என் மலர்
ஈரோடு
- ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உரிய ஆவணங்களை சமர்பித்ததால் இதுவரை 12 லட்சத்து 93 ஆயிரத்து 60 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை கருங்கல்பாளையம், காவிரி ரோடு அருகே நிலை கண்காணிப்பு குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், கார் உரிமையாளர் மதன் என்பதும் நாமக்கல் மாவட்டம் களத்துவலவு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதேபோன்று, நிலை கண்காணிப்பு குழுவினர் பி.பி.அக்ரஹாரத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் சோதனை மேற்கொண்ட போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. காரை ஒட்டி வந்தவர் ராமன் என்பதும், அவர் அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் என்பதும் தெரியவந்தது.
பழையபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. காரை ஒட்டி வந்தவர் கவிதா என்பதும் திருப்பூர் மாவட்டம் கணியம்பூண்டி என்பதும் தெரிய வந்தது.
இதே போல் நேற்று இரவு 11.20 மணி அளவில் வில்லரசம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.2.90 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து காரில் வந்தவரிடம் விசாரித்த போது அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஆசிக் முகமது என்பது தெரிய வந்தது. அவரிடம் பணத்திற்குரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் ரூ.9 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ.33 லட்சத்து 85 ஆயிரத்து 60 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்ததால் இதுவரை 12 லட்சத்து 93 ஆயிரத்து 60 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- பெரியார் மண் என்று சொல்பவர்கள் மத்தியில் பெரியாரே ஒரு மண்ணு தான்.
- எந்த சமூகத்திற்கு பெரியார் தொண்டு ஆற்றினார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-
தமிழ் மொழி தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. தமிழ் மொழியின் தொன்மை குறித்து அறிந்தவர்கள் இன்று வரை யாரும் இல்லை. மொழி ஆய்வு அறிஞர்கள் தமிழை கண்டு வியந்து பார்க்கிறார்கள். திருக்குறளை கண்டு உலக மொழி ஆய்வு அறிஞர்கள் வியக்கிறார்கள்.
திருக்குறளை ஆங்கிலத்தில், இந்தியில் படித்து காந்தி வியந்தார். உலகு எங்கும் தமிழை நோக்கி ஓடிவந்து கொண்டு இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் 50-க்கும் மேற்பட்ட சொற்களை கடனாக கொடுத்தது தமிழ்மொழி. ஏசு இறைமகன் பிறந்து 500 ஆண்டுகளுக்கு பின்னர் தான் ஆங்கில மொழி பிறக்கிறது.
ஆனால் ஏசு பிறப்பதற்கு 500 ஆண்டுகள் முன்பு இருந்து தமிழ் மொழி இருந்து வருகிறது. ஆட்சியாளர்கள் தமிழர்கள் பெருமையை இப்போது சொல்லி வருகிறார்கள். தமிழ் காட்டுமிராண்டி மொழி, முட்டாளின் பாஷை, தமிழ் படித்தால் பிழைக்க முடியாது என்று சொன்னவர்களை ஒழிக்கமால் எப்படி தமிழை வளர்ப்பது.
தமிழ் எங்களுக்கு பேச்சு மொழி அல்ல. மூச்சு மொழி, மற்றவர்களுக்கு மொழி, எங்களுக்கு உயிர். 800-க்கும் குறையாதவர்கள் தமிழ் மொழிக்காக உயிர் தியாகம் செய்து இருக்கிறார்கள். வாயை திறந்தால் இது பெரியார் மண் என்று சொல்பவர்கள் மத்தியில் பெரியாரே ஒரு மண்ணு தான்.
பெரியாரை அடக்கம் செய்து இருப்பது தமிழ் தாய் மண் தான். பெரியார் இல்லை என்றால் உங்களுக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லும் நிலையில் பெரியாரால் எங்களுங்கு ஒன்றும் இல்லை.
பெரியார் சமூகநீதி, சமத்துவம் சகோ தரத்துவம் ஜாதி ஒழிப்பு, பெண்ணியம் உரிமை எங்கே? எதற்கு எடுத்தாலும் திராவிடம், பெரியார்.
