காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் 7 கடைகளுக்கு 'சீல்'

வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய பணம் பல கோடி ரூபாய் நிலுவையில் இருந்து வருகிறது.
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் 7 கடைகளுக்கு 'சீல்'
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய பணம் பல கோடி ரூபாய் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ரவீந்திரன் உத்தரவின் படி மாநகராட்சி இணை ஆணையர் தலைமையில் அதிகாரிகள் காஞ்சிபுரம் பஸ் நிலையம் பகுதியில் ரூ.1 கோடியே 30 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த உணவகம் உள்ளிட்ட 7 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com