என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகைப்பூ
    X
    மல்லிகைப்பூ

    பவானிசாகர் பகுதியில் பூக்கள் விலை குறைந்தது

    பவானிசாகர் பகுதியில் பூக்கள் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    பவானிசாகர்:

    பவானிசாகர் மற்றும் அதன் அருகே உள்ள எரங்காட்டூர், அக்கரைதத்தப்பள்ளி, கொத்தமங்கலம், கெஞ்சனூர், பகுத்தம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்துள்ளனர். நாள்தோறும் இப்பகுதியில் சுமார் 5 டன் பூக்கள் விளைகிறது. இந்தப் பூக்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கர்நாடகம் மாநிலத்திற்கும் அனுப்புகின்றனர். பூக்களில் தேவைக்கேற்ப நாள்தோறும் அதன் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

    பவானிசாகர் பகுதியில் நேற்று மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,100-க்கும், முல்லைப்பூ ரூ.310-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும் வியாபாரிகள் வாங்கி சென்றனர். அதேபோல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,250-க்கும், முல்லைப்பூ ரூ.710-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினத்தை விட நேற்று முல்லைப்பூ (கிலோ) ரூ.400-ம், மல்லிகைப்பூ (கிலோ) ரூ.150-ம், சம்பங்கி பூ ரூ.30-ம் குறைந்திருந்தது.
    Next Story
    ×