என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • பயணச்சீட்டு இல்லாத பயணத்தை மகளிர்க்கு வழங்குவது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து.
    • திமுகவுக்கு மகளிரின் ஆதரவு அமோகமாக இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் தி.மு.க. மாணவரணி சார்பில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் ஏற்பாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலையின் 108 -வது பிறந்த நாள் விழா தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் வரவேற்றார்.

    விழாவில் 1131 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசினார்.

    அவர் பேசியதாவது:

    தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் எல்லாம் தமிழகத்தை ஒவ்வொரு தேர்தலிலும் 3 முதல் 4 முறை வலம் வந்து தி.மு.க.வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். அதனால் தான் எதிர்க்கட்சிகள் வியந்து பார்க்கின்றன.பொறாமைப்படுகின்றன. இவரைப் போன்ற தலைவர்களால் தான் இன்றும் தி.மு.க. 75 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. பயணச்சீட்டு இல்லாத பயணத்தை மகளிர்க்கு வழங்குவது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து. பிங்க் பஸ் என்று கூட சொல்லாமல் ஸ்டாலின் பஸ் என்று பெருமையாக சொல்கிறார்கள்.

    புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பெண்களின் நலனுக்கு பல புதிய, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதை முறையாக செயல்படுத்தியும் வருவதால் வட நாட்டுப் பத்திரிக்கைகளும் பாராட்டுகின்றன. பெண்கள் எந்தப்பக்கம் இருக்கிறார்களோ அவர்களே தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். திமுகவுக்கு மகளிரின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. புதிது, புதிதாக வருபவர்கள் தி.மு.க.வை அழிப்பேன் என்கிறார்கள். அவர்களின் கனவு ஒரு நாளும் நடக்காது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வரும், துணை முதல்வரும் நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கபட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். வரக்கூடிய 2026 சட்ட பேரவைத் தேர்தலிலும் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் குமார், சுகுமார், தசரதன், யுவராஜ், மலர்க்கொடி, குமார், எஸ்.கே.பி. சீனிவாசன் மற்றும் மாமன்ற மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர் திலகர் நன்றி கூறினார்.

    • வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
    • வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய பணம் பல கோடி ரூபாய் நிலுவையில் இருந்து வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய பணம் பல கோடி ரூபாய் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ரவீந்திரன் உத்தரவின் படி மாநகராட்சி இணை ஆணையர் தலைமையில் அதிகாரிகள் காஞ்சிபுரம் பஸ் நிலையம் பகுதியில் ரூ.1 கோடியே 30 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த உணவகம் உள்ளிட்ட 7 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    • உத்தரமேரூர் தாலுகாவில் அதிகமாக மழை பெய்துள்ளது.
    • 17 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

    சென்னை:

    பெஞ்ஜல் புயல் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நேற்று கரையை கடந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்தது.

    இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர் தாலுகாவில் அதிகமாக மழை பெய்துள்ளது. மற்ற தாலுகாவில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய மழை இல்லை.

    இதுபற்றி மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியதாவது:

    பெஞ்ஜல் புயல்-பலத்த மழை சேதத்தை ஏற்படுத்தும் என கருதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நிவாரண முகாம்கள் 30 இடங்களில் ஏற்படுத்தப்பட்டன.

    இதில் நேற்றிரவு 849 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு சாப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் 65 இடங்களில் தேங்கி நின்ற தண்ணீர் முழுமையாக வடிய வைக்கப்பட்டன. 17 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. அதையும் அப்புறப்படுத்திவிட்டோம். 5 குடிசை வீடுகள் இடிந்துள்ளது. அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்க அரசு ஏற்பாடு செய்யும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    • புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    • செம்மொழி சிற்ப பூங்காவை பராமரித்து பிரபலமாக்க அறிவுறுத்தினார்.
    • கோயில் வளாகத்தில் 3டி அனிமேஷன் திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது பயணிகள் தங்கும் அறைகள், நீச்சல் குளம், கழிப்பறைகள், கட்டிடங்கள், சமையல் கூடம் மற்றும் வளாகத்தில் உள்ள செம்மொழி சிற்ப பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டார். பூங்காவை பராமரித்து பிரபலமாக்க அறிவுறுத்தினார். 