தீரன் சின்னமலை, கொடிக்காத்த குமரன், பொன் சங்கர், காளிங்க ராயன் வாழ்ந்தவர்கள் மண் இது. அவர்களின் வாரிசுகள் நாங்கள்.
அப்படி இருக்கும் நிலையில் பெரியார் பேசியது, எழுதியது எந்த மொழி என்பதற்கு பதில் இருக்கிறதா? மொழி, இனம் பாகுபாடு இல்லை என்று சொன்ன பெரியார். எந்த சமூகத்திற்கு பெரியார் தொண்டு ஆற்றினார். தேசமே இல்லை, தேசப்பற்று இல்லை, தேச அபிமானம் இல்லாத நிலையில் எப்படி திராவிட நாடு வரும்.
தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் நாங்கள். தமிழ் இல்லாமல் தமிழர்கள் எப்படி வந்தார்கள். தமிழ் இல்லை என்று சொன்ன நிலையில் தமிழினத்தின் தலைவராக பெரியார் பட்டம் எப்படி வைத்து கொண்டீர்கள். இதுபோன்ற செயலுக்கு பெயர் தான் பிக்காளி தனம்.
பிக்காளி என்றால் சுத்த பைத்தியக்காரன் என்று எங்கள் ஊரில் சொல்வா ர்கள். திடீர் கிளம்பும் பெரி யார் பக்தர்கள், இதே போல மேடை போட்டு பெரியார் பெற்று தந்த சமூக நீதி என்ன என்று பேசுங்கள் பார்க்கலாம். அப்படி மேடை போட்டு பேசுபவர்கள் பெரியாரை பேசு வார்கள்.
பெரியார் பேசியதை பேச முடியுமா? பெரியார் புகழ் பாடுபவர்கள் பெரியார் படத்தை கொடுத்து ஓட்டு கேட்க வேண்டியது தானே. காந்தி படம் போட்ட நோட்டை கொடுத்து வாக்கு கேட்கிறார்கள்.
காந்தி படம் இல்லையென்றால் மக்கள் உங்கள் மீது எடுத்து விடுவார்கள் வாந்தி. நீ அடைந்து விடுவாய் சாந்தி. நீ ஊசி பூ பூந்தி இப்படி என்னை டி.ராஜேந்திரன் ஆக்கி விடுவார்கள் போல இருக்கிறது.
இதனால் காந்தி போட்ட பணம் கொடுத்து வாக்கு கேட்கும் உங்களுக்கு தலை வர் பெரியார் இல்லை, உங்கள் தலைவர் காந்தி தான். நாம் தமிழர் கட்சி மீது வீசப்படும் எறியப்படும் கற்களை கொண்டு கோட்டை கட்ட வந்த மக்கள் நாங்கள். 2026-ம் ஆண்டு தேர்தலில் சரியான ஆண் மகனாக இருந்தால் பெரியார் பெரும் தலைவர் செய்ததை சொல்லி வாக்கு கேளுங்கள் பார்க்கலாம்.
நான் பிரபாகரனை தூக்கி கொண்டு வருகிறேன். பிரபாகரன் செய்ததை சொல்லி வாக்கு கேட்கிறேன். சீமான் பெரியார் பற்றி பேசுகிறான், திட்டுகிறான் ஓட்டுபோட வேண்டாம் என்று சொல்ல துணிவு இருக்கா? பெரியார் தன் தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தினை வெட்டினார்.
இது அறிவார்ந்தவர்கள் செய்த செயலா? பெரியார் தாய்மொழி தமிழா? நீங்கள் இந்த நாட்டவரா? எதற்காக சொல்ல வந்த கருத்துக்களை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன தமிழ் மொழியில் எழுதினார். வேண்டுமெனில் ஆங்கிலத்தில் எழுதி வைத்து விட்டு சென்று இருந்தால் நாங்கள் படித்து இருக்க மாட்டோம்.
