என் மலர்
ஈரோடு
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 6 வயது முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் கல்வி கற்க வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பள்ளிக்கூடங்கள் செல்லா குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு ஆண்டுதோறும் எடுக்கப்படுகிறது. அதில் பள்ளிக்கூடங்களுக்கு செல்லாத குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களை பள்ளிக்கூடங்களில் சேர்த்து படிக்க வைக்கவும் அரசு அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த கணக்கெடுக்கும் பணி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பள்ளிக் கூடங்களுக்கு செல்லாதவர்களை கணக்கெடுக்கும் பணி ஈரோடு மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. இந்த பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு பழைய பூந்துறைரோடு ஒடைபள்ளம் பகுதியில் அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் நேற்று ஈடுபட்டார்கள். அவர்கள் வீடு, வீடாக சென்று 18 வயதுக்கு உள்பட்டவர்கள் உள்ளனரா? அவர்கள் எந்த பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கிறார்கள்? எந்த வகுப்பு படிக்கிறார்கள்? முறையாக பள்ளிக்கூடங்களுக்கு செல்கிறார்களா? போன்ற விவரங்களை சேகரித்தனர். இந்த பணி அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்தும் அரசியல் நிலைப்பாடு குறித்தும் அடுத்த மாதம் நடைபெறும் தலைமை நிர்வாக குழுவில் முடிவு எடுக்கப்படும்.
7 பேர் விடுதலை குறித்து கவர்னர் மவுனம் காக்க கூடாது. உடனடியாக 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
வட மாநிலங்கள் போல் தமிழகத்தில் பா.ஜனதாவை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்ற வழியில் உள்ள பா.ஜனதாவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது நல்லதல்ல. மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட நிலை போலவே தமிழகத்திலும் அ.தி.மு.க.வுக்கு ஏற்படும்.
ரஜினி ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்.அவர் மிக அமைதியை விரும்பக் கூடியவர். அரசியல் மிக பரபரப்பான ஒன்று.அவர் அரசியலுக்கு வரமாட்டார் என நான் நம்புகிறேன். நாங்கள் ஏற்கனவே அதிமுக - பா.ஜனதா கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டோம். அ.தி.மு.க.வை நினைத்து கவலைப்படுகிறோம்.
தமிழக அரசு நீட் தேர்வில் தேர்வான மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. அதனை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். வேல் யாத்திரை குறித்து கருத்து கூற விரும்ப வில்லை.
உதயநிதி ஸ்டாலின் அரசியல் நோக்கத்திற்காக கைது செய்தது தவறு. மதம் மற்றும் சாதி ரீதியாக செல்வதை தடை செய்ய வேண்டும். அரசியல் நோக்கதற்காக செல்வதை தடை செய்ய கூடாது.
ஈரோடு:
ஈரோடு கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் இயங்காததால் ஆன்லைனில் மாணவி பாடம் படித்து வந்தார்.
மாணவியின் தாய் இறந்து விட்டார். அவரது தந்தை லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். வேலை காரணமாக அவரது தந்தை வெளியே சென்று விடுவார். மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்து வந்தார்.
இதை அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (26) என்பவர் கவனித்து வந்தார். சம்பவத்தன்று மாணவிக்கு ஆறுமுகம் பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து மாணவி வீடு திரும்பிய தனது தந்தையிடம் தெரிவித்தார். அவர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையத்தில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.
ஈரோடு சூரம்பட்டிவலசு காந்திஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவருடைய மனைவி கீதா (43). இவர்களுக்கு கீர்த்தனா (25), ஹேமா (23) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கணேசன் சூரம்பட்டி வலசு பகுதியில் காய்கறி கமிஷன் மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்தார். தொழில் சம்பந்தமாக இவர் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கணேசனால் தான் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த கணேசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று தனது காய்கறி கமிஷன் மண்டியில் விஷம் குடித்துவிட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணேசனின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் மகள்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான பாசனப்பகுதிகளில் ஒன்று காலிங்கராயன் பாசனப்பகுதி. ஈரோடு முதல் கொடுமுடி ஆவுடையார்பாறை வரை சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகிறது. இதில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஏக்கர் வரை நெல் பயிரிடப்படுகிறது. காலிங்கராயன் பாசனப்பகுதிகளில் ஆண்டுக்கு 10½ மாதங்கள் தண்ணீர் வருவதால் முப்போகம் விளையும் வயல்களை கொண்டதாக உள்ளன.
அதன்படி தற்போது காலிங்கராயன் பாசன பகுதியான ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வயல்களில் பயிர் செய்யப்பட்டு உள்ள நெல் பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. முற்றிய நெல்மணிகள் தலைசாய்ந்து தரையைப்பார்த்து அறுவடைக்கு தயாராக உள்ளன. அறுவடைக்கான ஏற்பாடுகளை விவசாயிகள் செய்து வருகிறார்கள்.