    பின்னர், மாமல்லபுரத்தில் பழைய சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி, பேருந்து நிலையம் அருகே மரகத பூங்காவில், ரூ.8 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி மற்றும் 5கோடி மதிப்பீட்டில் தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் 3டி அனிமேஷன் திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    முன்னதாக, திருவிடந்தையில் நித்தியகல்யாண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 223 ஏக்கரில் "ஆன்மீக கலாச்சார பூங்கா" அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ், சப்-கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், காஞ்சிபுரம் திமுக மாவட்ட பொருளாளர் விசுவநாதன், பேரூராட்சி கவுன்சிலர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பேருந்து படியில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.
    • தாக்குதலுக்கு உள்ளான கண்டக்டர் நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி மாணவர்கள் பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அவர்களை பேருந்துக்குள் வருமாறு கண்டக்டர் கூறி உள்ளார். இதனையடுத்து அவர்கள் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    இந்த சம்பவத்தையடுத்து பேருந்துகளை சாலையில் நிறுத்தி டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம் நடத்தினர். பேருந்துகளை சாலையிலேயே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    தாக்குதலுக்கு உள்ளான கண்டக்டர் நாராயணசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல்கட்ட விசாரணையில், படியில் நின்று கொண்டிருந்த மாணவர்களை பேருந்துக்குள் வருமாறு கண்டக்டர் கண்டித்ததால் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

    • நாகராஜ், கடந்த 7-ந் தேதி அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • டாக்டர்கள் ஆஸ்பத்திரியில் இருந்த நாகராஜனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் யாரிடமும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை

    ஸ்ரீபெரும்புதூர்:

    திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(48), கூலித்தொழிலாளி. கடந்த சில மாதங்களாக நாகராஜிக்கு வயிற்று வலி அதிகமாக இருந்தது.

    இதையடுத்து அவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது இரைப்பையில் கட்டி இருப்பதாகவும் அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து நாகராஜ், கடந்த 7-ந் தேதி அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சையின் போது, டாக்டர்களின் கவன குறைவாலும், தவறான சிகிச்சையாலும் அருகில் இருந்த மண்ணீரலை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நாகராஜிக்கு அறுவை சிகிச்சைக்கு பின்னரும் அதிகமான ரத்த போக்கு இருந்ததாக தெரிகிறது.

    இதனால் உடல்நிலை மோசம் அடைந்ததால் டாக்டர்கள் தாங்களாகவே நாகராஜிக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து மண்ணீரலை அகற்றி உள்ளனர். இதுபற்றி டாக்டர்கள் ஆஸ்பத்திரியில் இருந்த நாகராஜனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் யாரிடமும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஆபரேசன் முடிந்தும் நாகராஜின் உடல் நிலை மோசம் அடைந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் டாக்டர்களிடம் விசாரித்தபோதுதான் இறப்பை கட்டி ஆபரேசனின் போது தவறான சிகிச்சையால் மண்ணீரல் அகற்றப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜனின் உறவினர்கள் டாக்டர்கள் மற்றும் அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் உரிய பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நாகராஜின் உறவினர்கள் ஆஸ்பத்திரி உள்ளேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆஸ்பத்திரி டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து நாகராஜின் உறவினரான திருவள்ளூரை சேர்ந்த மாறன் என்பவர் கூறும்போது, நாகராஜ் கூலி வேலை செய்து வந்தார். அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு இங்கு வந்தபோது இரைப்பையில் கட்டி உள்ளது என்று கூறி அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது தவறான சிகிச்சை செய்து மண்ணீரலை அகற்றி உள்ளனர். இது குறித்து உறவினர்யாரிடமும் டாக்டர்கள் தெரிவிக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட 11 துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த குழுவினர் பருவமழை காலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கி இருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம் பின்வருமாறு...

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் (வார்டு 1-25) -நவிந்திரன் (ஆணையர்,காஞ்சிபுரம் மாநகராட்சி) 7397372823,

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் (வார்டு 26-51)-ஆசிக்அலி(உதவி ஆட்சியர்) 9445000413,

    சிறுகாவேரிபாக்கம் மற்றும் திருப்புக்குழி குறுவட்டம்-வெற்றிவேல்(மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்) 9080682288,

    பரந்தூர், சிட்டியம்பாக்கம் மற்றும் கோவிந்தவாடி குறுவட்டம்-ஜோதிசங்கர்(மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்) 9443098567,

    வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-தங்கவேலு (உதவி திட்ட அலுவலர்) 7402606009,