பெரியார் வாரிசு இல்லை, எதற்காக சொத்து சேர்த்தீர்கள், இது ஒரு டிரைலர் தான். தொடர்ந்து, பெரியார் பற்றி பேசினால் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை. திராவிட அரசியல் சித்தாந்தத்தின் தொடக்கம் பெரியார் என்று சொன்னால் அதே இடத்தில் தமிழ் தேசியம் குறித்து மோதிக்கொள்ள நாம் தமிழர் கட்சி தயார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க போட்டியிடுகிறதா என்று தெரியவி ல்லை. இருட்டில் திருட்டு கோழி பிடிப்பது போன்று தான் உள்ளது. நாடு கருணாநிதி நாடாக மாறிவிட்டதால் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக கருணாநிதி படத்தை போட்டு விடுங்கள், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் நாடு கருணாநிதி நாடாக பெயர் மாற்றி விடலாம்.
பெரியார் சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் மத்தியில் தமிழர்கள் என்று சொல்லி இனம் மொழி முன் வைத்து இறக்கப்பட்ட புலிக் கொடியை தூக்கி தற்போது 8.50 லட்சம் வாக்குகள் மூலம் தனித்து நின்று அங்கீகாரம் பெற்று உள்ளோம்.
1 கோடியே 72 லட்சம் வாக்குகளாக நாம் தமிழர் கட்சியால் மாற்ற முடியாதா. அதனால் மைக் சின்னத்திற்கு வாக்களித்து புதிய அரசியல் தொடக்கமாக ஈரோடு கிழக்கில் இருந்து தொடங்குகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீமான் பெரியார் குறித்து பேசிய இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- சீதாலட்சுமி உள்பட 37 பேர் மீது பறக்கும்படை அதிகாரிகள் புகார்.
- ஒரே நாளில் மட்டும் 2 போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை யொட்டி தி.மு.க, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் தங்கி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று 2-வது நாளாக காளைமாட்டு சிலை, மரப்பாலம் மற்றும் கச்சேரி வீதி ஆகிய பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு கேட்டார்.
காளைமாட்டு சிலையில் தமிழர் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய அனுமதி இல்லாமல் கட்சி கொடிகள், பேனர்கள் மற்றும் ஒலிப்பெருக்கி பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 37 பேர் மீது பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் மரப்பாலம் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் பிரசாரம் மேற்கொண்டதாக சீமான் உள்பட 8 பேர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பறக்கும்படை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், கச்சேரி வீதியில் உரிய அனுமதி பெறாமல் தெருமுனை கூட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டதாக சீமான் உள்பட 6 பேர் மீது ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒரு அடிப்படை கட்டமைப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் செய்யவில்லை.
- மாற்றத்திற்கான தேர்தலாக கருதி நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக இன்று 2-வது நாளாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காளை சிலை, மரப்பாலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் சீமான் பேசியதாவது:-
தமிழ் தேசிய மக்கள் பல நெடுகாலமாக வாழ்விடத்தை இழந்த நிலையில் தாங்கள் அடிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கி றார்கள். தமிழக மக்கள் பாதுகாக்க எந்த நடவடி க்கையும் இல்லை. நிலக்கரி, மீத்தேன், ஈத்தேன், அணு உலை, மின்சாரம் போன்ற அனைத்தும் பிரித்து கொடுக்கப்படுகிறது.
ஆனால் காவிரி நதிநீர் உரிமையில் ஒரு சொட்டு நீர் பெற முடியவில்லை. இத ற்காக போராடும் தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுகிறார்கள். ஆனால் அதை தடுக்க ஆள் இல்லை. எல்லா உரிமைகளையும் பறிகொடுத்து விட்டு மருத்துவத்தை கனவாக கொண்டு உள்ள தம்பி, தங்கை கனவுகள் நனவாகமால் போனதற்கு நீட் கொண்டு வந்தது காங்கிரஸ்.
அதற்கு தி.மு.க கூடவே இருந்தது. நீட் ரகசிய திட்டம் உள்ளது என்று சொல்லி ஆட்சிக்கு தி.மு.க வந்தார்கள். இப்படி எல்லாம் வெற்று அறிக்கையை கொடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யவில்லை. நீண்ட காலமாக தமிழக மக்கள் மத்தியில் வாக்கு பெற்று அதிகாரத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
மாநில தன்னாட்சி, தமிழ் இன மக்கள் பெற்று அதிகாரத்தில் வந்தவர்கள் எந்த உரிமையும் மக்களுக்கு கொடுக்க வில்லை. கல்வி மாநில உரிமையை மத்திய அரசு எடுத்து கொள்ளும் போது மாநில அரசு அமைதியாக இருந்து விட்டது.
