என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
    • இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் தினமும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் பவானி, காவிரி கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி பரிகாரத் தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    மேலும் இங்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி வருகிறார்கள். அமாவாசை, பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    குறிப்பாக ஐப்பசி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை உள்பட ஒவ்வொரு மாத த்தில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் பலர் வந்து தங்கள் குடும்ப த்தில் இறந்த முன்னோ ர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடு தல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் இங்கு செய்யப்படுகிறது.

    இதனால் பவானி கூடுதுறைக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், உள்ளூர், வெளியூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து பல்வேறு பரிகாரங்கள் செய்து வருகிறார்கள். அதே போல் கர்நாடகா, ஆந்திரா உள்பட வெளி மாநில பக்தர்கள் ஏராளமான வர்கள் வந்து புனித நீராடி பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) தை மாத அமாவாசை தினத்தை யொட்டி பவானி சங்கமே ஸ்வரர் கோவில் கூடுதுறை பின்பகுதியில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் கூடுதுறைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சேலம்,நாமக்கல், கரூர், கோவை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காலை முதலே பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பல்வேறு பரிகார பூஜைகள் செய்து விட்டு சென்றனர். இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

    இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தனி த்தனியாக குளித்து விட்டு பரிகார பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சங்கமேஸ்வரரை வழிபாடு செய்து விட்டு சென்றனர்.

    தை அமாவாசை தின த்தை முன்னிட்டு அங்கு தற்காலிக இரும்பு தகர செட் அமைக்கப்பட்ட இடங்களில் இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்தனர்.

    பவானி போலீசார் சிசி டிவி கேமராக்கள் பொரு த்தப்பட்டு குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பாது காப்பு பணியில் பவானி மற்றும் சித்தோடு, அம்மா பேட்டை, அந்தியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வரு கிறார்கள்.


    இதேபோல் அம்மாபேட்டை காவிரி படித்துறையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.

    மேலும் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கும் திதி கொடுத்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் திருமணம் ஆகாத இளம் பெண்கள், வாலிபர்கள் அதிகளவில் வந்து ஆற்றில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்தனர். மேலும் பலர் பல்வேறு பரிகாரங்களையும் செய்து விட்டு சென்றனர்.

    இதையடுத்து கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு சென்றனர். இதனால் அதிகாலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் நகரின் பல பகுதிகளைில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் முன்னோ ர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பரிகார பூஜைகள் செய்து விட்டு சென்றனர்.

    • நீரும், சோறும் இல்லை என்றால் ஒரு நாட்டில் புரட்சி வெடிக்கும்.
    • தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சம்பத் நகர் பகுதியில், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

    இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தி.மு.க. அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்தது. தமிழுக்கும், தமிழினத்திற்கும் தி.மு.கவும், கருணாநிதியும் பல துரோகங்களைச் செய்துள்ளனர். அதனை பொறுக்க முடியாமல் தான் நாம் தமிழர் இயக்கம் உருவானது.

    நாட்டு மக்களுக்கு மொபைல்போன், கார் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்க அரசிடம் திட்டம் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு உணவு கொடுக்க அரசிடம் திட்டம் இல்லை. நீரும், சோறும் இல்லை என்றால் ஒரு நாட்டில் புரட்சி வெடிக்கும். இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் இது நடந்துள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சொத்துவரி, மின்கட்டண உயர்வு பற்றி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. சாராய விற்பனையைத் தவிர இவர்களுக்கு வருவாய் தரும் மாற்றுத் திட்டம் இல்லை.

    எனவே வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து, நான் வாக்காளர்களை ஏமாற்ற விரும்பவில்லை. நாங்கள் குறைகேட்க வரவில்லை. குறைதீர்க்க வந்திருக்கிறோம். 100 நாள் வேலைத்திட்டத்தில், சோம்பி உட்கார்ந்து இருப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றனர்.

    அவர்கள் தினம் ஒரு மரம் நட்டிருந்தால் கூட பூமி பசுமையாகி இருக்கும். 100 நாள் வேலை திட்டத்தால் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. தமிழகத்தில் முன்பு இந்தி திணிக்கப்பட்டது.

    இப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேலை நிமித்தமாக குடியேற்றம் செய்யும் சதி நடக்கிறது. இதனை தடுத்து தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு, நல்ல வாழ்க்கை வழங்க நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும்.

