என் மலர்
காஞ்சிபுரம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ராகுல்காந்தி ராஜினாமா செய்வதாக சொன்னதை காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஏற்கவில்லை. ராகுல்காந்தியை முழுமையாக ஆதரித்து கட்சியை பலப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினோம்.
உட்கட்சி பூசல் என்பது எல்லா கட்சிகளிலும் இருக்கிறது. தேர்தல் தோல்வி பற்றிய காரணங்கள் சம்பந்தமாக ஒரே நாளில் முடிவு எடுக்க முடியாது. மக்கள் மத்தியில் தேர்தல் முடிவு குறித்து அறிய சில காலம் ஆகும். அடுத்த காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
கேரளா, புதுச்சேரி, தமிழகம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு எதிர்ப்பாக மக்கள் வாக்களித்து உள்ளனர். தென் மாநிலங்களை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணித்தது தான் இந்த தோல்விக்கு காரணம். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 3 லட்சம் முதல் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனை வட மாநில தலைவர்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சிறப்பாக இருந்தது. பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு வந்தால் செல்வோம். கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்கவில்லை. கிரண்பெடி எல்லா திட்டங்களையும் தடுத்து நிறுத்தியதால் அதன் எதிரொலி தேர்தலில் இருந்தது.
மாநில வளர்ச்சிக்காக எல்லாவற்றையும் விட்டு கொடுத்து பிரதமருடன் இணக்கமாக இருக்கிறோம். எல்லோரையும் அரவணைத்து செல்வதாக பிரதமர் சொல்லி இருக்கிறார். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று கடந்த காலத்தில் பிரதமர் சொன்னார். ஆனால் மாநிலத்தில் சுயாட்சி தரவில்லை. எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் கவர்னர்கள், துணை நிலை கவர்னர்கள் மூலமாக தொல்லை தந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சோழிங்கநல்லூர்:
நீலாங்கரை அருகே உள்ள அக்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜின்னா (வயது 31). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள பாத்திரக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று முகமது ஜின்னா மோட்டார் சைக்கிளில் அக்கரையில் இருந்து ஈஞ்சம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள தடுப் புச்சுவரில் பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த முகமது ஜின்னா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து நீலாங்கரை போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்கள் ஏராளமான வாக்குகள் அளித்து வெற்றி பெற வைத்து உள்ளனர். தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியானது. சந்தர்ப்பவாதம் கிடையாது. தென்னிந்தியாவில் வெற்றி பெற்று உள்ளோம். வட இந்தியாவில் தோல்வியடைந்து உள்ளோம். வருங்காலத்தில் அங்கும் கட்சியை வளர்த்து மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.
இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. ஒரு மாநிலத்தில் வேறு கட்சி வெற்றி பெற்றால் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்றால் அது சர்வாதிகாரம். மத்திய அரசின் திட்டங்கள் மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. தமிழகத்தை ஒதுக்கி விடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டக்கூடாது. தமிழகத்தில் தாமரை நன்றாக மலரட்டும். ஆனால் தாமரை மலர தண்ணீர் வேண்டும். நீரற்ற குட்டையில் தாமரை மலருமா?.
தோல்வியும், வெற்றியும் தற்காலிகமானது என்பதை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புத்தர் சொல்லி இருக்கிறார். மக்களை நேசிக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை சொல்கிறோம். மொழி, சாதி, மதம் ஆகியவற்றை கொண்டு மக்களை பிரிக்கக்கூடாது என்று கூறுகிறோம். ஆனால் மோடி தனி மனித விமர்சனத்தை வைத்தார். காங்கிரஸ் கட்சி சரியான பாதையில் செல்கிறது. இது ஒரு சறுக்கல் தான். வீழ்ச்சி கிடையாது.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வழி நடத்த ராகுல்காந்தியை தவிர வேறு யாரும் இல்லை. தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி சொன்னாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தொண்டர்கள் ராகுல்காந்தியை தான் விரும்புகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் மகிழ்ச்சி. அதற்காக பேச்சுவார்த்தை எல்லாம் நடத்த மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலையும் மாலையும் எம்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.