இத்தனை ஆண்டுகள் பிறகு கல்வியை மாநில பட்டியல் கொண்டு வருவோம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னார்கள். வந்த பிறகு வாயை மூடி விட்டார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்க்கும் போது, ஒரே கார்டு ஒரே ரேஷன் ஒரே வரியை ஏன் எதிர்க்கவில்லை.
இந்த இடத்தில் மாநில உரிமைகளை இவர்கள் பாதுகாக்கவில்லை. நாம் தமிழர் கட்சி வீதி வீதியாக வந்து வாக்கு கேட்கிறோம். ஆனால் தி.மு.க. வந்து கேட்கவில்லை. ஒரு அடிப்படை கட்டமைப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் செய்யவில்லை. தண்ணீர் சேகரிக்க ஏரி குட்டை எதையும் இவர்கள் செய்ய வில்லை.
இவர்கள் சாதித்ததாக எதை சொல்வார்கள். ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தவிர என்ன செய்தார்கள். எதுவுமில்லை அதையும் மதுக்கடைகள் மூலம் திரும்ப ஆயிரம் ரூபாய் வாங்கி கொள்கிறார்கள். பேரிடர் போது உரிய இழப்பீடு கூட பெறமுடியாமல் மாநில உரிமைகள் பற்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம்.
ஒவ்வொரு தேர்தல் போதும் கச்சத்தீவு மீட்பு தேர்தல் வாக்குறுதியில் மட்டுமே உள்ளது. இன்று வரை மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு இல்லை. மீனவர்கள் வலை கிழிப்பு, தாக்குதல் படகுகள் பறிமுதல் போன்றவை நடக்கின்றது. ஆனால் கேரள மாநிலத்தில் மீனவர்கள் எல்லை தாண்டும் இதுபோன்ற செயல் இல்லை.
உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி நிற்கிறது. ஒவ்வொருவரும் மாற்றத்தை விரும்பினால் கண்டிப்பாக மாற்றம் நிச்சயமாக உருவாகும்.இந்த அரசியல் தேவையா தேவை இல்லையா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் வாக்கு கேட்டு வரவில்லை வருங்கால வாழ்க்கை கேட்டு வருகிறோம்.
உங்கள் குரலாக உணர்ந்து வாக்களியுங்கள். அதிகாரம் வலிமையானது. அதனை எளிமையான கோட்பாடு கொண்ட எங்களுக்கு வழங்குகள். தேர்தல் ஆணையம் பல இடங்களில் 100 சதவீதம் வாக்கு செலுத்துவது கடமை என விழிப்புணர்வு வைக்கும் தேர்தல் ஆணையம், வாக்குக்கு காசு வாங்கினால், கொடுத்தால் தண்டனை என்று அதில் இடம் பெறவில்லை.
நீண்ட நாட்களாக தேர்தல் ஆணையம் நாடகம் கம்பெனி இருந்து வருகிறது. ஓட்டுக்கு காசு கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்து யாராவது ஒருவருக்கு தண்டனை வாங்கி கொடுத்தால் தேர்தலில் காசு கொடுக்க மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி நிறுவனங்களிடம் அதிகமாக நிதி வசூல் செய்கிறது. விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் கொடுத்து விட்டு மக்கள் வரிப்பணத்தில் மிக்சி, கிரைண்டர் வாங்கி நிறுவனத்திற்கு பணம் கொடுக்கிறார்கள்.