    தென்னேரி குறுவட்டம்-பாலமுருகன்(மாவட்ட ஆய்வு குழு அலுவலர்) 9444227190, மாகரல் குறுவட்டம்-தனலட்சுமி(மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அலுவலர்) 7338801259,

    உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-கந்தன்(திட்ட அலுவலர்) 9840989921,

    திருப்புலிவனம், களியாம்பூண்டி குறு வட்டம்-சத்தியதேவி(மண்டல மேலாளர்) 9150057181,

    சாலவாக்கம் அரும்புலியூர் மற்றும் குண்ணவாக்கம் குறுவட்டம்-பாக்கியலட்சுமி (தனித்துணை ஆட்சியர்) 8220438216,

    ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-ஜெகதிசன்(மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்)-7402606004,

    மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம் குறுவட்டம்-லதா(உதவி இயக்குநர்)-8925809212,

    வல்லம் மற்றும் தண்டலம் குறுவட்டம்-பிச்சாண்டி(திட்ட அலுவலர், மகளிர் திட்டம்) 944094280

    படப்பை குறுவட்டம்-தண்டபாணி(உதவி இயக்குநர்,பஞ்சாயத்து)-7402606005,

    படப்பை குறுவட்டம்-வேதநாயகம் (மாவட்ட ஊராட்சி செயலர்) 7402606007,

    செரப்பணஞ்சேரி குறுவட்டம், மணிமங்கலம்-சுரேஷ்(நேர்முக உதவியாளர் (கணக்கு))9442745251,

    கொளப்பாக்கம் குறுவட்டம் (மௌலிவாக்கம், கொளுத்துவாஞ்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், தெள்ளியகரம், பரணிப்புத்தூர், சின்னப்பணிச்சேரி, பெரியப்பணிச்சேரி, சீனிவாசபுரம்) -.பாலாஜி (மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்) 9445000168,

    திருமுடிவாக்கம் மற்றும் பூந்தண்டலம் பஞ்சாயத்து- சக்திகாவியா(மாவட்டகுழந்தைகள்பாதுகாப்புஅலுவலர்) 6369131607,


    மாங்காடு குறுவட்டம் (கொல்லச்சேரி, மலையம்பாக்கம், கொழுமுனிவாக்கம், தரப்பா க்கம், இரண்டாம்கட்டளை, தண்டலம், கோவூர் சிக்கராயபுரம், மூன்றாம் கட்டளை பகுதிகள்)-உமாசங்கர்(உதவிதிட்ட அலுவலர்(வீடுகள்)7402606006,

    மாங்காடு நகராட்சி பகுதிகள் -சரவணகண்ணன் (வருவாய் கோட்டாட்சியர்) 9444964899,

    குன்றத்தூர்நகராட்சி- சீனிவாசன் (மாவட்ட பிற்படுத்தபட்டோர் நலஅலுவலர்)9445477826 மற்றும் பேரிடர் தொடர்பான விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் 044-27237107, வாட்ஸ் அப்எண் 8056221077 தொடர்பு கொள்ளலாம்.

    இதற்கிடையே பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இதில் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான காந்தி கலந்துகொண்டு அனைத்து துறை சார்ந்த ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது அமைச்சர் காந்தி கூறும்போது,வரதராஜபுரம் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு அங்கு 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.

    மாவட்டத்தில் 276 ஜே.சி.பி.எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகளும் செயல்படும் என்றார்.

    அப்போது செல்வம் எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்,எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

    • திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
    • சாங்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் என்றனர்.

    சாம்சாங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் உள்ள தொழிலாளர்களை திமுக கூட்டணி தலைவர்வர் சந்தித்து பேசினர்.

    இந்நிலையில், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்தித்தனர்.

    அப்போது விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், "

    சாம்சங் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். சாம்சங் தொழிலாளர்கள் அமைதியாக போராடிய நிலையில் வழக்கு போடப்பட்டுள்ளது.

    சாங்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும்" என்றார்.

    இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், "சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்" என்றார்.

    மேலும் அவர்கள், "அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தைக்கு பின்னரும், பிரச்சினை தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தாமல், பிற சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    தொழிலாளர்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆரோக்கியமானது அல்ல.

    காஞ்சிபுரம் காவல்துறை, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. காஞ்சி காவல்துறையின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    அடக்குமுறைகள் மூலம் போராட்டத்தை ஒடுக்க முடியாது. தெழிாலளர்களின் கோரிக்கைகளளை ஏற்க மறுப்பது ஏன் ? தொழிலாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.