உலகப்பிரசித்தி பெற்ற கருடசேவை உற்சவம் கடந்த 19-ம் தேதியும், திருத்தேர் உற்சவம் 23-ம் தேதியும் நடந்து முடிந்த நிலையில் நேற்று மாலை எம்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
இந்நிலையில் பாரம்பரிய முறைப்படி எம்பெருமான் காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பித் தெருவினில் உள்ள மண்டபத்தில் வேடுபறி என்ற நிகழ்ச்சிக்காக எழுந்தருளினார். அங்கு தென்கலை பிரிவினர் பாசுரம் பாட முயற்சி செய்தனர். அங்கிருந்த வடகலை பிரிவினர் அவர்கள் பாசுரம் பாட எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இரு பிரிவினருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் திடீரென அவர்கள் கைகலப்பிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பிற்காக வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
பின்னர் இரு பிரிவினரும் பிரிந்து சென்ற நிலையில் இன்று காலை இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்று காலை முதல் இருதரப்பினரிடையே போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடந்து வரும் நிலையில் வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்குளத்தில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அத்தி வரதர் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோயிலில் இரு பிரிவினரிடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். நான் கூறிய அனைத்து திட்டங்களும் இன்னும் ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றப்படும்.
பாராளுமன்றத்தில் நாங்கள் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டேதான் இருப்போம். மக்களின் குறைகளை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயம் தட்டி கேட்போம். சட்டமன்ற உறுப்பினராக உள்ள நான், பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால் 14 நாட்களுக்குள் சட்டரீதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்.
கூட்டணி கட்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்தார். பா.ஜனதாவை எதிர்ப்பது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 22,53,041, மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 13,88,666 வாக்குகள் பதிவானது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,91,220 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கம் 1,69,469 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 53,027, அமமுக வேட்பாளர் தாம்பரம் நாராயணன் 25,804, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீதர் 80,058 வாக்குகள் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.
காஞ்சிபுரம் தொகுதியில் 16,43,656, மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 12,14,086 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. வேட்பாளர் ஜி.செல்வம் 6,84,004 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் 3,97,372 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவரஞ்சினி 62,771, அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 55,213 வாக்குகள் பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை.
பாராளுமன்றத் தேர்திலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் தொகுதியில் 19 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் செல்வம் 5,30,533 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 3,15,463 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார். அமமுக வேட்பாளர் முனுசாமி 44 ஆயிரத்து 246 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவரஞ்சனி 49 ஆயிரத்து 412 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கள நிலவரத்தை யாரும் கணிக்க முடியாத சூழ்நிலையாக உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை பெறும். 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும்.
எல்லா கருத்து கணிப்புகளும் சரி என்று சொல்ல முடியாது. ஆனால் கருத்து கணிப்புகளுக்கு பின்னால் பா.ஜனதா இருக்கிறது என்று எப்படி கூறமுடியும்?. தோல்வியை முன் எடுத்து செல்லும்போது, நியாயமாக, ஜனநாயக முறையில் நடந்த தேர்தலையும் கேள்விக்குறியாக்கி கொண்டு இருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் மக்களிடம் தூய்மையான, கடின உழைப்பை கூறி வாக்கு சேகரித்தேன். 20 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் வேண்டும் என்று மக்களிடம் கேட்டு உள்ளேன். எந்த ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை பெற்றது கிடையாது. நேர்மையான அரசியல்வாதியாக உள்ளேன். நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன்.
தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என 2 முக்கிய தலைவர்கள் இல்லாத தேர்தல் என்பதால் வெற்றி யாருக்கு? என கணிக்க முடியாத நிலை உள்ளது. நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன், சீமான் ஆகிய 3 புதிய முகங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்? என்பது தெரியாது.
டெல்லியில் நடந்த கூட்டத்தில் மக்களுக்கான பல திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. மோடி மீண்டும் வரவேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரோ தலைவர் கே.சிவன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

75-வது ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்திய பின்னர்தான் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பெரியார் நகரை சேர்ந்தவர் சண்முகையா, இவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சதீஷ்குமார் என்கிற செந்தில் குமார் (17), ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு தனது தந்தையுடன் திரிசூலம் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது ரோட்டோரம் சென்று கொண்டிருந்த பாம்பு சதீஷ் குமாரை கடித்தது. உடனே அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் “கூலிங் அட்டை” தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலார்கள் வேலை செய்து வருகின்றனர்.
இன்று காலை 9 மணியளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென்று தீ பற்றி எரிந்து. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியில் ஓடிவந்தனர்.
தீ விபத்து பற்றி அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், காஞ்சிபுரம், ஆகிய பகுதியில் இருந்து 5 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தொழிற்சாலையில் தீப்பிடித்ததும் ஊழியர்கள் வெளியே வந்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.