இவர்கள் தொடர்ந்து தேர்தல் அரசியல் தான் செய்வார்கள். இதனால் காதில் தேன் ஊற்றுவது போல செய்வார்கள். 50ஆண்டுகள் மயக்கத்தில் உள்ள மக்கள் தற்போது விழித்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள். இடைத்தேர்தல் என்று கருதாமல் மாற்றத்திற்கான தேர்தலாக கருதி நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சீமான் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்கள், அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தாய்மார்களை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வைத்த ஆட்சி இது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் சீமான் பெரியார் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்க கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலைவர் அமைப்பினர் மனு அளித்தனர். சீமான் உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சீமான் நேற்று மாலை ஈரோடு வந்தார். சீமானுக்கு ஈரோட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வந்ததால் அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி குமலன்குட்டையில் அவர் தங்கி இருக்கும் ஓட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீமான் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்கள், அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாறுவேடத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நேற்று குமலன் குட்டையில் சீமானுக்கு எதிர்ப்பை தெரிவித்து அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு ஆதிதமிழர் கட்சியினர் 7 பேர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதேபோல் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் சீமான் பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கொங்கு விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த 2 நிர்வாகிகளை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏ.டி.எஸ்.பி வேலுமணி தலைமையில் சீமானுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு கருங்கல்பாளையத்தில் நடந்தபோது கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் திராவிடம்-தமிழ்தேசிய சித்தாந்தங்கள் மோதுகின்றன. இதில் மாற்றத்திற்கான ஒரு புரட்சிகர விதை ஊன்றப்படும். நாட்டில் ஊழல், லஞ்சம் தேசியமயமாக்கப்பட்டுள்ளது. இதை ஒழிக்க ஒரு நேர்மையாளன் ஆட்சிக்கு வந்தால் போதுமானது. ஆனால் மலை, மணல் போன்ற இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டால், அவற்றை திரும்பக் கொண்டு வர முடியாது.
ரூ.8½ லட்சம் கோடி கடனாக பெற்ற தமிழகத்தில் எந்த நலத்திட்டமும் நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை, தரமான போக்குவரத்து, குடிநீர், சாலை வசதிகளை அரசால் வழங்க முடியவில்லை. அரசு தரமாக இல்லாததால், அரசின் சேவைகள் தரமானதாக இல்லை.
தாய்மார்களை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வைத்த ஆட்சி இது. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரும்போது இதனை ரூ.2000 வழங்குவதாகச் சொல்வார்கள். கடனை ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தி, நம்மை கடன்காரர்களாக்கி விடுவார்கள். 90 சதவீத குற்றங்கள் போதையின் காரணமாகவே நடைபெறுகின்றன. ஒருபுறம் போதைக்கு அடிமையாகாதீர்கள் என்று சொல்லி விட்டு, மது விற்பனை ஏன் குறைந்தது என்று ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் வெற்றி, தமிழகத்தின் அரசியல் வரலாற்றை மாற்றி எழுதும். எளிதானதை செய்யாமல் சரியானதைச் செய்யுங்கள். ஜெயிக்கிற பக்கம் நிற்காமல், நிற்கிற பக்கத்தை ஜெயிக்க வையுங்கள்.
இவர் அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை 2-வது நாளாக மரப்பாலம் பகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் சூரம்பட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி என்பது ஈரோடு மாநகராட்சி பகுதியை முழுவதும் உள்ளடக்கியதாகும்.
- 60 வார்டுகளில் 33 வார்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந் தேதி வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. ஈரோடு கிழக்கு தொகுதி என்பது ஈரோடு மாநகராட்சி பகுதியை முழுவதும் உள்ளடக்கியதாகும்.
ஈரோடு மாநகராட்சிகளில் 60 வார்டுகளில் 33 வார்டுகளை ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளடக்கியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ குழு அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகர் பகுதிக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி மிக முக்கிய பகுதியாக உள்ளது. இந்த வழியாக தான் சேலம், நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், சங்ககிரி, குமாரபாளையம், திருச்செங்கோடு, சென்னை போன்ற பகுதிகளுக்கு 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருவதால் இங்கு போலீசார், தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி தற்காலிகமாக பி.பி.அக்ரஹாரம் பகுதி, சம்பத் நகர், எல்லை மாரியம்மன் கோவில், மூல பட்டறை நால்ரோடு, கொல்லம்பாளையம், வீரப்பம்பாளையம், சூளை, கருங்கல்பாளையம் காந்தி சிலை உள்பட 12 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு துணை ராணுவ படையினர், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை இந்த பணியை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார்.