    மக்கள் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையத்தை கட்டிக் காட்ட முடியுமா? பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்லும் நாளை நான் உருவாக்குவேன். நீங்கள் எல்லாம் சூத்திரன் என்று சொல்லி பெரியார் நம்மை ஏமாற்றினார். அதில் நானும் ஏமாந்தேன்.

    திராவிடர்களுக்கு ஒரு பெரியார் தான். தமிழர்களுக்கு ஓராயிரம் பெரியார்கள் இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கில் எங்களுக்கு வாக்களித்து நம்பிக்கையோடு ஒரு அடி எடுத்து வையுங்கள். மாபெரும் அரசியல் புரட்சிக்கான காலடித்தடம் ஈரோடு கிழக்கில் தொடங்கட்டும். இந்த வெற்றி தமிழ் தேசிய இனத்தின் வெற்றியாக கருதி எங்களுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 19-ந்தேதி முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
    • வருகிற 3-ம் தேதி இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக ஈரோடு கிழக்கு தொகுதியில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதில் 9 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க-நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என 46 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் மற்றும் அலுவலர்கள் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி, வாக்குச்சாவடிகளை பயன்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணியை மாநகராட்சி ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வார்டிலும் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது வாக்காளர் அடையாள அட்டையை பரிசோதித்து அவர்கள் வாக்களிக்கும் போது எடுத்துச் செல்ல வேண்டிய பூத்சிலிப்பை வழங்கி வருகின்றனர்.

    பூத் சிலிப் வழங்கும் பணி ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் 33 வார்டுகள் ஈரோடு கிழக்கு தொகுதியை உள்ளடக்கியதாகும். இங்கு பூத்சிலிப் வழங்கும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 237 வாக்கு சாவடிகளுடன் கூடுதலாக 20 சதவீதம் வாக்குச்சாவடிகள் சேர்த்து 284 முதன்மை அலுவலர், முதல் நிலை அலுவலர், 2-ம் நிலை அலுவலர், 3-ம் நிலை அலுவலர்கள் மற்றும் 1200 வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக 58 நான்காம் நிலை அலுவலர்கள் என 1,194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.

    இவர்களுக்கு கடந்த 19-ந்தேதி முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஆர்.ஏ.என்.எம் கலை அறிவியல் கல்லூரியில் 2-ம் கட்ட பயிற்சி நடந்தது. இவர்களுக்கு மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.

    இதில் வாக்குப்பதிவின்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு சரி செய்வது, வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற 3-ம் தேதி இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தபால் ஓட்டு போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு எந்தெந்த வாக்கு சாவடி மையங்களில் பணியாற்றுவது குறித்த ஆணை வழங்கப்படும்.

    • தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
    • 15-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் நிலத்தில் சுற்றி திரிந்துள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வன சரத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

    சமீப காலமாக கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்து தாளவாடி அருகே வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருள்வாடி கிராமத்திற்கு கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 15-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் அருள்வாடி கிராமம் அருகே உள்ள மானாவாரி நிலத்தில் சுற்றி திரிந்துள்ளது.

    இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். யானை கூட்டங்கள் விவசாய நிலத்தில் அல்லது ஊருக்குள் புகுந்தால் அதிக சேதாரம் ஏற்படும் என்பதால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானைக் கூட்டங்கள் அருள்வாடி கிராமத்திற்குள் புகாதவாறு கண்காணித்து வருகின்றனர். மேலும் யானைக் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்று கூறியவன் நான்
    • தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சமூக நீதிக்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார் தான்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. துரை வைகோவிடம் பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த துரை வைகோ, "பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்று கூறியவன் நான். நான் இந்து பக்தன் தான். எல்லா கோவிலுக்கும் போவேன். அதேநேரத்தில் தந்தை பெரியார் இல்லாமல் சமூகநீதி கிடையாது. சமூக வளர்ச்சி கிடையாது. குறிப்பாக பெண்கள் படிக்கலாம், வேலை செல்லலாம் என்று சம உரிமை கொடுத்தது பெரியார் தான்.

