என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை
Byமாலை மலர்21 Nov 2020 11:43 AM GMT (Updated: 21 Nov 2020 11:43 AM GMT)
ஈரோடு அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டிவலசு காந்திஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவருடைய மனைவி கீதா (43). இவர்களுக்கு கீர்த்தனா (25), ஹேமா (23) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கணேசன் சூரம்பட்டி வலசு பகுதியில் காய்கறி கமிஷன் மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்தார். தொழில் சம்பந்தமாக இவர் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கணேசனால் தான் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த கணேசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று தனது காய்கறி கமிஷன் மண்டியில் விஷம் குடித்துவிட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணேசனின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் மகள்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு சூரம்பட்டிவலசு காந்திஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவருடைய மனைவி கீதா (43). இவர்களுக்கு கீர்த்தனா (25), ஹேமா (23) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கணேசன் சூரம்பட்டி வலசு பகுதியில் காய்கறி கமிஷன் மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்தார். தொழில் சம்பந்தமாக இவர் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கணேசனால் தான் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த கணேசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று தனது காய்கறி கமிஷன் மண்டியில் விஷம் குடித்துவிட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணேசனின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் மகள்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X