search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஈரோட்டில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு- தொழிலாளி போக்சோவில் கைது

    ஈரோட்டில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் லோகநாதபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் ஆறுமுகம் (வயது 26). கட்டிட தொழிலாளி. ஆறுமுகத்துக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி ஈரோட்டை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை ஆறுமுகம் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு அவர் பாலியல் ரீதியாக மாணவிக்கு தொந்தரவு கொடுத்து உள்ளார். இதுதொடர்பாக அந்த மாணவி தனது தந்தையிடம் தெரிவித்து உள்ளார். 

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆறுமுகத்தை கைது செய்தனர்.
    Next Story
    ×