    நம்முடைய இளைஞர்களுக்கு ஆங்கிலப்புலமை இருப்பதற்கு இருமொழி கொள்கை தான் காரணம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சமூக நீதிக்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார் தான். நமக்காக பாடுபட்ட பெரியாரை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும் ஈனப்பிறவிதான்" என்று தெரிவித்தார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • உரிய ஆவணங்களை சமர்பித்ததால் இதுவரை 12 லட்சத்து 93 ஆயிரத்து 60 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இக்குழுவினர் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை கருங்கல்பாளையம், காவிரி ரோடு அருகே நிலை கண்காணிப்பு குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், கார் உரிமையாளர் மதன் என்பதும் நாமக்கல் மாவட்டம் களத்துவலவு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    இதேபோன்று, நிலை கண்காணிப்பு குழுவினர் பி.பி.அக்ரஹாரத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் சோதனை மேற்கொண்ட போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. காரை ஒட்டி வந்தவர் ராமன் என்பதும், அவர் அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் என்பதும் தெரியவந்தது.

    பழையபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. காரை ஒட்டி வந்தவர் கவிதா என்பதும் திருப்பூர் மாவட்டம் கணியம்பூண்டி என்பதும் தெரிய வந்தது.

    இதே போல் நேற்று இரவு 11.20 மணி அளவில் வில்லரசம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.2.90 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து காரில் வந்தவரிடம் விசாரித்த போது அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஆசிக் முகமது என்பது தெரிய வந்தது. அவரிடம் பணத்திற்குரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    நேற்று ஒரே நாளில் ரூ.9 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ.33 லட்சத்து 85 ஆயிரத்து 60 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்ததால் இதுவரை 12 லட்சத்து 93 ஆயிரத்து 60 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • பெரியார் மண் என்று சொல்பவர்கள் மத்தியில் பெரியாரே ஒரு மண்ணு தான்.
    • எந்த சமூகத்திற்கு பெரியார் தொண்டு ஆற்றினார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    தமிழ் மொழி தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. தமிழ் மொழியின் தொன்மை குறித்து அறிந்தவர்கள் இன்று வரை யாரும் இல்லை. மொழி ஆய்வு அறிஞர்கள் தமிழை கண்டு வியந்து பார்க்கிறார்கள். திருக்குறளை கண்டு உலக மொழி ஆய்வு அறிஞர்கள் வியக்கிறார்கள்.

    திருக்குறளை ஆங்கிலத்தில், இந்தியில் படித்து காந்தி வியந்தார். உலகு எங்கும் தமிழை நோக்கி ஓடிவந்து கொண்டு இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் 50-க்கும் மேற்பட்ட சொற்களை கடனாக கொடுத்தது தமிழ்மொழி. ஏசு இறைமகன் பிறந்து 500 ஆண்டுகளுக்கு பின்னர் தான் ஆங்கில மொழி பிறக்கிறது.

    ஆனால் ஏசு பிறப்பதற்கு 500 ஆண்டுகள் முன்பு இருந்து தமிழ் மொழி இருந்து வருகிறது. ஆட்சியாளர்கள் தமிழர்கள் பெருமையை இப்போது சொல்லி வருகிறார்கள். தமிழ் காட்டுமிராண்டி மொழி, முட்டாளின் பாஷை, தமிழ் படித்தால் பிழைக்க முடியாது என்று சொன்னவர்களை ஒழிக்கமால் எப்படி தமிழை வளர்ப்பது.

    தமிழ் எங்களுக்கு பேச்சு மொழி அல்ல. மூச்சு மொழி, மற்றவர்களுக்கு மொழி, எங்களுக்கு உயிர். 800-க்கும் குறையாதவர்கள் தமிழ் மொழிக்காக உயிர் தியாகம் செய்து இருக்கிறார்கள். வாயை திறந்தால் இது பெரியார் மண் என்று சொல்பவர்கள் மத்தியில் பெரியாரே ஒரு மண்ணு தான்.

    பெரியாரை அடக்கம் செய்து இருப்பது தமிழ் தாய் மண் தான். பெரியார் இல்லை என்றால் உங்களுக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லும் நிலையில் பெரியாரால் எங்களுங்கு ஒன்றும் இல்லை.

    பெரியார் சமூகநீதி, சமத்துவம் சகோ தரத்துவம் ஜாதி ஒழிப்பு, பெண்ணியம் உரிமை எங்கே? எதற்கு எடுத்தாலும் திராவிடம், பெரியார்.

    தீரன் சின்னமலை, கொடிக்காத்த குமரன், பொன் சங்கர், காளிங்க ராயன் வாழ்ந்தவர்கள் மண் இது. அவர்களின் வாரிசுகள் நாங்கள்.

