம் வழங்குதல். கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தூய்மை காவலர்களுக்கு ரூ.3600-லிருந்து ரூ.5 ஆயிரமாக சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இதில் மாநிலத் துணைத் தலைவர்கள் தங்கவேல், அந்தோணி தாஸ், ரமேஷ், சந்திரசேகர், மாநில இணை செயலாளர் கனி, பரமசிவன், முத்துசாமி, வேலு, சேதுராமன், சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • திருநாவலூர் அருகே நிலத்தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
    • ஏன் அதிகமாக வரப்பைக் கழிக்கிறாய் என்று கேட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் கங்கை அம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 36). விவசாயி. இவருக்கும் இவருடைய சகோதரர் அன்னப்பன் (40), இருவருக்கும் சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ராஜாராமன் அவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு வரப்பை மண்வெட்டியால் கழித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அன்னப்பன் ஏன் அதிகமாக வரப்பைக் கழிக்கிறாய் என்று கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு அண்ணப்பன் கையில் வைத்திருந்த ஸ்பிரேயர் மிஷின் பைப்பால் ராஜாராமன் கழுத்தில் அடித்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு அங்கிருந்து பொதுமக்கள் உதவியுடன் உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராஜாராமன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்னப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோக த்தையும் ஏற்படுத்தியது. மேலும், அங்கு பதட்டம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ராமலிங்கம் (வயது 62). இவரும் சந்திரசேகர் என்பவரும் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையின் காரணமாக சென்றனர்,
    • பணிகளை முடித்துதிரும்பும்போது,அவருக்கு பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது,..

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62). இவரும் அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரும் மோட்டார் சைக்கிளில் நைனார்பாளையத்திலிருந்து கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு சொந்த வேலையின் காரணமாக சென்றனர். அங்கு பணிகளை முடித்துக் கொண்டு மீண்டும் நயினார் பாளையம் வரும் போது கிருஷ்ணாபுரம் கிராம எல்லை சேலம் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் எதிரே சென்றபோது அதே திசையில் அவருக்கு பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயம் அடைந்த ராமலிங்கம், சந்திரசேகர் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனனின்றி ராமலிங்கம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தியாகதுருகத்தில் இருந்து சின்னமாம்பட்டு செல்லும் வழியில் சடையன்குளம் அய்யனார் கோவில் அருகே மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • மின்மாற்றி பொருத்தப்பட்டிருந்த 2 மின்கம்பங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் காரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்தன.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் இருந்து சின்னமாம்பட்டு செல்லும் வழியில் சடையன்குளம் அய்யனார் கோவில் அருகே மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி பொருத்தப்பட்டிருந்த 2 மின்கம்பங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் காரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரிகள் கம்பங்களுக்கு அருகே சிமென்ட் மேடை அமைத்து அதில் தற்காலிகமாக மின்மாற்றியை பொருத்தினர். 

    இந்நிலையில் தற்போது மின் கம்பங்களில் கம்பிகள் மட்டுமே தெரியும் அளவிற்கு முற்றிலும் சேதம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் என்கின்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்சார வாரிய அதிகாரிடம் பலமுறை தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மின்கம்பங்கள் உடைந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன் உடனடியாக மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணிமேகலை என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி முருகேசன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கன்று குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மணிமேகலை என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி முருகேசன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது. பின்னர் இது பற்றி சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கன்று குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது அஜித் என்ற தீயணைப்பு வீரர் கிணற்றில் கயிறு கட்டி இறக்கினர்.அப்பொழுது 2 பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு 2 பாம்பை உயிருடன் பிடித்து சாக்கு பையில் போட்டு பாதுகாப்பாக கட்டினர்.பிறகு கிணற்றுக்குள் இறங்கி கன்று குட்டியை உயிருடன் மீட்டனர். இந்த மீட்பு போராட்டத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி கன்றுகுட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். சாக்கு பையில் இருந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • குமார் (வயது 48). இவருக்கும் மணிவேல் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
    • இந்நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பி னரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 48). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சன்னியாசி மகன் மணிவேல் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பி னரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த குமார் மற்றும் மணிவேல் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி மகன்கள் செல்வம், மணிவேல், ஏழுமலை, முத்துப்பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதே போல் மணிவேல் கொடுத்த புகாரின் பேரில் விஜி, குமார், பூங்கொடி, பவுன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஏழுமலை என்பவரை கைது செய்தனர்.

    ×