- அத்தியாவசிய பாதுகாப்பு பணிக்கு 18 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- துப்பாக்கிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என கடந்த 7-ந் தேதி அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கை களை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதில் முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் உரிமம் பெற்று தற்காப்பிற்காக வைத்துள்ள ஒற்றைக்குழல், இரட்டைக் குழல் துப்பாக்கிகள், ரைப்பிள், பிஸ்டல் போன்ற துப்பாக்கிகளை உரிமையாளர்கள் உடனடியாக போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதன் பேரில் இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்ற 286 துப்பாக்கிகள் உள்ளன. இதில் கருவூல பாதுகாப்பு, வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பாதுகாப்பு பணிக்கு 18 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 268 துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த துப்பாக்கிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் ஆனதும் உரிமையாளர்களிடம் மீண்டும் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இடைத்தேர்தல் வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது.
- வருகிற 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க போன்ற முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளதால் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் வரும் 5-ந் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கடந்த முறை போன்று இல்லாமல் இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் எந்த ஒரு பரபரப்பும் இன்றி காணப்படுகிறது. தி.மு.க.வினர், நாம் தமிழர் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க.வினர் அமைச்சர் முத்துசாமி தலைமையில் உள்ளூர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி தனது ஆதரவாளருடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். சமீபத்தில் சீமான் பெரியார் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தனர். அவரது வீட்டை முற்றுகையிட சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெரியார் குறித்து சர்ச்சை கருத்து க்களை தெரிவித்து வரும் சீமான் பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் பிரசாரம் செய்ய வரக்கூடாது என ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் தெரிவித்திருந்தன.
மேலும் அவர் மீது ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
அவரது பிரசாரத்தை தடுத்து நிறுத்துவோம் எனவும் அறிவித்திருந்தனர். இதனால் சீமான் பிரசாரம் செய்யும் இடங்களில் பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் சீமான் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வருகிறார். ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட குமலன்குட்டை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்.
அதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதைத்தொடர்ந்து நாளை முதல் வருகிற 3-ந் தேதி வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். காலையில் தெருமுனை கூட்டம், பிரசாரம் மேற்கொள்கிறார். மாலை பொதுக்கூட்ட ங்களில் பேசுகிறார்.
சீமான் பிரசாரம் செய்யும் இடங்கள், பொதுக்கூட்டங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் ஈரோடு வருகையையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சேவல்களின் கால்களில் கூறிய கத்தியை கட்டி பணம் வைத்து சூதாட்டம்.
- 10-க்கும் மேற்பட்ட சேவல்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு அருகே தொட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஒரு கும்பல் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஓட்டலில் 20 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சேவல் மெகா சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த கும்பல் சேவல்களின் கால்களில் கூறிய கத்தியை கட்டி பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது.
போலீசார் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அது கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சரவணன் (45), மூர்த்தி (44), சிவா (30), கருப்பண்ணன் (50), மணிகண்டன் (30), செந்தில் (50), ஸ்ரீ ஹரி (21), பழனிவேல் (38), கிருஷ்ணராஜ் (25), ஜெகதீஷ் (46), தங்கராஜ் (49), தனசேகரன் (45), குமார் (43), தமிழ் (21), சோமு (55), குகன் (35), செந்தில் ராஜா (41), நாகராஜன் (44), சுரேஷ்குமார் (38) மற்றும் ஓட்டல் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் என தெரிய வந்தது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 20 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட சேவல்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரூ.1.32 லட்சம் பணம், 32 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர்.
- ரூ.1.32 லட்சம் பணம், 32 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அருகே தொட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஒரு கும்பல் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஓட்டலில் 20 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சேவல் மெகா சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த கும்பல் சேவல்களின் கால்களில் கூறிய கத்தியை கட்டி பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது.