    அப்படி இருக்கும் நிலையில் பெரியார் பேசியது, எழுதியது எந்த மொழி என்பதற்கு பதில் இருக்கிறதா? மொழி, இனம் பாகுபாடு இல்லை என்று சொன்ன பெரியார். எந்த சமூகத்திற்கு பெரியார் தொண்டு ஆற்றினார். தேசமே இல்லை, தேசப்பற்று இல்லை, தேச அபிமானம் இல்லாத நிலையில் எப்படி திராவிட நாடு வரும்.

    தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் நாங்கள். தமிழ் இல்லாமல் தமிழர்கள் எப்படி வந்தார்கள். தமிழ் இல்லை என்று சொன்ன நிலையில் தமிழினத்தின் தலைவராக பெரியார் பட்டம் எப்படி வைத்து கொண்டீர்கள். இதுபோன்ற செயலுக்கு பெயர் தான் பிக்காளி தனம்.

    பிக்காளி என்றால் சுத்த பைத்தியக்காரன் என்று எங்கள் ஊரில் சொல்வா ர்கள். திடீர் கிளம்பும் பெரி யார் பக்தர்கள், இதே போல மேடை போட்டு பெரியார் பெற்று தந்த சமூக நீதி என்ன என்று பேசுங்கள் பார்க்கலாம். அப்படி மேடை போட்டு பேசுபவர்கள் பெரியாரை பேசு வார்கள்.

    பெரியார் பேசியதை பேச முடியுமா? பெரியார் புகழ் பாடுபவர்கள் பெரியார் படத்தை கொடுத்து ஓட்டு கேட்க வேண்டியது தானே. காந்தி படம் போட்ட நோட்டை கொடுத்து வாக்கு கேட்கிறார்கள்.

    காந்தி படம் இல்லையென்றால் மக்கள் உங்கள் மீது எடுத்து விடுவார்கள் வாந்தி. நீ அடைந்து விடுவாய் சாந்தி. நீ ஊசி பூ பூந்தி இப்படி என்னை டி.ராஜேந்திரன் ஆக்கி விடுவார்கள் போல இருக்கிறது.

    இதனால் காந்தி போட்ட பணம் கொடுத்து வாக்கு கேட்கும் உங்களுக்கு தலை வர் பெரியார் இல்லை, உங்கள் தலைவர் காந்தி தான். நாம் தமிழர் கட்சி மீது வீசப்படும் எறியப்படும் கற்களை கொண்டு கோட்டை கட்ட வந்த மக்கள் நாங்கள். 2026-ம் ஆண்டு தேர்தலில் சரியான ஆண் மகனாக இருந்தால் பெரியார் பெரும் தலைவர் செய்ததை சொல்லி வாக்கு கேளுங்கள் பார்க்கலாம்.

    நான் பிரபாகரனை தூக்கி கொண்டு வருகிறேன். பிரபாகரன் செய்ததை சொல்லி வாக்கு கேட்கிறேன். சீமான் பெரியார் பற்றி பேசுகிறான், திட்டுகிறான் ஓட்டுபோட வேண்டாம் என்று சொல்ல துணிவு இருக்கா? பெரியார் தன் தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தினை வெட்டினார்.

    இது அறிவார்ந்தவர்கள் செய்த செயலா? பெரியார் தாய்மொழி தமிழா? நீங்கள் இந்த நாட்டவரா? எதற்காக சொல்ல வந்த கருத்துக்களை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன தமிழ் மொழியில் எழுதினார். வேண்டுமெனில் ஆங்கிலத்தில் எழுதி வைத்து விட்டு சென்று இருந்தால் நாங்கள் படித்து இருக்க மாட்டோம்.

    பெரியார் வாரிசு இல்லை, எதற்காக சொத்து சேர்த்தீர்கள், இது ஒரு டிரைலர் தான். தொடர்ந்து, பெரியார் பற்றி பேசினால் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை. திராவிட அரசியல் சித்தாந்தத்தின் தொடக்கம் பெரியார் என்று சொன்னால் அதே இடத்தில் தமிழ் தேசியம் குறித்து மோதிக்கொள்ள நாம் தமிழர் கட்சி தயார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க போட்டியிடுகிறதா என்று தெரியவி ல்லை. இருட்டில் திருட்டு கோழி பிடிப்பது போன்று தான் உள்ளது. நாடு கருணாநிதி நாடாக மாறிவிட்டதால் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக கருணாநிதி படத்தை போட்டு விடுங்கள், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் நாடு கருணாநிதி நாடாக பெயர் மாற்றி விடலாம்.

