search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே  ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்மின்சாரவாரிய அதிகாரிகள் அலட்சியம்
    X

    மின் கம்பங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதம் அடைந்து நிலையில் இருப்பதை படத்தில் காணலாம்.

    தியாகதுருகம் அருகே ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்மின்சாரவாரிய அதிகாரிகள் அலட்சியம்

    • தியாகதுருகத்தில் இருந்து சின்னமாம்பட்டு செல்லும் வழியில் சடையன்குளம் அய்யனார் கோவில் அருகே மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • மின்மாற்றி பொருத்தப்பட்டிருந்த 2 மின்கம்பங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் காரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்தன.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் இருந்து சின்னமாம்பட்டு செல்லும் வழியில் சடையன்குளம் அய்யனார் கோவில் அருகே மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி பொருத்தப்பட்டிருந்த 2 மின்கம்பங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் காரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து மின்சார வாரிய அதிகாரிகள் கம்பங்களுக்கு அருகே சிமென்ட் மேடை அமைத்து அதில் தற்காலிகமாக மின்மாற்றியை பொருத்தினர்.

    இந்நிலையில் தற்போது மின் கம்பங்களில் கம்பிகள் மட்டுமே தெரியும் அளவிற்கு முற்றிலும் சேதம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் என்கின்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்சார வாரிய அதிகாரிடம் பலமுறை தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மின்கம்பங்கள் உடைந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன் உடனடியாக மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×