    சாம்சங் தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றனர்.  

    • சாம்சங் தொழிலாளர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ததாக சி.ஐ.டி.யு. குற்றச்சாட்டு
    • போராட்டம் நடத்த போடப்பட்டிருந்து பந்தலை அகற்றிய போலீசார், தொழிலாளர்களை கைது செய்தனர்.

    சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பேச்சுவார்த்தை நடத்த 3 அமைச்கர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    * பேச்சுவார்த்தை காரணமாக சாம்சங் நிறுவனம் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க முன்வந்துள்ளது.

    * சம்பளத்துடன் சிறப்பு ஊக்கத்தொகை மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பணிக்காலத்தில் தொழிலாளர்கள் உயிரிட நேர்ந்தால் சிறப்பு நிவாரணத் தொகை ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும்.

    * அனைத்து தொழிலாளர்கள் சென்று ஏ.சி. பேருந்து வசதி செய்த தரப்படும். உணவு உள்ளிட்ட பல்வேறு வசிதிகள் மேம்படுத்த சாம்சங் நிறுவனம் சம்மதம்.

    * தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு.யின் பதிவு குறித்து கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நீதிமன்றத்தின் உத்தரவுபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    * படித்த இளைஞர்களின் எதிர்கால நலன் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சி.ஐ.டி.யு. இந்த பேராட்டத்தை கைவிடுமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    * வீடு புகுந்து கை செய்யப்படவில்லை. விபத்து நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் பிணையில் வந்துள்ளார்கள். அரசாங்கம் யாரையும் ரிமான்ட் செய்யவில்லை. அரசுக்கு அந்த நோக்கம் இல்லை.

    * சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு செல்லவில்லை. தமிழகத்தில் நிறுவனங்கள் தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை நிலவுகிறது.

    * சிஐடியு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக பார்க்கவில்லை. நாங்கள் அதை விரோமாக பார்க்கவில்லை.

    * தொழிலாளர்களுக்கு எதிராக அடக்கு முறை கையாளவில்லை. அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தப்படும்போது எந்த அரசும் எடுக்கும் நடைமுறைதான் எடுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் அந்த நடைமுறையை எடுத்துள்ளது. இந்த இடங்களில் உள்ள பல நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை தொழிலாளர் துறை பதிவு செய்துள்ளது.

    * பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்ப்பதில் தெளிவாக இருக்கிறோம்.

    இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    • பந்தலை போலீசார் அகற்றிய நிலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம்.
    • போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு கைது செய்ய முயற்சி செய்யவதாக குற்றச்சாட்டு.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர்.

    இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி சம்பள உயர்வு, சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் சாம்சங் நிறுவனத்திற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் ஒரு பிரிவினருடன் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில்தான் நேற்றிரவு போலீசார் போராட்ட பந்தலை அகற்றினர். இன்று காலை போராட்டத்திற்கு கலந்து கொண்ட தொழிலாளர்களை கலைந்த செல்ல வற்புறுத்தினர். அத்துடன் அவர்கள் இழுத்து கைது செய்ய முயற்சித்தனர். ஏற்கனவே முக்கிய நிர்வாகிகளை போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

    இந்த நிலையில் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீசார் முயற்சி செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி அவசர ஆட்கொணர்வு வழக்காக விசாரிக்க வலியுறுதியுள்ளார். பிற்பகலில் விசாரிப்பதாக நீதிபதிகள் பாலாஜி மற்றும் வேல்முருகன் அமர்வு தெரிவித்துள்ளது.

    • நேற்றிரவு போலீசார் போராட்ட பந்தலை அகற்றினர்.
    • இத்தனை நாள் இல்லாமல், தற்போது கலைந்து போகச் சொல்வது ஏன் என போராட்டக்காரர்கள் கேள்வி.

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொண்டு வந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுகளில் சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களில் இன்னொரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.

    தொடர்நது ஊழியர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்றிரவு திடீரென போலீசார் போராட்டம் நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை அகற்றினர். அத்துடன் வீடு வீடாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான நபர்களை கைது செய்ததாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலையும் தொழிலாளர்கள் பந்தல் அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தனர். பந்தல் அகற்றப்பட்ட நிலையிலும் அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அந்த இடத்தில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இத்தனை நாள் இல்லாமல், தற்போது கலைந்து போகச் சொல்வது ஏன் என தொழிலாளர்கள் கேள்ளி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

    ×