    பெரியார் சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் மத்தியில் தமிழர்கள் என்று சொல்லி இனம் மொழி முன் வைத்து இறக்கப்பட்ட புலிக் கொடியை தூக்கி தற்போது 8.50 லட்சம் வாக்குகள் மூலம் தனித்து நின்று அங்கீகாரம் பெற்று உள்ளோம்.

    1 கோடியே 72 லட்சம் வாக்குகளாக நாம் தமிழர் கட்சியால் மாற்ற முடியாதா. அதனால் மைக் சின்னத்திற்கு வாக்களித்து புதிய அரசியல் தொடக்கமாக ஈரோடு கிழக்கில் இருந்து தொடங்குகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சீமான் பெரியார் குறித்து பேசிய இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • சீதாலட்சுமி உள்பட 37 பேர் மீது பறக்கும்படை அதிகாரிகள் புகார்.
    • ஒரே நாளில் மட்டும் 2 போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை யொட்டி தி.மு.க, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் தங்கி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று 2-வது நாளாக காளைமாட்டு சிலை, மரப்பாலம் மற்றும் கச்சேரி வீதி ஆகிய பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு கேட்டார்.

    காளைமாட்டு சிலையில் தமிழர் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய அனுமதி இல்லாமல் கட்சி கொடிகள், பேனர்கள் மற்றும் ஒலிப்பெருக்கி பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 37 பேர் மீது பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் மரப்பாலம் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் பிரசாரம் மேற்கொண்டதாக சீமான் உள்பட 8 பேர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பறக்கும்படை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல், கச்சேரி வீதியில் உரிய அனுமதி பெறாமல் தெருமுனை கூட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டதாக சீமான் உள்பட 6 பேர் மீது ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு அடிப்படை கட்டமைப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் செய்யவில்லை.
    • மாற்றத்திற்கான தேர்தலாக கருதி நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக இன்று 2-வது நாளாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காளை சிலை, மரப்பாலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பொதுமக்கள் மத்தியில் சீமான் பேசியதாவது:-

    தமிழ் தேசிய மக்கள் பல நெடுகாலமாக வாழ்விடத்தை இழந்த நிலையில் தாங்கள் அடிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கி றார்கள். தமிழக மக்கள் பாதுகாக்க எந்த நடவடி க்கையும் இல்லை. நிலக்கரி, மீத்தேன், ஈத்தேன், அணு உலை, மின்சாரம் போன்ற அனைத்தும் பிரித்து கொடுக்கப்படுகிறது.

    ஆனால் காவிரி நதிநீர் உரிமையில் ஒரு சொட்டு நீர் பெற முடியவில்லை. இத ற்காக போராடும் தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுகிறார்கள். ஆனால் அதை தடுக்க ஆள் இல்லை. எல்லா உரிமைகளையும் பறிகொடுத்து விட்டு மருத்துவத்தை கனவாக கொண்டு உள்ள தம்பி, தங்கை கனவுகள் நனவாகமால் போனதற்கு நீட் கொண்டு வந்தது காங்கிரஸ்.

    அதற்கு தி.மு.க கூடவே இருந்தது. நீட் ரகசிய திட்டம் உள்ளது என்று சொல்லி ஆட்சிக்கு தி.மு.க வந்தார்கள். இப்படி எல்லாம் வெற்று அறிக்கையை கொடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யவில்லை. நீண்ட காலமாக தமிழக மக்கள் மத்தியில் வாக்கு பெற்று அதிகாரத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    மாநில தன்னாட்சி, தமிழ் இன மக்கள் பெற்று அதிகாரத்தில் வந்தவர்கள் எந்த உரிமையும் மக்களுக்கு கொடுக்க வில்லை. கல்வி மாநில உரிமையை மத்திய அரசு எடுத்து கொள்ளும் போது மாநில அரசு அமைதியாக இருந்து விட்டது.

