search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலாங்கரை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
    X

    நீலாங்கரை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    நீலாங்கரை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரை அருகே உள்ள அக்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜின்னா (வயது 31). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள பாத்திரக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று முகமது ஜின்னா மோட்டார் சைக்கிளில் அக்கரையில் இருந்து ஈஞ்சம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவே உள்ள தடுப் புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த முகமது ஜின்னா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து நீலாங்கரை போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×