போலீசார் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அது கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சரவணன் (45), மூர்த்தி (44), சிவா (30), கருப்பண்ணன் (50), மணிகண்டன் (30), செந்தில் (50), ஸ்ரீ ஹரி (21), பழனிவேல் (38), கிருஷ்ணராஜ் (25), ஜெகதீஷ் (46), தங்கராஜ் (49), தனசேகரன் (45), குமார் (43), தமிழ் (21), சோமு (55), குகன் (35), செந்தில் ராஜா (41), நாகராஜன் (44), சுரேஷ்குமார் (38) மற்றும் ஓட்டல் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் என தெரிய வந்தது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 20 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட சேவல்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரூ.1.32 லட்சம் பணம், 32 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்கலோ, நிர்வாகிகளோ பிரசாரம் மேற்கொள்ள வரவில்லை.
- இதுவரை உள்ளூர் பிரமுகர்கள் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இறந்ததை தொடர்ந்து வரும் பிப்ரவரி 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த முறை போன்று காங்கிரஸ் கட்சியே இந்த முறையும் போட்டியிடும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென தி.மு.க. நேரடியாக களம் இறங்கியது.
2026-ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் கருதப்படுவதால் தி.மு.க. தலைமை காங்கிரஸ் தலைமையிடம் பேசி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்கியது. தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அ.தி.மு.க ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன.
இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று தி.மு.க-நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என 46 பேர் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் நிற்கின்றனர். இதில் தி.மு.க-நாம் தமிழர் கட்சி 2 மட்டும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகும். 4 சிறிய கட்சிகள், 40 சுயேட்சைகள் தற்போது தேர்தல் களத்தில் உள்ளனர்.
தி.மு.க.வினர் கடந்த 15-ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அமைச்சர் முத்துசாமி தலைமையில் வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை என 2 பிரிவாக பிரித்து ஒவ்வொரு வீடு வீடாக சென்று தி.மு.க. அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் உள்ளூர் கூட்டணி கட்சித் தலைவர்களும் உடன் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 33 வார்டுகள் அடங்கியுள்ளன. இதில் தற்போது வரை தி.மு.க.வினர் 20 வார்டுகளில் பிரசாரத்தை முடித்துள்ளனர். காலை 7 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் தி.மு.க.வினர் மதியம் 12 மணி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
பின்னர் தேர்தல் பணிமனைக்கு வந்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். அதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் தி.மு.க.வினர் இரவு 9 மணி வரை பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் போன்று எந்த ஒரு ஆரவாரமும் இன்றி, பரபரப்பும் இன்றியும் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இதுவரை உள்ளூர் பிரமுகர்கள் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிற அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்கலோ, நிர்வாகிகளோ பிரசாரம் மேற்கொள்ள வரவில்லை.
இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே அனுமதி இன்றி பிரசாரம்தான் மேற்கொண்டதாக சீதாலட்சுமி மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
சீதாலட்சுமி உடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர் 5 பேர் முதல் 8 பேர் வரை மட்டுமே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் ஈரோடு தேர்தல் களம் இந்த முறை களை இழந்து காணப்படுகிறது. நேற்று தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பிரசாரம் மேற்கொண்டார். அதுதவிர இன்று வரைக்கும் வேறு தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள வரவில்லை.

நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக அக்காட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொள்ள ஈரோடு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்போது வருகிறார் என தேதி முடிவாகவில்லை.
சமீபகாலமாக சீமான் பெரியார் குறித்து தெரிவிக்கும் கருத்து சர்ச்சை ஆகி வரும் நிலையில் அவருக்கு எதிராக ஈரோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் அவர் பிரசாரம் மேற்கொண்டால் அதை தடுத்து நிறுத்துவோம் என பல்வேறு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால் இனி வரக்கூடிய நாட்களில் ஈரோடு தேர்தல் களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வேட்பாளர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
- தபால் வாக்களிக்க 256 பேர் பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியானது. இதில் மொத்தம் 46 பேர் தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது வேட்பாளர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
இடைத்தேர்தர்லில் தபால் வாக்களிக்க 256 பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