    இத்தனை ஆண்டுகள் பிறகு கல்வியை மாநில பட்டியல் கொண்டு வருவோம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னார்கள். வந்த பிறகு வாயை மூடி விட்டார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்க்கும் போது, ஒரே கார்டு ஒரே ரேஷன் ஒரே வரியை ஏன் எதிர்க்கவில்லை.

    இந்த இடத்தில் மாநில உரிமைகளை இவர்கள் பாதுகாக்கவில்லை. நாம் தமிழர் கட்சி வீதி வீதியாக வந்து வாக்கு கேட்கிறோம். ஆனால் தி.மு.க. வந்து கேட்கவில்லை. ஒரு அடிப்படை கட்டமைப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் செய்யவில்லை. தண்ணீர் சேகரிக்க ஏரி குட்டை எதையும் இவர்கள் செய்ய வில்லை.

    இவர்கள் சாதித்ததாக எதை சொல்வார்கள். ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தவிர என்ன செய்தார்கள். எதுவுமில்லை அதையும் மதுக்கடைகள் மூலம் திரும்ப ஆயிரம் ரூபாய் வாங்கி கொள்கிறார்கள். பேரிடர் போது உரிய இழப்பீடு கூட பெறமுடியாமல் மாநில உரிமைகள் பற்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம்.

    ஒவ்வொரு தேர்தல் போதும் கச்சத்தீவு மீட்பு தேர்தல் வாக்குறுதியில் மட்டுமே உள்ளது. இன்று வரை மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு இல்லை. மீனவர்கள் வலை கிழிப்பு, தாக்குதல் படகுகள் பறிமுதல் போன்றவை நடக்கின்றது. ஆனால் கேரள மாநிலத்தில் மீனவர்கள் எல்லை தாண்டும் இதுபோன்ற செயல் இல்லை.

    உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி நிற்கிறது. ஒவ்வொருவரும் மாற்றத்தை விரும்பினால் கண்டிப்பாக மாற்றம் நிச்சயமாக உருவாகும்.இந்த அரசியல் தேவையா தேவை இல்லையா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் வாக்கு கேட்டு வரவில்லை வருங்கால வாழ்க்கை கேட்டு வருகிறோம்.

    உங்கள் குரலாக உணர்ந்து வாக்களியுங்கள். அதிகாரம் வலிமையானது. அதனை எளிமையான கோட்பாடு கொண்ட எங்களுக்கு வழங்குகள். தேர்தல் ஆணையம் பல இடங்களில் 100 சதவீதம் வாக்கு செலுத்துவது கடமை என விழிப்புணர்வு வைக்கும் தேர்தல் ஆணையம், வாக்குக்கு காசு வாங்கினால், கொடுத்தால் தண்டனை என்று அதில் இடம் பெறவில்லை.

    நீண்ட நாட்களாக தேர்தல் ஆணையம் நாடகம் கம்பெனி இருந்து வருகிறது. ஓட்டுக்கு காசு கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்து யாராவது ஒருவருக்கு தண்டனை வாங்கி கொடுத்தால் தேர்தலில் காசு கொடுக்க மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி நிறுவனங்களிடம் அதிகமாக நிதி வசூல் செய்கிறது. விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் கொடுத்து விட்டு மக்கள் வரிப்பணத்தில் மிக்சி, கிரைண்டர் வாங்கி நிறுவனத்திற்கு பணம் கொடுக்கிறார்கள்.

    இவர்கள் தொடர்ந்து தேர்தல் அரசியல் தான் செய்வார்கள். இதனால் காதில் தேன் ஊற்றுவது போல செய்வார்கள். 50ஆண்டுகள் மயக்கத்தில் உள்ள மக்கள் தற்போது விழித்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள். இடைத்தேர்தல் என்று கருதாமல் மாற்றத்திற்கான தேர்தலாக கருதி நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீமான் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்கள், அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தாய்மார்களை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வைத்த ஆட்சி இது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் சீமான் பெரியார் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்க கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலைவர் அமைப்பினர் மனு அளித்தனர். சீமான் உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சீமான் நேற்று மாலை ஈரோடு வந்தார். சீமானுக்கு ஈரோட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வந்ததால் அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி குமலன்குட்டையில் அவர் தங்கி இருக்கும் ஓட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீமான் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்கள், அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாறுவேடத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நேற்று குமலன் குட்டையில் சீமானுக்கு எதிர்ப்பை தெரிவித்து அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு ஆதிதமிழர் கட்சியினர் 7 பேர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதேபோல் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் சீமான் பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கொங்கு விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த 2 நிர்வாகிகளை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏ.டி.எஸ்.பி வேலுமணி தலைமையில் சீமானுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று இரவு கருங்கல்பாளையத்தில் நடந்தபோது கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் திராவிடம்-தமிழ்தேசிய சித்தாந்தங்கள் மோதுகின்றன. இதில் மாற்றத்திற்கான ஒரு புரட்சிகர விதை ஊன்றப்படும். நாட்டில் ஊழல், லஞ்சம் தேசியமயமாக்கப்பட்டுள்ளது. இதை ஒழிக்க ஒரு நேர்மையாளன் ஆட்சிக்கு வந்தால் போதுமானது. ஆனால் மலை, மணல் போன்ற இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டால், அவற்றை திரும்பக் கொண்டு வர முடியாது.

    ரூ.8½ லட்சம் கோடி கடனாக பெற்ற தமிழகத்தில் எந்த நலத்திட்டமும் நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை, தரமான போக்குவரத்து, குடிநீர், சாலை வசதிகளை அரசால் வழங்க முடியவில்லை. அரசு தரமாக இல்லாததால், அரசின் சேவைகள் தரமானதாக இல்லை.

    தாய்மார்களை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வைத்த ஆட்சி இது. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரும்போது இதனை ரூ.2000 வழங்குவதாகச் சொல்வார்கள். கடனை ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தி, நம்மை கடன்காரர்களாக்கி விடுவார்கள். 90 சதவீத குற்றங்கள் போதையின் காரணமாகவே நடைபெறுகின்றன. ஒருபுறம் போதைக்கு அடிமையாகாதீர்கள் என்று சொல்லி விட்டு, மது விற்பனை ஏன் குறைந்தது என்று ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

    ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் வெற்றி, தமிழகத்தின் அரசியல் வரலாற்றை மாற்றி எழுதும். எளிதானதை செய்யாமல் சரியானதைச் செய்யுங்கள். ஜெயிக்கிற பக்கம் நிற்காமல், நிற்கிற பக்கத்தை ஜெயிக்க வையுங்கள்.

    இவர் அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 2-வது நாளாக மரப்பாலம் பகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் சூரம்பட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி என்பது ஈரோடு மாநகராட்சி பகுதியை முழுவதும் உள்ளடக்கியதாகும்.
    • 60 வார்டுகளில் 33 வார்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந் தேதி வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. ஈரோடு கிழக்கு தொகுதி என்பது ஈரோடு மாநகராட்சி பகுதியை முழுவதும் உள்ளடக்கியதாகும்.

    ஈரோடு மாநகராட்சிகளில் 60 வார்டுகளில் 33 வார்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ குழு அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாநகர் பகுதிக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி மிக முக்கிய பகுதியாக உள்ளது. இந்த வழியாக தான் சேலம், நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், சங்ககிரி, குமாரபாளையம், திருச்செங்கோடு, சென்னை போன்ற பகுதிகளுக்கு 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருவதால் இங்கு போலீசார், தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி தற்காலிகமாக பி.பி.அக்ரஹாரம் பகுதி, சம்பத் நகர், எல்லை மாரியம்மன் கோவில், மூல பட்டறை நால்ரோடு, கொல்லம்பாளையம், வீரப்பம்பாளையம், சூளை, கருங்கல்பாளையம் காந்தி சிலை உள்பட 12 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு துணை ராணுவ படையினர், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை இந்த பணியை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார்.

    • அத்தியாவசிய பாதுகாப்பு பணிக்கு 18 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • துப்பாக்கிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என கடந்த 7-ந் தேதி அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கை களை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இதில் முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் உரிமம் பெற்று தற்காப்பிற்காக வைத்துள்ள ஒற்றைக்குழல், இரட்டைக் குழல் துப்பாக்கிகள், ரைப்பிள், பிஸ்டல் போன்ற துப்பாக்கிகளை உரிமையாளர்கள் உடனடியாக போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதன் பேரில் இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்ற 286 துப்பாக்கிகள் உள்ளன. இதில் கருவூல பாதுகாப்பு, வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பாதுகாப்பு பணிக்கு 18 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து 268 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த துப்பாக்கிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் ஆனதும் உரிமையாளர்களிடம் மீண்டும் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×